FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VipurThi on April 28, 2017, 02:04:51 PM

Title: !!என்னவளே அடி என்னவளே...!!
Post by: VipurThi on April 28, 2017, 02:04:51 PM
அலை ஓடும் கரையிலே
மழைச்சாரலின் மாலையிலே
மனதோரம் ஓர் மகிழ்ச்சி
பார்த்தேனே என்னவளை

முழுதாய் முகம் காணும் முன்னே
மறைந்தாளே புள்ளி மானாய்
அவள் பாத சுவடோ மணலிலே
ஆனால் பதிந்தாளே நெஞ்சிலே

இனிமையாய் அவள் நினைவிலே
வீடு வந்தேன் ஆனாலோ
பெண் பார்க்கும் படல பூஜையோ
ஆரம்பமானதே எனக்கு எமனாய்

என் தாயின் கண்ணீரின் அஞ்சலி
கண்டு கொண்டு செய்தேன்
என்னவளின் நினைவிற்கோ
நினைவஞ்சலி

மறு நாளே விஜயம் 
மணப்பெண் காணவே என்
விழி ஓரம் சற்று ஈரம்
ஏனெனில்  கண்டதோ
மனம் கவர்ந்த என்னவளையே

தனிமையாய் பேசிட ஐந்து நிமிடோ
அவள் விழி பார்த்திடவே போனது
போகலாம் என்று அவள் சொல்ல
எட்டி பிடித்தேன் அவள் கை ஒன்றையே

ஏனென்று  அதிர்ச்சியுடன் அவள் நோக்க
அவள் மருண்ட விழி அழகினிலே
தலை குனிந்து நெற்றியிலே
நான் இட்டேன் முதல் முத்தம்

விழி இரண்டில் நீர் கசிந்து
அவளோ என்னை பார்க்க
என்னவள் கண் துடைத்து
என் காதல் சொன்னேன்

விறுக்கென்று வெளியேறியவளால்
மனம் சட்டென்று நின்றது
பின்னாலே நானும் செல்ல
கேட்டதெல்லாம் பெரியோரின்
நகை ஒலியே ;D

எட்டி பார்த்திட்டாள் என்னவள்
புன்னகை எனும் நாணம் கொண்டு
பரவசமாய் நான் பறந்திட்டேன்
என் காதல் எனும் வானில் சிறகு கொண்டு
என்னவள் நாளை என் மனைவியாகும் கனவு கொண்டு   ;)


(கதையாய் எழுத நினைத்ததை கவிதையாக ஒப்பித்தேன் :) :) )
Title: Re: !!என்னவளே அடி என்னவளே...!!
Post by: ரித்திகா on April 28, 2017, 03:28:42 PM
(https://68.media.tumblr.com/20a98bc9a166e4241b1e303bbeaeb0eb/tumblr_nqk5deX81l1sdmszbo1_250.gif)
வணக்கம் பூர்த்தி மா...

  அழகா எழுந்திருக்க ...
  உன்னுடைய பின்குறிப்பை கவனிக்கும் முன்னேமே
  உனது கவிதையைப் படித்து ...
  கதையாகவே கற்பனைச் செய்து விட்டேன் ...
 
  அழகான தருணம் அது ...
  தன்னவளை மறக்க வேண்டிய நிலையில் ...
  தன்னவளே தன் வாழ்வின் தாரமாக வருவது ...
  அது வரமே ....கற்பனையில் அளவற்ற மகிழ்ச்சி கொண்டேன்...
 
  அருமையாக எழுந்திருக்க பூர்த்தி ...
  இன்னும் இன்னும் கவிப்பயணம்
  சிறப்பாக தொடர ...
   எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!!!!
(https://68.media.tumblr.com/20a98bc9a166e4241b1e303bbeaeb0eb/tumblr_nqk5deX81l1sdmszbo1_250.gif)


Title: Re: !!என்னவளே அடி என்னவளே...!!
Post by: VipurThi on April 29, 2017, 03:56:30 PM
Hi rithi ma ;D tnx chllm :) kathai than eluthanum nu nenachen but typing somberithanathula kavithai nu short aakiten he he he :D
Title: Re: !!என்னவளே அடி என்னவளே...!!
Post by: MyNa on April 30, 2017, 07:07:32 AM
Vanakam vipurthi..

haha intha kavithaiya neenga kathaiya ezhutha vitalum padikirapo manam thaane ithai kathaiya than karpanai seithu parkirathu..

என் தாயின் கண்ணீரின் அஞ்சலி
கண்டு கொண்டு செய்தேன்
என்னவளின் நினைவிற்கோ
நினைவஞ்சலி

intha varigal ah padikirapo valigal irunthalum kavithaila nallathoru thirupatha konduvanthu rombave azhaga mudichirukinga..intha varam elarukum kedachita vazhkai romba azhagaanatha irukum.

Enaku romba pidichiruku intha kavithai sis.. kandipa maraka mudiyatha kavithaigal la onru..vazhthukal :)
Title: Re: !!என்னவளே அடி என்னவளே...!!
Post by: VipurThi on April 30, 2017, 09:15:35 AM
Hi Myna sis :D nan rmba happy bcoz oru Thamizh Piriyai oda manasula ennoda kavithai oru idam pidichiruke :D rmba nandri sis ungaloda vazhthukkaluku :)
Title: Re: !!என்னவளே அடி என்னவளே...!!
Post by: SarithaN on May 01, 2017, 10:04:28 PM
வணக்கம் விபூமா
 
பருவத்தே எழும் போர்
யாவருக்கும் வெற்றியாய்
முடிவதில்லை

அதிலும் இதுபோல்
சந்திரனில் தொடங்கியது 
சூரியனில் மங்களமாயிற்று
மறுமுறை சந்திரனை காணுமுன்

மிக வேகமானாலும்
சுற்றம் சூழ மகிழ்ச்சி
கவிதை ஆனந்தம் வாழ்த்துக்கள்
Title: Re: !!என்னவளே அடி என்னவளே...!!
Post by: VipurThi on May 01, 2017, 11:46:45 PM
Sari na :D nandri na :D