FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: ஸ்ருதி on February 11, 2012, 08:14:54 PM
-
தமிழில் பேசும், எழுதும் யாவரையும் நாம் தமிழர்களாகவும் (தாயக தமிழர்கள் இந்தியர்களாகவும்) நினைத்து கொள்கிறோம். ஆனால் வலைப்பதிவுகள் உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இன்று இத்தகைய பயங்கரவாதிகள் வெளிப்படையாக இந்தியாவிற்கு எதிராக பேச திராவிட இயக்கங்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி கொள்கின்றனர். நன்றாக ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் இவர்களுக்கு தமிழர்களுக்கு ஆதரவாக பேசும் எண்ணம் என்று எதுவும் கிடையாது. தமிழகத்தை இந்தியாவிலிருந்து கூறு போட வேண்டும் என்பது தான் இலட்சியம். இத்தகைய செயல் தமிழகத்தில் மட்டும் நடைபெறவில்லை கேரளா, அஸ்ஸாம், காஷ்மீர் என நீக்கமற நிறைந்துள்ளது.
தமிழர்களுக்கு ஆதரவாக ஆரம்பித்த சுயமரியாதை இயக்கம், இன்று தவறானவர்கள் கையில் சிக்கி சீரழிகிறது. இது குறிப்பிட்ட மதத்தினருக்கு, குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான இயக்கமாக மாற்ற பட்டு விட்டது. இன்று வலைபதிவிற்கு தூய தமிழ் பெயரை இட்டு கொண்டு, பெரியார் படத்தை போட்டு கொண்டால் போதும்,
இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசலாம்.
பார்ப்பணீயம், தலித்தியம், தேவரியம், வன்னியரியம், கவுண்டரியம் என்று கூறி திட்டமிட்டு தமிழர்களை ஒன்று சேரவிடாமல் குழி பறிக்கலாம்
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கினால் கூட இது உள்நாட்டு இந்து, முஸ்லிம் பிரச்சிணை என்று திசை திருப்பி விடலாம்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, உலகின் சிறப்பு வாய்ந்த பாராளுமன்றத்தை தாக்கிய ஒரு பயங்கரவாதியை கூட நிரபராதி என்று பிரச்சாரம் செய்து கொள்ளலாம்.
"மதசார்பின்மை என்பது எந்த ஒரு மதத்தையும் எதிர்ப்பது அல்ல. தன்னுடைய மதத்தின் தூய கருத்துக்களை ஒழுங்காக பின்பற்றி கொண்டு பிற மதத்தினருடன் இணங்கி வாழ்வதாகும்."
"பகுத்தறிவு என்பது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தலைவர்கள் கூறியதை கிளிப்பிள்ளை போல திரும்ப கூறுவதில்லை. இன்றைய சூழலிருந்து மனிதர்களை ஏற்றமிகு வாழ்விற்கு கொண்டு செல்ல தேவையான கருத்துக்களை முன் வைத்தல்."
வாருங்கள் இத்தகைய பொலி மதசார்பின்மை வாதிகளை புறக்கணிப்போம். தேசிய நீரோட்டத்தில் ஒன்று படுவோம்.
உலக தீவிரவாதமும் போலி மதசார்பின்மையும்
லண்டன், அமெரிக்கா, நைஜீரியா, சூடான், இஸ்ரேல், பாலஸ்தீனம், ருவாண்டா, எகிப்து, காம்பியா, சுவாஸிலெண்ட் முதல் கொண்டு உலகம் முழுவதும் தீவிரவாதம் பரப்புவது இந்து முஸ்லிம் பிரச்சினையா?
இப்பயங்கரவாதம் யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடையே உலகம் முழுவதும் நடை பெற்று கொண்டுள்ளது.
-
இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசலாம்.
பார்ப்பணீயம், தலித்தியம், தேவரியம், வன்னியரியம், கவுண்டரியம் என்று கூறி திட்டமிட்டு தமிழர்களை ஒன்று சேரவிடாமல் குழி பறிக்கலாம்
Unmai thaan shur ipalam ipadi neraya per irukanga kurippita oru inaththai matum paliththu pesi otrumaiyai seeerkulaikka ninaikiraarkal
padipavargal than pagutharinthu nadanthu kolanum
-
இந்த கட்டுரைக்கு பதிலளிக்க கடமை பட்டுள்ளேன் சகோதரி ஸ்ருதி!
இந்த கட்டுரையின் பதிவர் தேச பக்தியையும் பயங்கர வாதத்தையும் பற்றி அவர் பாணியில் எழுதியுள்ளார் அவரின் எண்ணம் தவறு என்பதை சுட்டி காட்டுகிறேன் என் பாணியில்.
இந்தியாவில் இருந்து தமிழர்களை பிரிப்பதற்கு சதி திட்டம் நடப்பதக கூறும் இந்த பதிவரின் நோக்கம் என்ன போலி தேச பகத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்த நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் எதிர்த்து குரல் கொடுக்க கூடாது என்று விருபுகிறாரா?
இது தான் இவரது போலி தேச பக்தியா?
நாட்டில் யார் எங்கு வஞ்சிக்க பட்டாலும் பரவாயில்லை ஆனால் நாங்கள் போலி தேச பக்தி பேசுவதை நிறுத்த மாட்டோம் யார் எங்கு வஞ்சிக்க பட்டாலும் பரவ இல்லை என்பது தான் இவரது நோக்கமா?
