FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on February 21, 2012, 07:35:58 PM
-
பூக்களுக்குள்ளும்
பறவைகளுக்குள்ளும்
பூமியில் தோன்றும்
புதுப் புது உயிர்களுக்குள்ளும்
பகிரப்படும் பண்பு நிறை காதல்
பேசும் மொழி புரியாததால்
மனிதர் மனம் அறியவில்லை...!
கண் மூடி மவுனத்தை
கவிஞன் மனம் கவிதையாக்கும்...
காதல் அர்த்தம் அதற்குத் தெரியும்
காவியங்கள் படைத்து நிற்கும்....!
பிரிந்து உருவாக்கும்
புழுக்களுக்குள்ளும்
புனித காதல் ஒளிந்திருக்கும்.....
தன்னைத் தான் உணர்ந்து கொள்வதும்....
தங்கமான காதல் தோழி...!
-
ஒவ்வொரு உயிருக்குள்ளும் காதல் உள்ளது!
காதல் இல்லாத உயிர் ஏதும் உண்டோ?
இப்புவியிலே...!
நல்ல கவிதை காதலை பற்றி ஜாவா!
தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்!
-
nala kavithai jawa
-
Nice one Jawa
rasikum padiya iruku
-
காதலை சொல்லும் நல்ல காதல் கவிதை ஜவா ..... நல்ல காதல் சொட்டும் இனிய கவி வரிகள்