FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MyNa on April 25, 2017, 11:21:35 PM

Title: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: MyNa on April 25, 2017, 11:21:35 PM
கல்லறை எனும் கருவறையிலே அவள் !!

பேனா மையும்
கண்ணீர் சிந்துதம்மா
உன்னை பற்றி கிறுக்கையிலே ..


பல  கனவுகளோடு
பிறந்த  வீட்டை  விட்டு
வாழும் வீடு புகுந்தவள்..

அவளை  சிறு  கவலையும்
தீண்டிடாமல்  தன் உள்ளங்கையில்
தாங்கும் அன்பான  கணவன் ..


தன் சொந்த மகளை போல்
அன்பாய் அரவணைக்கும் இன்னொரு
தந்தையாய் அவளின்  மாமனார்..

உடன்  பிறப்புகளை  போல்
பாசத்தை கொட்டி தீர்க்கும்
நாத்தனாரும்  கொளுந்தனாரும்..

சின்னஞ்சிறு  விவாதங்களோடு
உரிமையாய் பாசத்தை  காட்டும்
இன்னொரு  தாயாய்  மாமியார்..


எல்லாம் இருப்பினும் அவளின்
மனதில் மட்டும் எப்போதும்
மனதை வருடும் ஒரு கவலை..

காரணம் பிறர் அவளுக்கு  சூட்டிய  பட்டம்
புத்திர  பாக்கியம்  இல்லாத துரதிஷ்டசாலி
இன்னும் எளிமையாக  கூறினால் மலடி ..

இறைவனின் படைப்பில் அவளுக்கு
குறைகள் இருப்பின் யார் மீது குற்றம்
கூறப்பட வேண்டும் ??

அவளும் பல கனவுகளோடு பிறந்தவள்தான்
தன் கருவில் ஓர்  உயிரை  சுமக்க எண்ணியவள்தான்
அந்த கரு குழந்தையாய் மாறி அம்மா
என்று  அழைக்காதா என்றெண்ணி துடிப்பவள்தான் ..

தூற்றல்கள்  கடுஞ்சொற்கள் என
இன்னும் எத்தனை ரணங்களைத்தான்
தாங்கிடும் அவளது புண்பட்ட  நெஞ்சம்..

ஏற்கனவே  பல மன உளைச்சலோடு
உயிர்  இருந்தும்  நடை பிணமாய் இருக்கும்
அவளை  வார்தைகளாலேயே குத்தி கிழிக்கின்றனர்..

சுபகாரியங்கள் தொடங்கி சாதாரண 
சடங்குகள் வரை அவள்  தள்ளி
வைக்கப்படுகிறாள் .. ராசி இல்லாதவளாம் !!


தாயாக   இருந்த மாமியாரோ 
ஊர்  உறவினர்  சொல் கேட்டு மகளான
மருமகளை வார்த்தைகளால் சுடுகின்றார்..

தந்தையாய் இருந்த மாமனாரோ
இப்போது மருமகளை மகளென உரிமையாய்
பிறர்முன்  கூற  வெட்கப்படுகிறார் ..

நாத்தனாரும் கொளுந்தனாரும்
வீட்டில் ஏதோ மூன்றாவது மனிதரை 
பார்ப்பது போல ஒதுக்கி செல்கின்றனர் .. 

தன் கணவனின் நிலை எண்ணி கலங்கி
அவரை ஆறுதல் படுத்திட அனைத்தையும் 
தாங்கி கொண்டு  பொய்யாய்  சிரிக்கின்றாள்..

கணவன் அனைத்தையும் அறிந்தவனாய்
அவளை தன் மார்போடு  அணைத்தவாறே
எதையோ சொல்ல தயங்கியவாறே பேசலானான்..


" நா  இன்னொரு  கல்யாணம்  பண்ணிக்கலாம்னு  இருக்கேன் ..
எல்லாரும் அதைத்தான் ஆசை பாடுறாங்க..
எத்தனை நாள்த்தான் இப்படியே  எல்லாரும்  கஷ்டப்படுவது ??
 

