FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on February 26, 2012, 04:19:12 AM

Title: பூஜியத்தினுள்ளே......
Post by: Global Angel on February 26, 2012, 04:19:12 AM
பூஜியத்தினுள்ளே......  

ஒன்றில் கண்டேன்
சுகம்
இரண்டில் பசி
மூன்றில் பாசம்
நான்கில் பேச்சு
ஐந்தில் அறிவு

ஆறில் நட்பு
ஏழில் அன்பு [இறைவன்]
எட்டில் வறுமை
ஒன்பதில் முயற்சி
பத்தில் கண்டேன்
உறவுகளை
பதினொன்றில் கண்டேன்
விரோதிகளை
பனிரெண்டில் கண்டேன்
சோகங்களை
பதிமூன்றில் கண்டேன்
உழைப்பை
பதினான்கில் கண்டேன்
உணர்வுகளை
பதினைந்தில் கண்டேன்
கன்று காதலை
பதினாறில் கண்டேன்
படிப்பின் மேன்மையை

வறுமையும் படிப்பும்
இரு கரம் நீட்ட
இளமையில்
காதல் மறந்தே
போனது
காலம் கடந்த
பின்னே
தொடர்ந்த காதல்
இருட்டில் தொலைத்த
பணம்போல
காணாமல் போனது

திருமண தொடர்கதைக்கு
நாயகியாய்
புதிய உறவுகளின்
உரசல்கள் இடையே
நுழைந்த
புது முககுழந்தைகள்
வாழ்க்கை வண்டி
நான்கு சக்கரமாய்
பயணம் தொடர.......


திரும்பி பார்க்கிறேன்
பூஜியத்தினுள்ளே.....
வெறுமையாய்.......
'நான்' என்றோ
தொலைந்துப்போனேன் .....



padithathil pidithathu  ;)
Title: Re: பூஜியத்தினுள்ளே......
Post by: thamilan on February 26, 2012, 09:05:36 AM
ஒரு வ‌ய‌தில் என்ன‌ சுக‌ம் க‌ண்டீர்க‌ள் ஏஜ்ச‌ல்?
என‌க்கும் கொஞ்ச‌ம் சொல்லுங்க‌ளேன். ஒரு வ‌ய‌தில் நான் என்ன‌ ப‌ண்ணினேன் என்று எனக்கு நினைவில்லை. உங்க‌ளுக்கு ச‌ரி நினைவிருக்கிற‌தே.
ச‌ரி ச‌ரி. க‌விதை என்றாலே க‌ற்ப‌னை தானே த‌மிழ‌ன்.
இதை எல்லாம் க‌ண்டுக்காத‌.

நல்ல‌ க‌விதை ஏஞ்ச‌ல்.
Title: Re: பூஜியத்தினுள்ளே......
Post by: Global Angel on February 26, 2012, 07:53:55 PM
தாயின் அரவணைப்பு பிள்ளைக்கு நோகுமே என்று எல்லாரும் பஞ்சை போலதானே கவனமா மேன்ம்யாக தூகுவங்க .... அந்த சுகம் கிடைத்திருக்கும் தானே
Title: Re: பூஜியத்தினுள்ளே......
Post by: RemO on February 27, 2012, 03:34:50 AM
Kavithai eluthiyathu oru ponu pola. 16 vayasuku mela pogala. Kavithai nice ammuni.
Title: Re: பூஜியத்தினுள்ளே......
Post by: ஸ்ருதி on February 27, 2012, 11:29:51 PM
superbbbbbbb <3
Title: Re: பூஜியத்தினுள்ளே......
Post by: Dharshini on February 27, 2012, 11:43:57 PM
mutta ena kandatha kall vettula pathichi vaidi mothala goyala
Title: Re: பூஜியத்தினுள்ளே......
Post by: Global Angel on March 01, 2012, 02:41:46 AM
mutta un muthukila pathichiduve jakratha >:( ;D