FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on May 14, 2017, 10:19:52 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 147
Post by: Forum on May 14, 2017, 10:19:52 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 147
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F147.png&hash=c73fdbefee3a2f68e015b109149c8343e07fa1b0)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 147
Post by: SwarNa on May 14, 2017, 11:55:57 AM
காதல்
நினைக்கையில் இதழோரம்
 அரும்பிட்ட புன்னகை
காதலை காதலிக்க
வைத்தவனும் என்னவனே

பயணங்களில் தோள் சாய்ந்து செல்ல ,
அடவியின் அடர்ந்த மரங்களினூடே
கை கோர்த்து நடந்திட ,
அமைதி ததும்பும் இடங்கள் 
அனைத்துமே நம் சொர்க்கபுரியாகிட
காணும் இடமெல்லாம்
நம்மைக் காண்கிறேன்

அழகான காதலும் இன்பமாய்
உன் அரவணைப்பில்
தொடர்ந்திட ஆசை

கரடுமுரடான வாழ்க்கைப்பாதையும்
சுலபமாய் கடந்திட
அன்புமழையில் நாம் நனைந்திட ஆசை

நம் குறைகள் நமை தாக்காமல்
          நம் அன்பே
       குடையாய் மாறி
காக்கட்டும் நம் காதலை   <3 <3 <3
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 147
Post by: thamilan on May 14, 2017, 12:03:49 PM
இதயங்கள் இன்ப மழையில்
நனைந்திடும் போது குடை எததற்கு
மனமது காதலில்
மயங்கிக் கிடக்கும் போது
மழையும் தெரியாது வெயிலும் புரியாது

 காதல் நம் வசமில்லை
நாம் காதல் வசப்படுகிறோம்
காதல் வா என்றால் வருவதில்லை
போ   என்றால் போவதில்லை

காதல் ஒரு நெருப்பு
பச்சையாக இருக்கும் மனிதன்
காதல் நெருப்பில்
பதப்படுத்தப்படுகிறான்
காதல் நெருப்பில்
அழுக்கான மனிதன்
புடம் போடப்பட்டு தூய்மையாகிறான் 

இரு இதயங்களை இணைத்திடும்
காந்தக் கயிறு காதல்
காதல் கந்தக நதியல்ல
அது ஜீவநதி
இந்த நதிக்கரை நாகரிகத்தின்
அகரம் ஆதாம்
அவன் கைப்பற்றிய
சிகரம் ஏவாள்

இரு உயிர்களும்
ஒரு கனியை பிடுங்கித் தின்ன
வெட்கம் பிடுங்கி தின்றது
இலைகள் ஆடைகளாயின
இது காதலுக்கு பைபிள் போட்ட
பிள்ளையார் சுழி…….

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 147
Post by: இணையத்தமிழன் on May 14, 2017, 02:57:22 PM
இருகூட்டில் வாழ்ந்திடும் இருஇதயமும்
பல்லிளிக்கும் பங்குனி வெயிலிலே 
ஒருசேர ஒரு குடைக்குள் மறைந்துகிடந்தது
உலகின் இரண்டாம் நீண்ட கடற்கரையாம்
மெரினாவில்

நேற்று பெய்த மழையில் முளைத்த
காளான் போல 
அடிக்கு ஒரு குடையாய்
காதலர்கள் என்று சொல்லி லயித்திருக்க
சுற்றமும் சுற்றிலும் மறந்து
கணநேரமும் வீணடிக்காமல்
காரியமே கண்ணாய் ஜோடிகள் கிடக்க

அங்கே  மடியிலே கிடப்பவனுக்கோ
மடியைவிட்டு எழ மனதுமில்லை
முகங்கள் எங்கோ புதைந்திருக்க 
கைகள் மட்டுமே பேசிக்கொள்ள
தேவைகள் மட்டுமே நிறைந்த அந்த உறவு
அங்கே காதலெனும் முகமூடி அணிந்து

காதல் அங்கும் மலர்ந்துகொண்டு இருந்தது
மண்ணில் கிடந்த மீன் துண்டை
பகிர்ந்துண்ட காக்கைகளுக்கிடையே
                                              - இணையத்தமிழன்
                                                 மணிகண்டன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 147
Post by: MyNa on May 14, 2017, 04:57:27 PM
தனியே மழையில் நனைந்தபடியே
நான் நடந்து கொண்டிருக்கையில்
என்னை தொட்ட மழைத்துளிகளெல்லாம்
என்னவனின் வரவை உணர்த்தியது

குடையுடன் அருகில் வந்த நீ
என் தனிமையை போக்கி
உன் நினைவுகளை என்னுள் நிரப்பி
எனக்கே என்னை அறிமுகம் செய்தாய்

நான் அறியும் முன்பே
என்னை கொள்ளை கொண்டாய்
அறிந்து தெளிந்து காண்கையில்
என்னுள் முழுவதுமாய் குடிகொண்டாய் 

ரகசியமாய் என் இதயத்தில்
நீ போட்டு சென்ற காதல்
பூட்டினை தினமும் நான்
ஓயாமல் தேடி அலைகின்றேன்

எங்கே அது எனக்கு முன் பிறர்
கையில் கிடைத்துவிட்டால்.. என்னை
கொள்ளை கொண்ட இதயத்தினை
பிறர் கொள்ளையிடாதிருக்க !!

