FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on July 21, 2011, 05:55:12 AM
-
நன்றிக் கடன்
ஒவ்வொரு நாளும்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்
"இறைவா நன்றி"
"இறைவா நன்றி"
என்று
இது எனக்கு
தரப்பட்ட
தண்டனையல்ல
உனை எனக்குதந்த
அவனுக்கு நான் செய்யும்
நன்றிக்கடன்.