சொல்க் கேட்டு மடிந்தே  போனாள் ஒரு கணம்
வாழ்க்கையே  முற்றிலும் வெறுமையாகிட .. நின்றாள்
வலிமை இல்லாதவளாய் மார்பில் சாய்ந்தபடியே ..

வார்த்தைகள் கண்ணீராய்  கன்னத்தை நனைத்திட
சரியென மௌனமாய் சம்மதம் கூறிவிட்டு
நடைபிணமாய்  நகர்ந்தாள்  அங்கிருந்து ..


மனைவி முன்னிலையில் கணவனுக்கு மறுமணம்
யாருக்கு கிடைத்திடும்  இந்த பாக்கியம்??  தான் 
நேசித்தவரை இன்னொருத்திக்கு  தத்துக் கொடுக்க..


கண்கண்ட கணவனே கைவிட்ட பின்பு
சுமையாய் இருந்திடல் ஆகாது என்றெண்ணி 
தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் ..


இன்றோ அவளின் உயிரற்ற உடலின்
முன் பொய்யாக கதறி அழுகின்றது
அவளை கொன்ற உறவுகள்   !!

அவளின் வயிற்றில் தான்  புழுப்பூச்சிகள் இல்லை
அவள் மடிந்த பின்னர்  பூமாதேவியின் வயிற்றிலாவது தன்னால்
 புழுப்பூச்சி உண்டாகட்டும் என்றெண்ணிவிட்டாள் போலும் !!


இதே  சூழலில்  ஆண் மலடனாக இருந்திருந்தால்
ஊர்  ஏற்றுக்  கொள்ளுமா பெண்ணின் மறுமணத்தை
கணவன் உயிரோடிருக்கையில் ??
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: JeSiNa on April 25, 2017, 11:46:31 PM
 சொல்லுவதற்கு வார்த்தை இல்லை  தோழி...
ஒரு பெண்ணாக கண்ணீர் மட்டுமே என் வார்த்தைகளாக இருக்கிறது :'(.. 
கவிதையில் ஒரு பெண்ணுடைய சந்தோசம் கண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து  வாழ்க்கை பற்றி சிறப்பாக கூறி இருக்கிறீர்கள் தோழி...
வாழ்த்துக்கள் :) 
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: VipurThi on April 26, 2017, 09:00:10 AM
Hi myna sis :D intha kavithai thalaipu paathaapo enaku onnum puriyala  ::) but kavithaiya vasichathum thelivayiten :) oru Penn thanoda vazhkaiyil sumakum thuyarangala suti kaatirukinga :) vazhthukkal sis :) indru evlavo medical facilities vanthaalum ipdi sambavangal nadakura idangal neraya iruku :( kekave kodumayana vishayangal :( aana indraiya pengal intha samuthaayam ellam thandi vetrigal petru irukanga athai ninaithu paarkum pothu magizhchiyavum iruku :) arthamulla ungal kavipayanam thodaratum sis :)
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: ChuMMa on April 26, 2017, 03:22:54 PM
கண்களில் கண்ணீர்  சகோ

சொல்ல வார்த்தைகள் இல்லை ...சந்தோஷமாக தொடங்கிய அவள் வாழ்க்கை
முடிக்கபட்டது அவமானத்துடன்

மருத்துவம் முன்னேறினாலும் அதுவும் பணம் அடிப்படை வியாபாரம்
என்பதால் எட்டா கனியாகவே இருக்கிறது நமக்கு