உன் இதய சிறையில்
ஆயுள் கைதியாகும்
வரம் கேட்கிறேன்
தருவாயா ??

இப்படிக்கு உன் அழகிய நினைவுகளுடன்
என்றென்றும் மைனா தமிழ் பிரியை
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 147
Post by: DeepaLi on May 14, 2017, 07:32:17 PM
காதல் நம் இரு இதயங்கள்
பேசும் மவுன  மொழி..

ஆயிரம் பூக்கள் புன்னகைப்புடன்..
அறிமுகம் ஆனது நம் முதல் சந்திப்பு..

கற்பனை செய்ய இயலாத..
வாழ்க்கை ஒன்றை..
இதயம் முழுதும் நிரப்பி இருந்தோம்..

காயப்படுத்த பலர் இருந்தும்..
மருந்தாக நம் காதல் இருந்ததால்..
நம் வாழ்க்கை அடுத்த கட்டத்தை..
நோக்கி பயணிக்கிறது..

என் மறு பாதியே..
உன்னுடன் நான் இருக்கும் போதெல்லாம்..
நான் வாழும் உலகத்தை  மறந்து..
பெயர் தெரியா புது உலகில்..
குடி பெயர்ந்தேனடா நம் காதலுக்காக..

உயிர் இருக்கும் வரை..
நம் காதல் வாழ வேண்டும் என்பதில்லை..
நம் காதல் வாழும் வரை..
நமது உயிர் இருந்தாலே போதும்...

நம் காதலில் உனக்கும் எனக்கும்..
இருக்கும் இடைவெளியை..
கவிதைகள் இட்டு..
நிரப்பி கொண்டிருக்கிறேன்..

மணல் சுமக்கும் கடற்கரை
இந்த கன்னம் சுமக்கும் கை விரல்
நினைவுகள் சுமக்கும் நம் இதயம்
என மெல்ல நீள்கிறது நம் அழகிய காதல்..

நம் கையில் இருக்கும் குடை..
மழைக்காகவோ வெயிலுக்காகவோ இல்லை..
நம் வெட்கத்தை மறைப்பதற்காக..

காலம் சென்றாலும்..
கனவுகள் மறைந்தாலும்..
கவிதைகள் அழிந்தாலும்..
என் உயிர் பிரிந்தாலும்..
காற்றோடு தொடர்ந்து வாழ்கிறோம்..
நம் காதலுக்காக..

மரணமே வந்தாலும்..
நம் காதலை மறக்காத இதயம் வேண்டும்..
உறவாக மட்டும் அல்ல..
என்றும் என் உயிர் காதலாக..


Deepali :)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 147
Post by: VipurThi on May 14, 2017, 10:01:14 PM
பிறக்கும் போது எனக்காய்
துடித்த என் இதயம்
இன்று உனக்கும் சேர்த்து
துடிப்பது ஏனோ

தனிமையை தேடிய நானோ
இன்று உன் துணை
நாடுவதும்  ஏனோ

இத்தனை மாற்றங்களும் என்னுளே
உன்னை கண்ட பின்பே
காரணம் ஏன் என்றால்
காதல் என்று சொல்கிறதே

நண்பன் எனும் பேர் கொண்டு
வந்தவனே என்னுள் எப்போது
என்னவன் ஆனாய்
வியக்கிறேன் நான்

உன்னுள் எனக்கான தேடல்
எதுவென தெரியவில்லையே
ஆனால் உன் அலை பாயும்
விழிகளோ ஆயிரம்
கதைகளை சொல்கிறதே

இரு இதயமும் கை கோர்த்திடவே
காத்திருப்பேனே உன்
மார்பில் சாய்ந்து
கண் மூடவே...

