FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on June 02, 2017, 11:46:26 PM

Title: அடையாளங்கள்
Post by: NiYa on June 02, 2017, 11:46:26 PM
அடையாளங்கள்

நீ நீயாய்
சுயமாயிருப்பதிலும்
என்னை நானாய்
ஏற்பதில்
தோற்றுப் போயிருக்கிறாய்.

காரணம்
நீ
நிஜங்களிலிருந்து பிறந்த
மாயைகளுள்  மூழ்கியும்
போலிகளுள் புதையுண்டும்
போயிருக்கிறாய்
உணர்வுகளை விடவும்
அதிகமாய்
உருவங்களை நேசிக்கிறாய்

வேஷங்களுள் இருந்து
வெளிப்படும் வரையில்
நாம் நாமாயிருப்பது  என்பது
உனக்கு வேடிக்கையாயிருக்கலாம்
ஆனால் என்றோ ஒருநாள்
போலி உருத்தொலைந்து
வேஷங்கள் கலைந்து போக
நீ நீயாவே  மட்டும்

மீதப்படுவாய்
அப்போதாவது
என்னை நானாக உணர்ந்துபார் 
 
 
Title: Re: அடையாளங்கள்
Post by: SwarNa on June 06, 2017, 03:58:16 PM
என்னை நானாய்
ஏற்பதில்
தோற்றுப் போயிருக்கிறாய்.


arumai niya .menmelum ungal kavithaikalai vaasika aavaludan kaathukondirukiren :)
vaazthukal
Title: Re: அடையாளங்கள்
Post by: ChuMMa on June 06, 2017, 05:56:58 PM
நீ நீயாய்
சுயமாயிருப்பதிலும்
என்னை நானாய்
ஏற்பதில்
தோற்றுப் போயிருக்கிறாய்.

சகோ

நம் கருத்தை மற்றவரின் மனதில் திணிப்பதில் தானே
நம் அன்றாட வாழ்க்கை சுற்றுகிறது

புரிந்தும் புரியாமல் சுற்றி கொண்டிருக்கிறோம்

சுயம் அறியும் நாள் சுற்றாது இருப்போம் நாம்

வாழ்த்துக்கள்
Title: Re: அடையாளங்கள்
Post by: AYaNa on June 06, 2017, 06:46:25 PM
 >:(
உணர்வுகளை விடவும்
அதிகமாய்
உருவங்களை நேசிக்கிறாய்

உண்மையான வரிகள்
 :-[ :-[ :-[