FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on March 24, 2017, 02:03:13 AM
-
தனிமையும் இரவும்
வரவேற்பும் விடைபெறுதலும்
கூட விபரீதமானது
விடைதெரியா கேள்விகள்
இல்லா காலமே வாழ்வில் வராதோ
காதலும் வேதனை
நட்பும் சோதனை
சோதரரும் தூரம்
சொந்தமே வேண்டாம்
தனிமையும் இரவும்
காலமும் மௌனமும்
நிகரில்லா புரிதல் தரும்
அறிவை மிஞ்சிச நல்... ஆசான்கள்
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
-
Sarithan anna kavithai super:) nalla sinthanaigal thondrum velaigal sollirukinga:) vazhthukkal na:)
-
நல்ல தலைப்பு நல்ல வரிகளும் கூட... நண்பா சரிதன்! உண்மைதான், இரவும் தனிமையும் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் தோழமையும் கூட.
ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு தனிமையை ஞாபகபடுத்துகிறது, ஒவ்வொரு தனிமையும் ஒவ்வொரு நினைவுகளை ஞாபகபடுத்துகிறது! தொலைவதற்கும் அதற்கு பிந்தைய தேடலுக்கும் காரணங்களை கற்பித்துக் கொள்கிறது இரவும் தனிமையும்.
பெரும்பாலும் சிறிது தனிமையும், நீளும் இரவும், ஒரு தேநீர் கோப்பையும் சிறந்த கவிதைகளை என் பேனா மூலம் பிரசவிக்க வைக்கிறது..!
-
நன்றி தங்கையே.....
மனித இதயங்களை
செப்பனிடும் ஆலோசனை காரன் இரவு.....
-
நன்றி நண்பா மாறன்.....
நீங்கள் பிரசவிக்கும்
பிள்ளைகளை கான
ஆவலுண்டு.....
இங்கே தவள்வதை
அன்றி மேலமும்
கவிக் குழந்தைகள்
உண்டெனில்.....
கண்டிட வாழ்த்திட ஆவல்
வழி செய்க..... முடிந்தால்...
மனிதன் மேல் இரங்கி
அவன் இளைப்பாற
இறைவன் ஈன்ற வரம்
இரவுகள்..... [/b][/i][/font][/size]