ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 136
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F136.jpg&hash=3cbd5723506dd0965880182cbc3d01538df3754b)
என் தமிழ் மண்ணே! உன்னை வணங்குகிறேன்..
கயவர்கள் கூட்டத்தில் சிக்கி தவிக்கிறாய்..
உன்னை காப்பாற்ற என் இனம் தயார்ர் ...
கட்டிளம் குமரிகள் , கட்டெழும் காளையர்கள்
வருகிறோம் படையெடுத்து வஞ்சகர்களை களையெடுக்க
விரைகிறோம் வெகு விரைவாய் தூயவனை துடைத்தெடுக்க
கண்டு மிரண்டனர் பயந்தனர் இந்திய அரசியவாதிகள்
திகைத்தனர் திகைத்தனர் உலக அரசியல்
அரசியல் ஓர் வியாபாரமாய் எம் நாட்டில்
அடுத்தவர் பேச்சுக்கு அடிபணிந்து நிற்க..
பலகாலம் மக்களை நினைக்காமல்
அரசியவாதிகள் இன்றும் சுயநலமாய்..
தண்ணீர் இல்லாமல் பல விண்ணப்பங்கள் போட்டும்
கல்லாய் பக்கத்துக்கு அரசியவாதிகளின் உள்ளம்
பொன் விளையும் பூமி மண்ணாய் போகும்
இன்னும் சிலகாலத்தில் எம் நாடு பாலைவனமாய்!
தன் பசி மறந்து மாற்றார் பசி தீர்க்க
பச்சை பசேல் என்ற வயல்வெளி
வறண்டு போவதை பார்க்கமுடியாமல்
இவர்களின் உயிரும் காற்றோடு கலக்கும்
துன்பங்கள் உன் கண் முன்னே
தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும்
உல்லாசமாய் குளு குளு அறையில்
துச்சமாய் எண்ணி அவர்களின் துன்பம்
எம் நாட்டின் மிக பெரிய முதியோர் இல்லம்
நாட்டை ஆளும் நாடாளுமன்றம்
அது ஒரு கயவர்களின் மூடர்களின் கூடம்
உங்கள் அட்டகாசம் கொஞ்ச நாள்தான்..
நாங்கள் நினைத்திடும்! தூய்மையான அரசியலை
உங்கள் ஆட்சிமை போதும்
எங்கள் வழி, எங்கள் கைகளில்
உங்கள் அரசியல் வாழ்க்கை; எங்கள் தீர்ப்பில்
~பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் அந்த பெரிய கயவன்~