FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on May 04, 2017, 03:42:08 AM
-
துயரம் சூழ்கையில்
வலிகளை கண்டு
துவண்டு விட்டால்
தோற்றுப் போவோம்
துயரம் சூழ்கையில்
அறிவில் நிதானமும்
சிந்தையில் நம்பிக்கையும்
உடலில் பலமும் கொண்டு
நிமிர்ந்து நில்
துயரம் உன்னை கண்டு
வெருண்டோட
துயரம் எதுவாயினும்
சுயத்தை இழக்காதீர்கள்
கற்றநம் கல்வி அறிவு - தானே
நம்மை மூடரென சொல்லிடாமல்
கல்வியால் பெற்ற உயர்வுக்கு
உண்மையாய் இருங்கள் இதயத்தில்
சுயத்தையும் அறிவையும்
உயர்வுக்காய் இழக்காதீர்கள்
அடையாளம் அற்று ஆதரவின்றி
தொலைந்து போவீர்கள்
துயரம் கண்டு அழுவதும்
வதைவதும் பசித்திருப்பதும்
அழிவை விரும்பி அழைக்கும் செயல்
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
-
Vanakam sarithan :)
valigalum thuyarangalum ilatha payanam than yethu?
elathaiyum thaangi saathikanumnu kavithai varigal la azhaga solirukinga..
sila velaigal la athiga ethirpugal naala namake namma thiraimai mela santhegam vanthuruthu ;D mukiyama namma seirathu sarithana.. sariyaana paathaila than poramanu ellam yosika thonuthu.. namma seirathu sarinu manasuku paduravarai thuninju seirathula thavarillai..
vazhthukal sarithan... nalla kavithai :)
-
வணக்கம் மைனா
வலிகளில் உண்டான
காயமாற்ற
கோவத்தில்
உதித்த காரணக்கவிதை
வலிகளை சுமந்து போராடுவதா
வலிகளை தாங்கிட இயலாது
ஓடி மறைவதா எனும் கேள்விக்கும்
நெஞ்சத்தில் உண்மையை மறைக்கும்
நீதிக்கு வஞ்சமெனும் கருத்துரையை
மாற்றவும்
அடகு போகும் ஆற்றலும் அறிவும்
இழிவெனும் செய்தி சொல்ல எழுந்த
சிந்தை எனக்கு
நெஞ்சத்தில் சபலம் இல்லை
உணர்வுகளில் உண்மையுண்டு
சமத்துவ இதயமுமுண்டு எனவே
அச்சம் பயம் எனக்கில்லை
உண்மைகளை நன்மைகளை எழுதிட
மிக்க நன்றி மைனா
உங்கள் சிந்தனை தெளிவுக்கு எனது பாராட்டுக்களும்
-
Sari anna :) ungal valigal purinthaalum ethuvum seya mudiya thiraniyatra nilayil ennal mudinthathu ungaluku aaruthaal varthai kura matume :( tholvigal kandu neengal thuvandu pogamal iruka ungaluku irukum oru sakthi Kavithaigal :) atha epavume vitudathinga na :)
-
வணக்கம் விபூமா
எழுத்துக்கள் ஓயாது
இவை கூட நான் உன்னிடம்
எதிர்பாராதவைதான் நன்றி
எப்போதும் உன்னிடம்
இயல்பாக உள்ள நன்மைகளை
யாருக்காகவும் எதுக்காகவும்
இழந்துவிடதே
எனக்கு ஒருவர் இருக்கின்றார்
என் எல்லாமும் அவரே
அவர் போதும்மா எனக்கு
வாழ்வை வென்றாக வேண்டும்
நன்றி தங்கச்சி
-
சகோதரா
துன்பத்திலும் இன்பம் காண்பதே
அறியுடமை
சேக்கிழார் சொன்ன வார்த்தகைள்
சுயத்தையும் அறிவையும்
உயர்வுக்காய் இழக்காதீர்கள்
அடையாளம் அற்று ஆதரவின்றி
தொலைந்து போவீர்கள்
அருமையான வரிகள்
அற்புதம்
வாழ்த்துக்கள் சகோதர
-
வணக்கம் சகோதரா
மிக்க நன்றி
சேக்கிழார் நாமம் கண்டதும்
வேறுவார்த்தை நான்
பேசவில்லை
கடந்து ஓடுகின்றேன் :D :D