பெண்ணை மனித பிறவியாகவே பார்க்காத
ஈன பிறவிக்கலுக்கு  என்ன சொல்வது

பெண்ணை மாய சக்தி என்று நம்பும் பலர்
மாயாவி சக்தியாகவே பார்க்கின்றார்கள்

இதை படித்தேனும் திருந்தட்டும் அவர்கள்

நன்றிகள் பல சகோ
கண்ணீருடன்
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: MyNa on April 26, 2017, 06:54:15 PM
சொல்லுவதற்கு வார்த்தை இல்லை  தோழி...
ஒரு பெண்ணாக கண்ணீர் மட்டுமே என் வார்த்தைகளாக இருக்கிறது :'(.. 
கவிதையில் ஒரு பெண்ணுடைய சந்தோசம் கண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து  வாழ்க்கை பற்றி சிறப்பாக கூறி இருக்கிறீர்கள் தோழி...
வாழ்த்துக்கள் :) 

nanri jesina :)
pala pengaloda kannera enala mudinja alavu kavithaiya ezhuthiruken..
Vazhkaila kanner sagajame.. pengaluku kannere vazhkaiya aagidama irunthave pothumathu  :-\
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: MyNa on April 26, 2017, 07:06:36 PM
Hi myna sis :D intha kavithai thalaipu paathaapo enaku onnum puriyala  ::) but kavithaiya vasichathum thelivayiten :) oru Penn thanoda vazhkaiyil sumakum thuyarangala suti kaatirukinga :) vazhthukkal sis :) indru evlavo medical facilities vanthaalum ipdi sambavangal nadakura idangal neraya iruku :( kekave kodumayana vishayangal :( aana indraiya pengal intha samuthaayam ellam thandi vetrigal petru irukanga athai ninaithu paarkum pothu magizhchiyavum iruku :) arthamulla ungal kavipayanam thodaratum sis :)

Hi Vipurthi  :D nanri ..
Mutrilum unmai sis.. enathan vazhkai la ellame naveenama marite ponalum innamum ipadiyaana sambavangal nadanthuthe than iruku.. veli ulaguku athigam intha sambavangal theriyarathu illai .. elame moodi maraikapaduthu.. poradi saathichavanga palar sis.. kandipa santhosa pada vendiya vishayam.. innum poradite irukavangalukum nallathoru vidivu kaalam varanum avangalum saathika  :)

Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: MyNa on April 26, 2017, 07:27:36 PM
கண்களில் கண்ணீர்  சகோ

சொல்ல வார்த்தைகள் இல்லை ...சந்தோஷமாக தொடங்கிய அவள் வாழ்க்கை
முடிக்கபட்டது அவமானத்துடன்

மருத்துவம் முன்னேறினாலும் அதுவும் பணம் அடிப்படை வியாபாரம்
என்பதால் எட்டா கனியாகவே இருக்கிறது நமக்கு

பெண்ணை மனித பிறவியாகவே பார்க்காத
ஈன பிறவிக்கலுக்கு  என்ன சொல்வது

பெண்ணை மாய சக்தி என்று நம்பும் பலர்
மாயாவி சக்தியாகவே பார்க்கின்றார்கள்

இதை படித்தேனும் திருந்தட்டும் அவர்கள்

நன்றிகள் பல சகோ
கண்ணீருடன்


vanakam chumma  :)
enakum ezhuthukaiyil manasu bhaarama than irunthathu .. Elarukum sumoogamaana vazhkai amanjidurathu ilaiye.. umaithan.. maruthavam paarka panam thadaiya irukirathu oru puram iruka palarathu manamum mooda nambikaiyum mukiya kaaranama iruku.. epo ennangal maatra padutho apo than viduvu varum ithukellam..neenga sonathu pola itha ezhuthinatha moolama chinnatha silar ah yosika vachathula magizchi :)
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: SarithaN on April 27, 2017, 08:02:59 PM
கல்லறை எனும் கருவறையிலே அவள் !!

மலர்ந்த வீடு துறந்து மறுவீடு புகுந்து
மரணம் வரையும் இதுவே வாழ்வென
நினைந்து தனைமாற்றிடும் பெண்கள்

மாமனார் மாமியார் பெற்றவரானால்
மைத்துனர் நாத்தனார் சகோதரரானால்
கணவனே உயிரென வாழ்வாழ் மகிழ்ந்து

குழந்தை இல்லா துயர் நீங்க கடவுளே
இரங்க வேண்டும்
மலடு என்னும் வசை நீங்க தம்மைத் தாமே
காக்க வேண்டும்

