FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on February 13, 2012, 06:48:26 AM
-
அடிக்கடி எட்டிப்
பார்க்கும்
மழையை போல
தலையை காட்டுகிறது
உனது ஞாபகங்கள்
*
உரம் போட்டு
வளர்ப்பது போல
உன் நினைவுகளுக்கு
உயிர் வரும் போதெல்லாம்
உரமாகிறது என்
கண்ணீர்
*
அது எப்படி?
சந்தோஷமான
தருணங்களின் பதிவுகள்
அப்படியே தலைகீழாக
துக்கத்தை
தருகின்றன?
*
யார் எதை கேட்டாலும்
அதை பற்றி எனது
கருத்து என்ன
என்பதை விட
நீ என்ன சொன்னாய்
என்பதுதான்
நினைவுக்கு வருகிறது
*
உன்னைவிட உன்
நினைவுகள் என்னை
அதிகமாக நேசிக்கிறன
என நினைக்கிறேன்
இல்லாவிட்டால்
வெறுத்தாலும்
வேண்டாம் போ என்றாலும்
என்னையே சுற்றி சுற்றி
வருமா...
-
நல்ல கவிதை சகோதரி அணு தொடரட்டும் உங்கள் கவிதை பயணம்!
-
உன்னைவிட உன்
நினைவுகள் என்னை
அதிகமாக நேசிக்கிறன
என நினைக்கிறேன்
இல்லாவிட்டால்
வெறுத்தாலும்
வேண்டாம் போ என்றாலும்
என்னையே சுற்றி சுற்றி
வருமா...
intha varigal enaku rompa pidichuruku anu
nala kavithaikal
-
உன் நினைவுகளுக்கு
உயிர் வரும் போதெல்லாம்
உரமாகிறது என்
கண்ணீர்
nice one anuma :-*
-
உன்னைவிட உன்
நினைவுகள் என்னை
அதிகமாக நேசிக்கிறன
miga azagana varigal ...
migavum azagana unmai....