FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 19, 2012, 07:47:02 PM
-
வார்த்தைக்கு வார்த்தைக்கு
பாசத்தை தந்தாய்
வேஷமாய் பாசம் காட்டும்
உலகில்
நேச கரம் நீட்டி
தவித்திருக்கையில்
நேசத்தை தந்து
கை பிடிக்கும் தருணத்தில்
கை உதறி போனாயே...
என்னை சுற்றி பலபேர் இருக்க
நான் மட்டும் அனாதையாய் இன்று...
புரியாத பாசம் பிரிந்த போதும் புரியுமாம்
பிரிந்து இருக்கிறேன்
புரிவாய் என்று நம்பிக்கையில்...
சொல் அடி தாங்கும் சக்தி எனகில்லை
சொற்களால் இனியும் கொன்றுவிடதே...
நட்புக்குள் பொய்யில்லை
பொய்யிருந்தால் அது நட்பே இல்லை....
நட்பே என்றும் நட்பாய் இரு....
-
நட்புக்குள் பொய்யில்லை
பொய்யிருந்தால் அது நட்பே இல்லை....
நட்பே என்றும் நட்பாய் இரு....
arumaiyana varigal natpukul poi irukathu endrume natpum poiyaga irukathu natupu vanthu seyra en vazhthukal
என்னை சுற்றி பலபேர் இருக்க
நான் மட்டும் அனாதையாய் இன்று...
natpu irukum varai yarum aanathai illai
-
நட்பின் பிரிவை பற்றிய உணர்ச்சி பூர்வமான வரிகளுடன் அமைந்த கவிதை சகோதரி ஸ்ருதி!
நல்ல கவிதை!