FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: ஸ்ருதி on February 16, 2012, 09:06:56 PM
-
* அடக்கம் இன்றி ஒழுக்கம் கெட்டு நூறு ஆண்டுகள்
வாழ்வதைக் காட்டிலும், தியானம் செய்து ஒழுக்கத்துடன்
ஒருநாள் வாழ்பவனின் வாழ்வு சிறப்புடையது.
-
-* வழி தவறிச் செல்லும் ரதம் போலப் பொங்கி வரும்
கோபத்தினை அடக்கி ஆள்பவனையே நான் சரியான
சாரதி என்று சொல்வேன், மற்றவர்கள் கடிவாளக் கயிற்றைக்
கையில் வைத்திருப்பவர்களே.
–
-* எவன் ஒருவன் அடக்க அரிதான கொடிய ஆசையை
அடக்கி வெல்கிறானோ, அவனுடைய துயரங்கள் தாமரை
இலை மீது விழுந்த தண்ணீர் துளிகள் போல, அவனை விட்டு
அகலும்.
-
* வயது முதிர்ந்த பெரியோரை வணங்கி மரியாதை செய்து
வருபவனுக்கு ஆயுள், அழகு, இன்பம், வலிமை என்னும்
பயன்கள் அதிகரிக்கும்.
-
-* உடம்பின் எரிச்சலை அடக்கிக் காக்க வேண்டும்.
உடலை அடக்கிப் பழக வேண்டும்.
ஆசையை அடியோடு
வேரறுத்து, நல்லொழுக்கத்தை பேணி வரவேண்டும்.
-
* பொறாமை, பேராசை, தீய ஒழுக்கம் இவைகளை எவன்
அழித்துவிட்டானோ, அவனே குற்றமற்ற மேதாவி. அவனே
உண்மையான அழகு உடையவன்.
-
- புத்தர்
-
நல்ல தகவல் ஸ்ருதி!
கோபம் இல்லை என்றாலே நிறைய பிரச்சனைகளை தவிர்க்கலாம்!
நன்றி!
-
புத்தர் என்னமோ நல்லத்தான் சொல்லி இருகாரு ... புத்த மான்களோ .. தலை கீழா பண்றாங்க ....