FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: SarithaN on February 24, 2017, 06:21:18 PM

Title: தோழியுடன் தொலைபேசியில் 01
Post by: SarithaN on February 24, 2017, 06:21:18 PM
தோழியுடன் தொலைபேசியில்

நிதிலன் : செவ்வந்தியின் தொலைபேசி அழைக்கிறது
வணக்கம் எப்பிடி இருகிறாய்

செவ்வந்தி :  ம்ம்ம் வணக்கம் நல்லா இருக்கிறன் நீங்க....

நிதிலன் : ம்ம்ம் எனக்கென்ன இருகிறன் சொல்லு

செவ்வந்தி : எங்க வீட்டில இருந்து தொலைபேசி

நிதிலன் : எப்பிடி இருக்கிறாங்களாம்

செவ்வந்தி : அவங்க நல்லாதான் இருகிறாங்க எனக்குதான்
கல்லுபோடுறாங்க

நிதிலன் : ஏன் என்னாச்சு என்ன சொல்றங்க வீட்டில

செவ்வந்தி : வேறென்ன கல்யாண பேச்சுதான்
ஆனால்  இந்தமுறை வழக்கம்போல இல்லை
கண்டிப்போடு அழுத்தம் திருத்தமா இருக்கு.....
மனசு அமைதியா இல்லை.....

நிதிலன் : வாழ்க்கைய வாழ்ந்துதானே ஆகணும் வீட்டுல
சொல்றபடி கட்டிக்கோ.....

செவ்வந்தி : தாங்களும் வாழ்க்கைய வாழ்ந்துதானே ஆகணும்
எப்போ உங்க கல்யாணம் ம்ம்ம்

நிதிலன் : எனக்கும் அதுக்கும் தொலைதூரம்

செவ்வந்தி : எப்போது கேட்டாலும் திருமண உறவை தள்ளிக்
கொள்கிறாய் வாழ்வில் ஏன் இத்தனை வெறுப்பு ?

நிதிலன் : என்மீதே எனக்கு பிடிப்பில்லை
வரப்போகும் என்னொருத்தி மேல் பிடிப்புண்டாகுமோ...
பொய்களை வாழ்வென்பதில் அர்த்தமில்லை

எனக்கு அனைத்தும் வெறுத்து போனது
எதன்மீதும் பிடிப்பில்லை
என்னையே வெறுத்து காலங்கள் கடந்தோடின
மீதமுள்ள வாழ்வில் தேவைகள் எதிர்பார்ப்புகள்
ஏதுமில்லை உள்ளமதில்...

செவ்வந்தி : எப்போது உன்னிடம் மாறுதல்வரும்?
இதையே பேசும் உன் மனம் என் வெறுப்புக்கானது.
நீ மாறவேண்டும் மரணம்வரை இது சாத்தியமில்லை...

நிதிலன் : உண்மைதான் அப்படியானால்
மரணம் விரைவாய் வர வேண்டிக்கொள்.

வலித்த இதயமும் கலங்கிய கண்களும்
அவள் குரலில் தெரிகிறது
மௌனம் மயான அமைதி தொலைபேசி
கணங்கள் நிமிடம் மணியென கடந்தும்
ஒலியெழவில்லை.....
குறுந்தகவல் ஒன்று.... 

செவ்வந்தி : தொலைபேசியை துண்டியுங்கள்
சற்று தாமதமாக பேசுகின்றேன்.

நிதிலன் : மூன்று மணிப் பொழுதுகள் கடந்து
மீண்டும் தொலைபேசி சிணுங்குகிறது.....
என்னாச்சு உனக்கு ஏன் நீண்ட மௌனம் ?
வேதனை படுத்திற்ரனா?
பேசு.....
அழுதியா பைத்தியம்.....

செவ்வந்தி : நான்யாரு எனக்கேன் ங்க வலிக்குது,
எனக்கு வலிக்கும் என்று தெரிந்தா பேசி இருப்பீங்காளா
பரவாயில்லை.....
சொல்லுங்க.....

நிதிலன் : பேச்சை பேச்சோட போகட்டும் என்று விட்டிடு
இதுக்கெல்லாமா அழுதிட்டு இருப்பே மடைச்சி.....
யோசனையில யோசிக்காமல்.....
ஏதோ வாயில வந்திட்டு சொல்லிரன்
போகட்டும் விட்டிடு......

செவ்வந்தி : விடமுடியாதபடி நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன்
எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியல ஆனாலும் எனக்கு தயக்கம்
இல்லை உன்னிடம்.....

தெளிவாக நீண்ட கால யோசனைகளுக்கு பின்னர் தீர்மானித்தேன்

நிதிலன் : அப்படி என்ன தீர்மானமும் தீர்க்கமான முடிவும்?
என்னுடன் பேசுவது இல்லையென்றா ?

செவ்வந்தி : என்னுடைய மரணம் வேண்டுமானால் உங்களுடன்
பேசாமல் தடைபோடலாம்.....

நிதிலன் : பதிலுக்கு பழிவாங்கலா இப்படி எல்லாம் பேசுகிறாய்

செவ்வந்தி : உங்களுக்கு ஒரு அஞ்சல் அனுப்பினேன் பாருங்க
பார்த்துவிட்டு கூப்பிடுங்க

நிதிலன் : பாக்கிறன் இரு................

செவ்வந்தி : வேண்டாமே...ங்க...  இப்போ வையுங்க பாத்திட்டு கூப்பிடுங்களன்

நிதிலன் : என்ன புதுசா இருக்கு நீ செய்றது ம்ம்ம், மாப்பிள்ளையோட
படம் அனுப்பி இருக்கிறாயோ?

செவ்வந்தி : மிக்க நன்றி நல்ல ஆலோசனை மறந்துவிட்டேன்
கணவரது படமதை இணைக்க
இப்போ வையுங்களன் நான் அவரோட படத்தையும் அனுப்புகின்றேன்
கடிதம் காணும் கணத்தில் வந்துவிடும்

நிதிலன் : கல்யாணம் என்றபோவே கூதூகலமாகிற்ரே வாழ்த்துக்கள் முதல்ல

செவ்வந்தி : சொன்னதை செய்யுங்களேன்..... ங்க பாத்திட்டு கூபிடுங்களேன்

நிதிலன் : ம்ம்ம்... சரி கூப்பிடுறன்...  பாத்திட்டு..... 
எதுக்கு புரியலையே... ?  
Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 01
Post by: SarithaN on February 24, 2017, 06:23:24 PM
தோழியுடன் தொலைபேசியில்

சுவைத்தால் தொடரும்.....
Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 01
Post by: ChuMMa on February 24, 2017, 06:49:03 PM
சகோ

வலிகள் நிறைந்த ஆழமான உரையாடல்

அவள் அனுப்புவது நித்திலனின் புகைப்படமோ ?

தொடருங்களேன் முடிவு தெரிய ஆவல்
Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 01
Post by: SarithaN on February 24, 2017, 10:12:10 PM
செவ்வந்தியின் கடிதம் நாளைதான்...
சகோதரா..... 

5 பகுதிகள் வரை நெடுக்கும்.....

கருத்துரைக்கு பணிவான வணக்கம் சகோ