ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 140
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F140.jpg&hash=8a362ee4388a18523b37ce3921978870bdce9dc1)
கடன் என்னும் சூரிய கதிர்களை கண்டு கண் விழித்து ,
வயல் என்னும் ஒற்றைசொல்லை உணவாக்கி ,
வியர்வை என்னும் நீரில் நீராடி,
பசி என்னும் கனவு போர்வைக்குள் புகுந்து கொள்ளும் விவசாயியே ,
நீ கடவுளுக்கு சமம்,
காடும் மேடும் நிலமாக்கி,
வெயிலும் பசியும் சொர்கமே என்று நினைத்து ,
ஏரும் தன் குழந்தைகளில் ஒன்றாக நினைத்து,
நீ விதைக்கும் ஒவ்வொரு நெல் கதிரும் இறைவனுக்கே சமம்,
ஆனால் அந்த கடவுளுக்கு கூட உன் கஷ்டம் புரியவில்லை,
தண்ணீர் என்னும் பொக்கிஷத்தை உனக்கு கொடுக்காமல்,
எவன் வீட்டு குழாயிலோ தருகிறான்,
வீடு தேடி வருபவனுக்கு பசி ஆற்றும் உன்னை,
பசியோடு நடு வீதியில் மறியல் செய்ய வைத்தது எவனோ?
நிர்வாணம் என்னும் ஒற்றை சொல்லை கொடுமையாய் நினைக்கும் நமது
சமுதாயம்,
சோறு போடும் கடவுளை அரைநிர்வாணமாக வீதியில் படுக்க வைத்து
ஏனோ?
நீ நடும் நெல் கதிர்கள் கூட வாடிவிட கூடாதென
நினைக்கும் நீ,
உன்னையே மரித்து கொள்வது ஏனோ ?
நீ தரும் அரிசியில் கூட கலப்படம் இல்லை,
ஆனால் கலப்படம் மிஞ்சிய நஞ்சை உண்டு
உன் வாழ்க்கையை மரித்து கொள்வது யாருக்காக?
எங்கோ நீ போடும் பிச்சையை உண்டு சோம்பல் முறித்து உன்னையே
மட்டம் தட்டுகிறான் ஒருவன்,
அதைக் கண்டு நொந்து செத்து போகிறான் இன்னொருத்தன் ,
ஆட்சி என்னும் மிருகத்தை நீ கையில் ஏந்தி நீ செய்யும் அராஜகம்,
நீ உன் அம்மாவை பிணமாக்குவதற்கு சமம்,[/color]
முட்டாள் மானிடனே மறவாதே,
நீ இப்போது விவசாயம் என்னும் சொர்க்கத்தை காக்கா விடில்,
உன் தலைமுறை குப்பையைத்தான் உணவாக்கி கொள்ளவேண்டும்,
இதை ஏற்க மறுக்கும் முட்டாள் மனிதனே ,
விழித்தெழுக ,விவசாயி என்னும் பொக்கிஷத்தை வாழவை,
விவசாயம் என்னும் கவிதையை நீ எழுதாமல் இருந்தால்,
விரைவில் இவ்வுலகம் சுடுகாடாகி விடும்,
மறவாதே !!!!