ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 141
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F141.jpg&hash=7fbe4583cd397cc5f8ab61c7312f9b26c9e529b0)
கண்ணோரத்தில் காந்த பார்வையுடன்
உதட்டோரத்தில் ஒரு கள்ள சிரிப்புடன்
காலையில் நீ கண்ணாடிமுன் நிற்கும்போது
சிவந்து போனேனடா நான்[/color]
காலை வேளையில் உன் ஓசை என் காதுகளில் ரீங்காரமிட
அதே மயக்கத்தில் கண் திறந்து
என்னிலை மறந்து உன்னிடம் தஞ்சம் அடையும் வேளையில்
பூஜை வேளை கரடியாய் அலாரம் ரீங்காரமிட
பிரிந்து போனதடா நமது இமைகள்
அழகு பொக்கிஷமாய் நான் கண்ணாடி முன் நிற்க
பின்னாலிருந்த நீ அணைக்க... திடுக்கித்து போனேனடா நான்
என் கண்களில் சிறு கோபம் தெரிய
ரசித்த வகையில் உன் கண்கள் ஓரத்தில் ஒரு கள்ள சிரிப்பு
கண்ணாடி எனும் பிம்பமதில்
உயிர் பூக்களில் உன் கண்கள் தெரிய
உன் அழகை கண்களில் பருகி கொண்டு
நீ தந்த அங்கிகாரத்தை நெற்றியில் சூடி கொண்டு
என் காலை பொழுதை அழகாக்கும் நீ
என்றும் ஒரு கவிஞனே
என் வாழ் நாள் முழுதும்
உன் கண்கள் என்னும் சிறையில்
என்னை கைது செய்து விடுடா கண்ணா
அது ஏனோ தெரியவில்லை
உன் கண்களுக்கு அப்படி ஒரு சக்தி