FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on February 29, 2012, 01:11:36 PM

Title: சில்மிஷக் காதல்!!!
Post by: Anu on February 29, 2012, 01:11:36 PM
எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு
 
*
அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்
என்றும்
உலராமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்

*

எத்தனை
கோபங்கள் இருந்தாலும்
அலை துரத்தி
விளையாடும்
சிறு நண்டை
போல்
உன்னையே துரத்தி
வருகிறது
என் இதயம்

*

நீ
அணிவித்த கொலுசுகளுக்கு
சொல்லிவை
நான் மட்டுமே
உச்சரிக்கும்
உன் பெயரை
ஊருக்கே உரக்க கேட்கும் படி
உச்சரிக்க வேண்டாம்
என!!!

*


உன் வருகை
இல்லாத நாட்களில்
அழுது ஆர்பாட்டம் செய்யும்
நம் காதல் குழந்தையை
எப்படிதான் சமாளிப்பதோ!!!!

*

உன்
பார்வைகள் தான்
கற்றுக் கொடுத்தன
என்
இமைகளுக்கும்
வெட்கப்படத்
தெரியும்
என்று!!!

*

நீ
முத்தம் கேட்டு
கொடுக்கவில்லை
என்றால்
திட்டி தீர்த்து விடுகின்றன
என் இதழ்கள்!!!


*

நம் காதல்
பிறந்த நாளை
கொண்டாட‌
உனக்காக‌
பரிசுப்பொருளை
தேடித் தேடி
வாங்கி வர‌
நீயோ
தேடல்களே
இல்லாமல்
எடுத்து
வருகிறாய்
உன் இதழ்களில்!

*

நாம்
ச‌ந்தித்த‌
இட‌ங்க‌ள்
எல்லாம்
பூஞ்சோலையாய்
பூத்துக் குலுங்குகின்றன
நம்
முத்த சார‌ல்க‌ளில்...

*

எனக்காக‌
கவிதை
எழுதிக்கொடு
என்று கேட்டதும்
அழகிய
கவிதைகளை
எழுதி விட்டு
சென்றன‌
உன் உதடுகள்


*

கடற்கரையில்
நம்மை
பார்த்ததும்
ஆசையாய்
பாதங்களை
ந‌னைக்க வந்த‌
அலைகளையும்
வெட்கம் கொள்ள செய்தன
நம் இதழ்கள்!

*

தூக்கத்தில்
நான் எப்போதும்
சிரித்துக் கொண்டிருப்பதாக‌
தோழிகள்
கேலி செய்கிறார்கள்
அவர்களுக்கு
எங்கேத் தெரியும்
நான் உன்னோடுதான்
சிரித்துக் கொண்டிருக்கிறேன்
என்பது

*
எத்தனை
முறை
சுவைத்தாலும்
திகட்டாத‌
தித்திப்பு
உன்
முத்தங்கள்

*

கோடையில்
எல்லோரும்
வாடிக் கொண்டிருக்க‌
நான்
ம‌ட்டும்
குளிர்ந்துக் கொண்டிருந்தேன்
உன்
முத்த மழையில்

*

Title: Re: சில்மிஷக் காதல்!!!
Post by: aasaiajiith on March 01, 2012, 06:09:51 AM
Arumaiyaaaana Varigall ANU !

Muththaththirkku Muththu Muththaai
idhaivida yaaraalum M(I)ugavurai  kodukkamudhiyadhu....

irundhum, un varigalukku badhilgall,
Vimarisanangalll ,varaadhadhu Varuththam dhan

Varuththaththin vaattaththil ,koorndhu yosiththen....

Varuththaththai niruttththa illaavittaalum
kuraikka vazhi kittiyadhu...

Naam ein badhil pOdakoodadhena ...
Naam nalinamaai num vimarisanam veliyiduvomey ena ....

Enn sittrarivukku ettiya varai, un, indha azhagu
Padhipirku badhil varaadhadharku kaaranam
Alavu..aam alavaai thaan irukkamudiuum...

idhey varigalai  pala paagangalaai piriththu
vevveru padhippukkalaai padhithirundhaal
paaraattu (muththa)  Mazhai pozhindhirukkum

appodhum en paaraattu (muththam) dhaan munnilai vagiththirukkum......