FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 22, 2017, 06:59:30 PM
-
கவிதை
நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடு
நாம் காணும் காட்சிகளின் நிழல்படம்
நம் எண்ணங்களின் எழுத்து வடிவம்
நானும் கவிதை எழுதினேன்
என்பதை விட
நானே எழுதினேன்
என்பதில் தான் பெருமை
எத்தனை கவிதை வெளியிட்டேன்
என்பதை விட
ஒரு கவிதை எழுதினாலும்
அதை நானே எழுதினேன்
என்பது தான் பெருமை
மற்றவர் எண்ணங்களில்
அவர் கை வண்ணங்களில்
உருவானதை சுட்டு
நம் பெயரில் எழுதுவதும்
மற்றவர் சொத்தை
கொள்ளையடிப்ப்பதும் ஒன்று தான்
மாற்றான் தாய்
தாய் என்றாலும் அவள்
நம்மை பெற்ற தாய் ஆகிவிட மாட்டாள்
எல்லா பிள்ளைகளும்
பிள்ளைகள் தான்
நாம் சுமந்து பெற்ற பிள்ளைகளே
நம் பிள்ளைகள் ஆவார்கள்
அந்த பிள்ளை
கருப்போ சிவப்போ
அழகோ அவலட்சணமோ
அது என் பிள்ளை என்ற
பெருமை நமக்கு
கவிதையும் அப்படித்தான்
பக்கம் பக்கமாக
மற்றவர் கவிதைகளை
சுட்டு நிரப்புவதை விட
சொந்தமாக சிந்தித்து
ஒரு கவிதை எழுதுங்கள்
அது உங்கள் பேர் சொல்லும்
-
Thamilan sago,
Maatran thottathu malligai
Enum thalaippu kandu
Thamilan kooda etho
Kadhal kavithai punaivaro
Enrenni emanthu bitten
Vidungal sagothara
Kalavaadum unavukku
Ruchi athigam
Tamizh tharam kollamal
Thalai. Nimirattum
Ungal matrumoru sirantha
Kavithaikku kathirukkindren
Ungal kavithai nadaikku
Naanum oru rasigan
-
தமிழன் கவிதைக்கு நல்ல வரைவிலக்கணம் கொடுத்துள்ளீர்கள்.
நமது குழந்தை என்று சொல்லும்போது எவ்வளவு பெருமையோ அதேபோல்தான்
எனது கவிதை என்று சொல்வதும். மாற்றான் தோட்டத்தில் மலரும் மல்லிகையை மணக்கலாம் .. ஆனால் பறிக்காமல் ரசித்தால் நன்று.
-
உண்மை தான் நண்பா
கவிதை மட்டும் இல்லை ஒருத்தன் நன் திறமையை தான் உருவாகும் எந்த விடயமும்
அவன் பெற்ற குழந்தை தான்
மற்றவர் கற்பனை திருடுவந்து குற்றம் தான்