ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 147
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F147.png&hash=c73fdbefee3a2f68e015b109149c8343e07fa1b0)
தனியே மழையில் நனைந்தபடியே
நான் நடந்து கொண்டிருக்கையில்
என்னை தொட்ட மழைத்துளிகளெல்லாம்
என்னவனின் வரவை உணர்த்தியது
குடையுடன் அருகில் வந்த நீ
என் தனிமையை போக்கி
உன் நினைவுகளை என்னுள் நிரப்பி
எனக்கே என்னை அறிமுகம் செய்தாய்
நான் அறியும் முன்பே
என்னை கொள்ளை கொண்டாய்
அறிந்து தெளிந்து காண்கையில்
என்னுள் முழுவதுமாய் குடிகொண்டாய்
ரகசியமாய் என் இதயத்தில்
நீ போட்டு சென்ற காதல்
பூட்டினை தினமும் நான்
ஓயாமல் தேடி அலைகின்றேன்
எங்கே அது எனக்கு முன் பிறர்
கையில் கிடைத்துவிட்டால்.. என்னை
கொள்ளை கொண்ட இதயத்தினை
பிறர் கொள்ளையிடாதிருக்க !!
உன் இதய சிறையில்
ஆயுள் கைதியாகும்
வரம் கேட்கிறேன்
தருவாயா ??
இப்படிக்கு உன் அழகிய நினைவுகளுடன்
என்றென்றும் மைனா தமிழ் பிரியை