கணவன் தனக்கே குறையென தன்வீட்டிலும்
மனைவி தனக்கே குறையென தன்வீட்டிலும்
சொல்லி கணவனுக்கு மனைவியும் 
மனைவிக்கு கணவனும் துணைநிற்க முடியும்
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: SarithaN on April 27, 2017, 08:03:43 PM
இப்படியல்லாது மறுமணம் எல்லாம் நிகழ்வது
கணவனெனும் மிருகத்தின் குற்றமே
மலடு என எழுதவே நினைக்கவே கையும் மனமும்
கூசுதே எப்படி முடிகிறது இப்படியெல்லாம் பேச
இதை அதிகம் பேசுவது பெண்களென்பது வேதனை

ஐரோப்பாவில் நூறு முறை முயன்றுவிட்டேன்
மாமரம் முழைக்கிறது காய்கவில்லை   
சில விதைகளும் நிலங்களும் ஏற்பற்றவை எனவே
செய்தால் மறுமணங்கள் இருவருக்கும் செய்வதே நீதி

ஊரார் வசைக்கே வாழ்வை வாழும் கொடுமை
நமக்காக நாம் யாரும் நோகாது வாழ்வதே மேன்மை
உனக்கான வலியில் அழாததே குற்றம் பின்னர்
நீ ஏன் சாகவேண்டும் பேதையாய்? பெற்றவரும் 
சுற்றமும் வெறுத்தாலும் படைத்தவரை நினை

மறுமணத்தில் தாய்மைகண்டு மரணம் எனும்
தண்டனை வழங்கு இல்லையேல்
தற்கொலை என்பது நியதியாகிவிடும் எச்சரிக்கை
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: SarithaN on April 27, 2017, 08:06:40 PM
குழந்தை இல்லையெனும் காரணத்தால்
மனைவியை தள்ளிய ஆண்மையற்றவனை
மணம் முடிப்பவள் என்பார்வையில் விபச்சாரி
வேறு வார்த்தயை சொல்லமுடியவில்லை இங்கே

குழந்தை இல்லையென மறுமணம் செய்பவனுக்கு
குழந்தை கிடைக்கும் என்பதுக்கு உத்தரவாதம் என்ன
இப்படியான மிருகங்களையெல்லாம் மணம்முடிப்பவள்
பெண்ணா?

பெண் என்று சமூகம் சொன்னால் ஆண்கள் மறார்
பெண்களே இதையெல்லாம் மாற்றிட வழிகளுண்டு
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: SarithaN on April 27, 2017, 08:07:20 PM
என் உறவுகளில் இப்படி நிகழவில்லை கடவுளுக்குகே நன்றி
இனியும் நிகழ்ந்திட வேண்டாம் இறைவா.

இப்படி ஒரு சொந்த அனுபவத்தை பெறும் நிலைவந்தால்
உயிர் ஒன்றை கொன்று சிறையில்தான் வாழ்வேன்
இல்லை குறைந்த பட்சம் வியேய் அன்ரனி அவர்களின்
சலீம் படத்தில் உள்ளதுபோல ஒரு தண்டணையாவது
குடுக்கணும்

நம்ம வீட்டில அக்கா தங்கையா பிறந்து வளர்ந்தது
அடுத்தவங்க வீட்டில சாகவா? பொறுக்கவா முடியும்? 
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: SarithaN on April 27, 2017, 08:10:34 PM
வாழ்த்துக்கள் மைனா

உங்கள் கவிதை என்னையும் நிறையவே
சிந்திக்கச் செய்தது
கவிதை படிக்கையில் பல முறை மேனி
சிலிர்க்கவே செய்தது
நாம் வாழும் சூழலில் மாறாத தீராத
பெரும் கொடுமையாகிப்போன ஒன்று
திருமணம் இன்பமான கணவன் அன்பு
தாய் தந்தையாய் மாறிய மாமா மாமி
சகோதரராய் வழும் மைத்துனியர்

குழந்தை பேறு விலகிப்போக
விலகிய உருமாறும் உறவுகள்
வாழப்போனவள் பட்ட அவலம்

மறுமணத்துகு ஆயத்தமான
மிருகமும் கொல்லப்பட்ட அன்பான மனைவியுமென 

சமூகத்துக்கு தேவையான நல்லதொரு படிப்பினை
கவிதை பெரிதாயினும் படிக்க திகட்டாத நடையில்
கர்ப்ப ஸ்திரிக்கு ஒப்பான கனம் கொண்டதாய்   
கர்ப்பம் தங்காதவளுக்கு நேரும் வாதைசொல்லும்
கவிதையாய் நிற்கிறது.

