FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: suthar on February 25, 2012, 12:37:54 AM
-
முதன் முறையாக வரலாற்றை எனது பாணியில் சொல்லி இருக்கிறேன் தவறு இருப்பின் மன்னிக்கவும்
அரிசுமந்த் பானு பேகம்
அழகே தெளிவானவள்
அன்பே உருவானவள்
இளமையை ஒருங்கே பெற்றவள்
எத்தனை பேருக்கு தெரியும் ?
அவள் தாஜ்மஹாலின் நிஜம்
ஆம் அவளேதான்
மும்தாஜ் தான்
அந்த பேரழகி...
இவள் ஷாஜஹானின்
மூன்றாவது மனைவி
காதல் மனைவியாம்
இப்படி கூறுவது தகுமா....?
ஒருவர் மீது வந்தால் காதல்
பலர் மீது வந்தால் அது வேறு .....
19 வயதில் தொடங்கி 38 க்குள்
13 பிள்ளைகள்
14 வது பிரசவம் உடல் நலிவுற்று
மாண்டே போனாள்....
அவளின் 19 வருட வாழ்க்கையில்
இளமையை சூறையாடிய கயவன்
பிள்ளை பெரும்
இயந்திரமாக்கிய கொடியவன்
இடைவெளி இல்லா
இயந்திரத்திற்கு அமைத்த நினைவு சின்னம்
அது காதல் சின்னம் என்றால் தவறு
அது அன்பின் புகலிடம்
தாய்மையின் வசிப்பிடம்
இளமையை தொலைத்திட்டவளின் இருப்பிடம்....
-
ஒருவர் மீது வந்தால் காதல்
பலர் மீது வந்தால் அது வேறு
mutrilum unmaiyana varigal suthar ithu kaathal sinam endru solvathu migavum thavaru
அவளின் 19 வருட வாழ்க்கையில்
இளமையை சூறையாடிய கயவன்
பிள்ளை பெரும்
இயந்திரமாக்கிய கொடியவன்
andrilirunthe pengalai iyanthiramaki vitarkal antha kayavanuku avan magan kodutha thandanai sariye than
romba arumaiyana and mutrilum unmaiyana varigal vazhthukal inum ithu pol elutha vazhthukiren
-
iyandhira maagi vitta vaazhkai soozhalil
iyandhira pinnanai kondu punaintha
kavithaiku
nandri paaratiya sagothariku nandri
-
தாஜ்மகால் கல்லறை .... அழகாக அமைக்கபட்ட அதி செலவு வாய்ந்த அரக்கன் ஒருவனால் கட்டபட்டது .... ஏனென்றால் அத்ஹை வடிவமைத்த போறியலாளர்கள் கை அமைத்து முடிந்ததும் துண்டிக்கபடதாம் ....
-
சுதர்சன்
தாஜ்மகால் ஒரு காதலில் சன்னிதி இல்லை. அது ஒரு சமாதி.
நல்ல விசயத்தை சொல்லி இருக்கிறீர்கள். நமக்கு மட்டுமே காதல் என்பது ஒரு முறை மலர்வது. ராஜாக்களுக்கு அது விதிவிலக்கு. இந்த காலத்திலும் நிறைய ராஜாக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.காதல் மன்னர்கள்.தாஜ்மகாலுக்கு புது வடிவம் கொடுத்திருக்கிறீர்கள். அழகாக இருக்கிறது.
-
இந்த காலத்திலும் நிறைய ராஜாக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
thamilan ;D ;D