               
         **விபு**

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 147
Post by: SunRisE on May 15, 2017, 04:37:06 AM
நம் காதல்
ஒரு கவிதையே

அழகிய வனம்
ஆடவரும் பெண்டிரும்
உலா வரும் நேரம்

ஏழு வண்ணங்கள் வானில்
மனத்திற்கினிய மண்வாசனை
கைகளில் எந்த காத்திருக்கும்
மழை துளிகள்

என்னவள் நீ
குடைக்குள் சாரலாய்
என் முன்னே
நனைந்தும் நனையாமல் நான்
ஒற்றைப்பார்வையில்
என் உள்ளத்தில்
மின்னல் வெட்டினால்

என்னையும் அறியாமல்
உன் பின்னே சென்றன
என் கால்கள்
கால்கள் மட்டுமல்ல
என் இதயமும் தான்

அவிழ்த்துவிட்ட கூந்தலை
ஒரு விரலில் பிடித்து
ஒரு கண்ணில் சலனம் இல்லாமல்
மற்றொரு கண்ணில்
ஜாடை பேசினாய்

இருவரும் குடைக்குள்
இணைந்தோம்
என மனக்குடையில்
நீ வேண்டும்
இப்படியே வாழ்க்கை
முழுதும் நீ வேண்டும்
என என் மனம்
மழையை விட
கரைந்தது

கண்டதும் காதல்
என்று
வஞ்சித்து விடுவாளோ
என்று எண்ணி
நன்றி சொல்லி
விடைபெற்றேன்

அவளோ
இன்னொருமுறை சந்திப்போமா
என கேட்ட போது
என் மனம்
இப்படியே என்னுடன் வந்து
விடு என்றது

நேரம் கருதி
இன்னொரு மழை வரை காத்திருந்தாள்
உன் குடைக்குள்
நான் வருவேன் என்றேன்

சொல்லி முடிக்கும் நேரம்
மழை மீண்டும் வந்தது
அழைத்தால்
நானோ
குடையை விட்டுவிடு
என்னுள் வந்துவிடு
உன்னை அன்பெனும்
குடைக்குள்
வாழ் நாள் முழுதும்
காக்கின்றேன் வருகிறாயா
என்றேன்

குடையை விட்டுவிட்டு
என் மார்பு மீது
சாய்ந்து கொண்டால்

அன்பெனும் குடைக்குள்
இரு மனது இணைந்தோம்.

அவளுக்கு நானும் எனக்கு அவளும்
காதல் மழையில்
வானம் குடை பிடிக்க
வலம் வருகின்றோம் :-*
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 147
Post by: ReeNa on May 15, 2017, 04:55:29 AM
அன்பெனும் இதயம்
காட்டுகிறாய்
உறவெனும் குடையால்
இணைகிறாய்
காதல் எனும் உணர்வை
ஊற்றுகிறாய்
காலமெல்லாம் என்னோடிருக்க
ஏங்குகிறாய் 

மழைத் துளியின் சத்தம்
கேட்கவில்லை
இருள் சூழும் மேகமும்
தெரியவில்லை
மழைத்துளியும் மண்ணில்
விழ முன்னே
காதல் துளிர் என்னில்
பூத்ததே கண்ணே 

அழகிய இந்த மழையில்
நடந்தோம்
இருகரம் கோர்த்து
மகிழ்ந்தோம்
தனியாக அலைந்த
என் மனசு 
அன்பென்ற மழையை
சுவாசித்ததே

நம் பிம்பங்கள்
நீரின் திரையில்
மழையோடு
கரைந்திடுமோ இல்லை   
இந்த காதல் துளிகள்
மண்ணில் விழுந்து 
பயிராய் வளர்ந்திடுமோ 

கரைந்தாலும் வளர்ந்தாலும்
அழியாத வரமாய் 
நிலைத்திடுமே உண்மை
காதல்... அன்பாய்!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 147
Post by: SweeTie on May 17, 2017, 07:42:04 PM
மழைத் துளிகளைச்  சிதறும் வானம்
பசும் புற்பாய்  விரிக்கிறது பூமி 
பாசத்தில்  ஒருங்கிணைந்து குடைக்குள்
சங்கமம் தேடுமிரு இதயங்கள்
 
நீண்ட இரவுகள் இன்னும் நீளாதா
என ஏங்கித் தவிக்கும் தனிமை
காதலில் மயங்கி ஊடலை நாடி
பாதையை தேடும் இதயங்கள் .

கனவுகளில் வரைந்த ஓவியங்கள்
நினைவுகளில் சிதறடித்த சிற்பங்கள்
வீணையில்  மீட்டிய  கானங்கள்
காதலில் காண விரையும் இதயங்கள் .

மது  உண்ட வண்டுகளின் மயக்கம்
விதையில் வெளிவரும் நாற்றின் தயக்கம்
வானை  தொட நினைக்கும் பருந்தின் ஏக்கம்
ஒருமிக்கும்  நாளுக்காய்  காத்திருக்கும் இதயங்கள்


கடந்த நொடிகள் மறைந்தாகவேண்டும்
எதிர்வரும் வசந்தம் இனிதாக வேணடும் 
புதிர்கள்  இன்றிய  புதுவாழ்க்கை  கான்பீர்
காதலுடன் காத்திருக்கும் இதயங்கள் வாழ்க.   …

( திருமண பந்தத்தில் இணையவிருக்கும்  என் தோழருக்கு  சமர்ப்பணம் )