வாழ்க வளமுடன் தொடர்க கவிப்பணி நன்றிகள்.
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: MyNa on April 27, 2017, 08:23:56 PM
கல்லறை எனும் கருவறையிலே அவள் !!

மலர்ந்த வீடு துறந்து மறுவீடு புகுந்து
மரணம் வரையும் இதுவே வாழ்வென
நினைந்து தனைமாற்றிடும் பெண்கள்

மாமனார் மாமியார் பெற்றவரானால்
மைத்துனர் நாத்தனார் சகோதரரானால்
கணவனே உயிரென வாழ்வாழ் மகிழ்ந்து

குழந்தை இல்லா துயர் நீங்க கடவுளே
இரங்க வேண்டும்
மலடு என்னும் வசை நீங்க தம்மைத் தாமே
காக்க வேண்டும்

கணவன் தனக்கே குறையென தன்வீட்டிலும்
மனைவி தனக்கே குறையென தன்வீட்டிலும்
சொல்லி கணவனுக்கு மனைவியும் 
மனைவிக்கு கணவனும் துணைநிற்க முடியும்

elarum maamanar maamiyara inoru thaai thanthaiyavum marumagala inoru magalaavum paarka thodangita atha vida athirshtam vera kedaiyathu.. kanavanuku manaivi muthal kulanthainum manaiviku kavanan muthal kulanthainum vazhravanga neraya per irukanga. Apadi vazha kathukitave pathi pirachanai ku theervu kedachidum..
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: MyNa on April 27, 2017, 08:31:11 PM
இப்படியல்லாது மறுமணம் எல்லாம் நிகழ்வது
கணவனெனும் மிருகத்தின் குற்றமே
மலடு என எழுதவே நினைக்கவே கையும் மனமும்
கூசுதே எப்படி முடிகிறது இப்படியெல்லாம் பேச
இதை அதிகம் பேசுவது பெண்களென்பது வேதனை

ஐரோப்பாவில் நூறு முறை முயன்றுவிட்டேன்
மாமரம் முழைக்கிறது காய்கவில்லை   
சில விதைகளும் நிலங்களும் ஏற்பற்றவை எனவே
செய்தால் மறுமணங்கள் இருவருக்கும் செய்வதே நீதி

ஊரார் வசைக்கே வாழ்வை வாழும் கொடுமை
நமக்காக நாம் யாரும் நோகாது வாழ்வதே மேன்மை
உனக்கான வலியில் அழாததே குற்றம் பின்னர்
நீ ஏன் சாகவேண்டும் பேதையாய்? பெற்றவரும் 
சுற்றமும் வெறுத்தாலும் படைத்தவரை நினை

மறுமணத்தில் தாய்மைகண்டு மரணம் எனும்
தண்டனை வழங்கு இல்லையேல்
தற்கொலை என்பது நியதியாகிவிடும் எச்சரிக்கை


kanavan mela mattume kutram nu solida mudiyathu sarithan.. soolnilai palara katayathula niruthi vedika paakuthu.. neenga sonathu pola pengaluku erpadura intha nilamaiya athigam vimarsikirathe pengal than.. vethanai pada koodiya vishayam.. elarum oru kanam tharkolaiku munnathaaga paasam vaithirukum uravugala nenachu paatha intha thavaraana mudivu thavirka padalam.. pirai tharkolaiku namma karanama irukiratha nenachu konjam yosichale palar manasu maarum.. thootri pesurathum kuraiyum..
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: MyNa on April 27, 2017, 08:36:11 PM
குழந்தை இல்லையெனும் காரணத்தால்
மனைவியை தள்ளிய ஆண்மையற்றவனை
மணம் முடிப்பவள் என்பார்வையில் விபச்சாரி
வேறு வார்த்தயை சொல்லமுடியவில்லை இங்கே

குழந்தை இல்லையென மறுமணம் செய்பவனுக்கு
குழந்தை கிடைக்கும் என்பதுக்கு உத்தரவாதம் என்ன
இப்படியான மிருகங்களையெல்லாம் மணம்முடிப்பவள்
பெண்ணா?

