FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 05, 2017, 11:11:27 PM

Title: ~ சிக்கன் நெய்சோறு ~
Post by: MysteRy on July 05, 2017, 11:11:27 PM
சிக்கன் நெய்சோறு

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2017%2F07%2F%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%2581chicken-nei-soru-in-tamil.jpg&hash=d6a1239936757fbeb7ee095ed9ecf58931b398e2)

தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1/2 கிலோ
பாசுமதி அரிசி – 1/2 கிலோ
மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவைக்கு ஏற்ப
எலுமிச்சைபழம் – அரை மூடி
பச்சைமிளகாய் – 10
வெங்காயம் – கால் கிலோ
தக்காளி – 3
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 10 பல்
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
பட்டை – சிறிது
புதினா – கால் கட்டு
கொத்தமல்லி இலை – கால் கட்டு
முந்திரிப்பருப்பு – 10
தேங்காய் – அரை மூடி
நெய் – 100 கிராம்


செய்முறை :

* அரிசியை நன்கு கழுவி அதனுடன் 1 1/2 மடங்கு நீர் ஊற்றி குழையாமல் வேகவைத்து கொள்ளவும். இதனை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆறவைக்கவும்.

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.

* தேங்காயை விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி முந்திரிப்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துத் தனியே வைக்கவும்.

* அடுத்து வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்துக் பொன்னிறமாக வதக்கவும். அதில் பாதியை எடுத்து தனியாக வைக்கவும்.

* வதக்கிய வெங்காயத்துடன் தட்டி வைத்த இஞ்சி, பூண்டை சேர்த்து போட்டு வதக்கி, வாசனை வரும் போது மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

* அடுத்து அதில் தக்காளி கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி, கடைசியில் தேங்காய் விழுதைச் சேர்த்து சிக்கனை மிதமான தணலில் வேக வைக்கவும். அதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

* சிக்கன் கறி நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும், எலுமிச்சை பழத்தைப் பிழிந்து விடவும்.

* பிறகு கொத்தமல்லி, புதினாவைத் தூவவும்.

* அடுத்து அதில் ஆற வைத்திருக்கும் சாதத்தில் வதக்கிய கறி மசாலாவைக் கொட்டி நன்கு கிளறவும்.

* கடைசியில் வறுத்த முந்திரிப்பருப்பு, வெங்காயத்தையும், நெய்யையும் சேர்த்து கிளறிப் பரிமாறவும்.