FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: JeSiNa on March 13, 2017, 03:50:43 PM
-
இரண்டு முட்டாள் ஆடுகள் ::)
அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன.
அந்த பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன.
முதலாவது ஆடு "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது. உடனே, இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்" என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத்தொடங்கின.
ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன.
நீதி:
விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும்.
-
ஆடுக பேசினது உங்களுக்கு எப்படி கேட்டிச்சி?
ஆடு பாஷ எல்லாம் தெரியும் போல ?
வாழ்த்துக்கள் (எதுக்கும் சொல்லி வைப்போம் )
-
நாங்க சுனாமிலயே பொய் திமிங்கலம் கிட்ட பேசிகிட்டு இருந்தோம் ??? ஆடு மாடு பேசுறது தெரியாத.. :Pநாங்க அப்போவே அந்த மாறி.. 8) எனி வேய் நண்ட்ரி... :)
-
சகோ
திமிங்கலம் கிட்ட கூட பொய் தான் சொல்லுவீங்களா ?
அப்பா யார் கிட்ட தான் உண்மை சொல்லுவீங்களோ ?
நன்றி (எதுக்கும் சொல்லி வைப்போம் )
-
ப்ரோ மீ பாவம்..
-
நன்றிகள் பல சகோ