பெண் என்று சமூகம் சொன்னால் ஆண்கள் மறார்
பெண்களே இதையெல்லாம் மாற்றிட வழிகளுண்டு


ithu pengalum yosika vendiya vishayam..
oru pennoda vazhkaiya paalaki than avanga santhosama irukanumna apadiyana paavatha oru pothum seiyathirupathe nalathu.. pala kanavugaloda oruthar ah nambi varapo antha nambikai udaikapadurathu rombave kodumaiyana vali.. athilum elame avanga than nu nambi varapo thanaku sonthamanathu than kan munadiye pariporathu miga periya kodumai..
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: MyNa on April 27, 2017, 08:47:40 PM
Intha mathiri yaarukum nadakamalirukanum sarithan.. porantha veetla irunthu kalyanam pani pora ponnu nalla irukanumnu amma appavum akka thangachi santhosama irukanumnu annan thambhi udan pirapugalum ethirpakuranga. Ipadi ethavathu nadantu pinama pakurapo yaarala than thangika mudiyum ?? Elarum ipadithanu solla varala.. ipadi sila pengaluku aagurapo aaruthala thunai nikira uravugalum iruku.. avangala mathiriye elarum purinji aaruthal solatiyum kaaya paduthama irunthale pothumanathu.. :) nandri sarithan padichitu ivalavu aalama karuthugala mun vachathuku.. ennaiyum neraiyave sinthika vachitinga.. meendum oru murai nandri  :)
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: Maran on April 27, 2017, 10:33:09 PM



தங்களின் அழகான கவிதைக்கு என் பாராட்டுக்கள் தோழி கவிதாயினி மைனா.

மனித மனம் போல கவிதையும் எல்லாவிதமான வரையறைகளையும் மீறி, தனக்கான வெளிச்சுமையை சுயமாக கட்டமைக்கிறது. பெண் என்று தன்னை அறிந்த நிலையில் சூழலுடன் ஒத்தும், முரண்பட்டும் வாழ வேண்டிய காலகட்டத்தில் பால் அடையாளம் காரணமாகப் பெண் எதிர்கொள்ளும் அவஸ்தைகள் ஆணுக்கு முற்றிலும் அந்நியமானது.

சமத்துவமின்மை காரணமாக பெண் உடல் அடையும் அலைக்கழிப்பு, குழப்பம், மனசோர்வு, தனிமை பதற்றம் நிம்மதியின்மை போன்றன அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதில் முக்கியமான தலைப்பை எடுத்து மிக அழகாக கவிதையாக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தோழி.  :)




Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: ரித்திகா on April 28, 2017, 03:38:56 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picgifs.com%2Fglitter-gifs%2Ff%2Fflowers%2Fpicgifs-flowers-297910.gif&hash=25efc50ac0037094111b5aab469d7226c29cc9e1)
வணக்கம் மைனா சீஸ் ...

   அழகான கவிதை ...
    ஒரு பெண்ணின் வலி...
   உணர்தேன் ஒவ்வொரு வரியிலும் ...
   இவ்வாறான சூழ்நிலை கதைகளிலும்
   நாடகத்திலும் ...ஒரு சில குடும்பங்களில்
   நிஜத்தில் நடந்திருப்பதை அறிந்தாலும் ...
   தங்களின் வரிகளில் படிக்கையில் ..
   ஏனோ விழியினோரம் கரிக்கத்தான் செய்கிறது ....
   பெண்கள் வாங்கி வந்த வரம் அவ்வாறோ..!!!

