FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Global Angel on February 27, 2012, 12:02:33 AM

Title: உறுதி வேண்டும்
Post by: Global Angel on February 27, 2012, 12:02:33 AM
உறுதி வேண்டும்

 
எல்லா காலங்களிலும் மனிதனுக்கு எதிரி உண்டு, முதல் மனிதன் ஆதாமின் முதலிரண்டு பிள்ளைகளில் இளையவன் மீது மூத்தவனுக்கு பொறாமை, எதிரியாக நினைப்பவனை அழிக்க வேண்டுமென்று அன்று தொடங்கிய மனோநிலை வளர்ந்து பெருகியது. ஊருக்கு ஊர் எதிரி, மனிதனுக்கு மனிதன் எதிரி, நாட்டுக்கு நாடு எதிரி. அதனால் போர்க்களம், அழிவு என்பதும் இன்றுவரை தொடருகின்ற கதை. மனிதனால் உண்டாக்கப்பட்டது மதம் என்று சிலர் கூறுவதுண்டு. கிறிஸ்த்தவம் மனிதர்களால் உண்டாக்கப்படாமல் இறைவனால் உண்டானது, இதற்க்கான சான்றுகள் ஏராளம். இறைவனின் கட்டளைகளை பின்பற்றுபவர்களாக இருந்த பல அரசியல் தலைவர்கள், மன்னர்கள், ஆட்சியாளர்கள் எல்லாம் எதிரி என்று தாங்கள் கருதுபவரை அழிக்கவே செய்தனர் என்று வரலாறு கூறுகின்றது. இதற்க்கு அடிப்படையான காரணமாக கூறப்படுவது, தன்னை தாக்க வருகின்ற எதிரியை எதிரிட்டு தாக்கி அழிப்பது என்பது. இந்நிலையில் மனிதம் என்பதும் இறைவனின் கட்டளைகள் என்பதும் இல்லாமல் போகிறது.

இவ்வாறு அழிந்து போகின்றவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பது இறைவனின் சித்தமாகவும் இருந்திருக்கக்கூடும், அநியாயமாய் அழிக்கப்பட்டவர்களாகவும் இருந்திருக்கக்கூடும். எதிரிகளை அழித்து வெற்றிவாகை சூடியவர்களில் அவர்களின் வேறு எதிரிகளால் அழிக்கப்படவும் கூடும். கிறிஸ்த்தவ வேதாகமத்தில் உள்ளது போன்று இறைவனுக்கு கீழ்படியாத மக்களை இறைவன் போர்களின் மூலமாகவும் வாதை நோய்களின் மூலமாகவும் பஞ்சம் பட்டினி போன்ற கொடுமைகளாலும் அழித்திருப்பதை காணமுடிகிறது. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு அவருடன் இருந்தவர்கள் கேட்ட கேள்விக்கு அதாவது, உலகத்தில் கொடுமையான காரியங்களை செய்து வருகின்றவர்களை ஏன் இன்னும் அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறீர்கள், கெட்டவர்களால் நல்லவர்களுக்கு பெரும் தொல்லைகளும் வியாகுலமும் வேதனைகளும் உண்டாக்கப்படுகிறதே' என்று கேட்கின்றனர். அதற்க்கு இயேசு 'வயலில் நெற்பயிருடன் களைகளும் செழித்து வளருவதைப்போல கொடுமையானவர்கள் பூமியில் செழித்து வளரட்டும், இறுதியில் அறுவடையின் போது நெற்கதிர்களை சேமித்து களைகளை அழித்துபோடுவது போன்று கொடியவர்கள் இறுதியில் அழிக்கப்படுவார்கள்' என்று அழகான உதாரணத்துடன் அவர்களிடம் விளக்குகின்றார்.

கொடியவர்கள் செழித்து வளருவதைக் கண்டு நாம் அதிசயிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒன்றுக்கும் உதவாத களைகளாக இறுதி அறுவடையில் சுட்டெரிக்கப்படுவது உறுதி. கொடியவரிடம் நியாயத்தைப்பற்றியோ, நீதியை பற்றியோ நேர்மையை பற்றியோ எடுத்து சொல்வதனால் ஒரு பயனும் கிடையாது, செவிடன் காதில் சங்கு ஊதுவதை போன்று வீண் முயற்சி. ஆட்டு மந்தைகள் ஆயிரம் இருந்தாலும் அதனதன் மேய்ப்பனின் குரலை ஆடுகள் அறியும். எந்த மந்தையை சேர்த்த ஆடோ அது அந்த மந்தைக்கு தானே சென்று சேர்ந்து கொள்ளும். அதைப்போலவே பூமியில் பிறக்கின்ற மனிதர்களில் யார் யார் எதனுடன் இணைக்கப்பட வேண்டுமோ அதனுடன் எப்படியாவது சென்று சேர்ந்துவிடுவார்கள். அதனால் 'அவன் அக்கிரமம் செய்கிறான் இருந்ததும் அவன் நன்றாக செழிப்புடன் வாழ்கிறான், நானோ நேர்மையாய் நீதியை கடை பிடித்தும் மிகவும் துன்பப்படுகிறேனே' என்று வருந்த வேண்டிய அவசியம் இல்லை.

தூய்மையான மனதும் நேர்மையான, உண்மையான வாழ்க்கையும் நிச்சயம் ஆன்மாவை உயர்நிலை அடையச் செய்யும் என்பது உறுதி. இடையிலே உண்டாகின்ற துன்பங்களை கண்டு துவண்டு விடாமல் உறுதியாக அதிலேயே தொடர்ந்து வாழ்க்கையை மேற்கொள்வது என்பது அவசியம்