FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on May 29, 2017, 09:33:01 PM

Title: மனித உரிமை மீறல்
Post by: NiYa on May 29, 2017, 09:33:01 PM
மனித உரிமை மீறல்

வலி அறிய பிஞ்சு
குழந்தைகளும்
நோவறியாத
மலர் சிட்டுகளும்
வெயிலிலும் மழையிலும்
பனியிலும்
பரிதவித்து வாடியதை
பரிவு கொண்ட மனதோரே
நீங்கள்  ஏற்பீர்களோ ?

வயோதிப காலத்தில் கூட
நிம்மதியாக வீட்டில்
உறங்காமல்
நிம்மதியற்று
காட்டிலும் மேட்டிலும்
வெயிலிலும் உடல்
பரிதவிப்பதை
பரிவுகொண்ட மனதோரே
நீங்கள்  ஏற்பீர்களோ ?

கை இழந்து
கால் இழந்து
கணவனை இழந்து
கைம்பெண்களும்
கர்பிணிப்பெண்களும்
கண்ணீர் சொரிவதை
எட்டி நின்று
பார்த்தவர்கள் மனித
உரிமை மீறலை
ஏற்பீர்களா ?

உள்ளம் வெதும்பி
உடல் கருகி
மனம் இழந்து
உருக்குலைந்து போனதை
உணர்ந்து மனித உரிமை
மீறலை ஏற்பீர்களா
சொல்லுங்கள்?
Title: Re: மனித உரிமை மீறல்
Post by: SunRisE on May 29, 2017, 10:56:22 PM
Niya,

Ungal vethanai purigirathu
Ellam sariyaga iraivanidam pirarthippom
Title: Re: மனித உரிமை மீறல்
Post by: ரித்திகா on May 31, 2017, 09:40:05 AM
(https://s21.postimg.org/4c4g3ko07/NIYA.jpg)
Title: Re: மனித உரிமை மீறல்
Post by: NiYa on May 31, 2017, 12:06:43 PM
nanri nanbi,
vidiyal pirakum enra nambikaiyil
 inum inku valthu konirukirom
nadamadum pinakalaka  :(
Title: Re: மனித உரிமை மீறல்
Post by: SarithaN on May 31, 2017, 10:52:21 PM
வணக்கம் தங்கச்சி

கேட்ப்பார் யாருமில்லா
இனத்தில் பிறந்தால்
சுற்றியுள்ள தேசமெல்லாம்
நமக்கு எதிராகவே இருந்தால்

நமக்கு நீதி கிடைத்தால்
கையில் அதிகாரம் கிடைத்தால்
நம்மிடம் இருந்து தமக்கான லாபம்
கிட்டாதென அறிந்தால்

உலகம் முழுமையும் நீ சொல்லிய
உண்மைகளை பொய்யெனவே சொல்வர்
இதுவே இன்றைய உலக நீதி
கடவுளை அல்லால் நமைகாக்க யாருமில்லை பாரில்

அன்புலகு மலரட்டும்
நன்றி நீயாமா
Title: Re: மனித உரிமை மீறல்
Post by: ராம் on June 01, 2017, 07:03:04 AM
nice niya.....