   அருமையான கவிதை ...
வரிகளில் பெண் அவள் கொண்ட
வேதனையை அறிந்தேன் !!!!
சிந்தை சிறப்பு...
தொடரட்டும் கவிப்பயணம் ...
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!
   
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picgifs.com%2Fglitter-gifs%2Ff%2Fflowers%2Fpicgifs-flowers-297910.gif&hash=25efc50ac0037094111b5aab469d7226c29cc9e1)
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: MyNa on April 30, 2017, 06:47:17 AM

தங்களின் அழகான கவிதைக்கு என் பாராட்டுக்கள் தோழி கவிதாயினி மைனா.

மனித மனம் போல கவிதையும் எல்லாவிதமான வரையறைகளையும் மீறி, தனக்கான வெளிச்சுமையை சுயமாக கட்டமைக்கிறது. பெண் என்று தன்னை அறிந்த நிலையில் சூழலுடன் ஒத்தும், முரண்பட்டும் வாழ வேண்டிய காலகட்டத்தில் பால் அடையாளம் காரணமாகப் பெண் எதிர்கொள்ளும் அவஸ்தைகள் ஆணுக்கு முற்றிலும் அந்நியமானது.

சமத்துவமின்மை காரணமாக பெண் உடல் அடையும் அலைக்கழிப்பு, குழப்பம், மனசோர்வு, தனிமை பதற்றம் நிம்மதியின்மை போன்றன அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதில் முக்கியமான தலைப்பை எடுத்து மிக அழகாக கவிதையாக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தோழி.  :)


Vanakam maran.
ungakita irunthu karuthugalum paarattum kedacthula mikka magizchi. nandrigalum kooda
Neenga sonathu la irunthu pengal ethirnokkum innum pala pirachanaigala therinjikiten.atharkum ennal iyanravarai ezhutha muyarchikiren.nandri maran :)
Title: Re: ~ கல்லறை எனும் கருவறையிலே அவள் ~
Post by: MyNa on April 30, 2017, 06:57:24 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picgifs.com%2Fglitter-gifs%2Ff%2Fflowers%2Fpicgifs-flowers-297910.gif&hash=25efc50ac0037094111b5aab469d7226c29cc9e1)
வணக்கம் மைனா சீஸ் ...

   அழகான கவிதை ...
    ஒரு பெண்ணின் வலி...
   உணர்தேன் ஒவ்வொரு வரியிலும் ...
   இவ்வாறான சூழ்நிலை கதைகளிலும்
   நாடகத்திலும் ...ஒரு சில குடும்பங்களில்
   நிஜத்தில் நடந்திருப்பதை அறிந்தாலும் ...
   தங்களின் வரிகளில் படிக்கையில் ..
   ஏனோ விழியினோரம் கரிக்கத்தான் செய்கிறது ....
   பெண்கள் வாங்கி வந்த வரம் அவ்வாறோ..!!!

   அருமையான கவிதை ...
வரிகளில் பெண் அவள் கொண்ட
வேதனையை அறிந்தேன் !!!!
சிந்தை சிறப்பு...
தொடரட்டும் கவிப்பயணம் ...
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!
   
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picgifs.com%2Fglitter-gifs%2Ff%2Fflowers%2Fpicgifs-flowers-297910.gif&hash=25efc50ac0037094111b5aab469d7226c29cc9e1)

vanakam rithika..
nerameduthu karuthugala alangarichu pathivitathuku nandri..mukiyama antha paravaigal rendum ennaiye paathu kanadikirathu pola iruku ;D

unmaithan sis.. nija vazhkaila nadakurathu thana kathaigalilum naadagangalilum kaatchiyida paduthu.
Pengaloda varam kanner nu sonnal ipo iruka kaala kattathula thanneruku panjame irukathu sis.. avalavu kanner sinthapaduthu.. aanalum ipo palar ethaiyum thuninju nirkavum kathukitanga.. atharkaaga perumaiyum santhosamum iruku.. vazhthukaluku meendum oru murai nandri sis :)..