தமிழகத்தை இந்தியாவிலிருந்து கூறு போட வேண்டும் என்பது தான் இலட்சியம். இத்தகைய செயல் தமிழகத்தில் மட்டும் நடைபெறவில்லை கேரளா, அஸ்ஸாம், காஷ்மீர் என நீக்கமற நிறைந்துள்ளது.
இவருக்கு தேசம் கூறு போடப்படுவதை பற்றிதான் கவலை என்று நினைக்கிறேன் அங்கு வாழ கூடிய மக்களின் மீது எந்த கவலையும் இருப்பதாக தெரிய வில்லை.
இவர் கூறும் அஸ்ஸாம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது சற்று சிந்தித்து பார்க்கவும். அஸ்ஸாமில் பழங்குடியின மக்கள் அரச இராணுவத்தால் வஞ்சிக்கப்படுவர்கள் அநியாயமாக கொலை செய்யப்படுவார்கள் கொலை என்று சொல்வது கூட தவறு படுகொலை செய்யப்படுவார்கள் இதை எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இவர் பிரிவினைவாதிகள் என்று கூறுவார்.
இதை பற்றி கவலைப்படாமல் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க திராணி இல்லாமல் போலி தேசிய வாதம் பேசும் இவர் பகுத்தறிவு வாதியா?
கஷிமிரில் அந்த மண்ணின் மைந்தர்கள் இந்திய ராணுவத்தால் சிறப்பு அதிகாரம் என்ற பெயரில் கண்ட இடத்தில் கேள்வி கேப்பாடு இல்லாமல் கொல்லப்படுவார்கள், அங்கு உள்ள சகோதரிகள், தாய்மார்கள் இந்த அரச படையினரால் மானபங்க படுத்தப்படுவார்கள் இதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் பிரிவினை வாதிகள்.
இவர் போன்று எதையும் கண்டு கொள்ளாமல் தேசத்தை உடைக்க பார்கிறார்கள் என்று சொல்லும் போலி தேச பக்திவாதிகள் பகுத்தறிவுவாதிகள். இது தான் இவர்களின் பகுத்தறிவா?
மனித நேயத்தோடு குரல் கொடுப்பவர்கள் பிரிவினைவாதிகள் பயங்கரவாதிகள் என்று அடையாலப்படுத்தப்பவர்கள் இவர்கள் போன்ற உண்மைக்கு குரல் கொடுக்க திராணியற்றவர்கள் தேச பக்த்தியாளர்கள்.
இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசலாம்.
இவரை போன்றவர்களுக்கு எது இந்தியாவின் ஒருமை பாடு?
அப்பாவி மக்களுக்கு எதிராக நடக்கும் அரச பயங்கரவாதத்தை பற்றி பேசினால் அது இந்தியாவின் ஒருமைப்படை சீற்குளைபதாம்.
இவர்களை போன்று வாய் மூடி கோழைகளாக இப்படி ஒரு கட்டுரையை எழுதுபவர்கள் பகுதரிவாதிகளாம். நல்ல வேடிக்கை.
பார்ப்பணீயம், தலித்தியம், தேவரியம், வன்னியரியம், கவுண்டரியம் என்று கூறி திட்டமிட்டு தமிழர்களை ஒன்று சேரவிடாமல் குழி பறிக்கலாம்
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கினால் கூட இது உள்நாட்டு இந்து, முஸ்லிம் பிரச்சிணை என்று திசை திருப்பி விடலாம்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, உலகின் சிறப்பு வாய்ந்த பாராளுமன்றத்தை தாக்கிய ஒரு பயங்கரவாதியை கூட நிரபராதி என்று பிரச்சாரம் செய்து கொள்ளலாம்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் இவரின் பார்வையில் பிரிவினை வாதிகள். இன்றும் தமிழ்நாட்டில் அப்பாவி மக்களுக்கு எதிராக எத்தனையோ சாதிய வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. என் கண் முன்னால் கூட இத்தகைய சாதிய வன்கொடுமைகளை பார்த்திருக்கிறேன். இதற்க்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்கள் பிரிவினைவாதிகளா?
சமீபத்தில் நடந்த பரமக்குடி துப்பாக்கி சூடு கூட ஒரு சாதிய வன்கொடுமை தான். வேண்டுமென்றே அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலிஸ் காரர்கள் இவரின் பார்வையில் நல்லவர்கள் தலித் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டிக்க தக்கது என்று கூறும் மனிதநேயம் மிக்க சில நல்லவர்கள் இவரின் பார்வையில் பிரிவினை வாதிகள்.
இவர் சொல்லுவது போல் பார்த்தால் நாட்டில் எங்கு யார் ஒடுக்கப்பட்டாலும் அதற்க்கு எதிராக குரல் கொடுக்க தேவை இல்லை. அனைவரும் போலி தேச பக்தியாலர்களாக (கோழைகளாக) இருக்க வேண்டும் என்று கூறுகிறார் போலும்.
குஜரத்தில் நடந்த கலவரம் 2000 அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள் இதை செய்தது இந்துத்துவ பாசிஸ்டுகள் என்று சொன்னால் அது பிரிவினை வாதம் ஆனால் அதை இவர்களை போல கோழைகளாக கண்டு கொள்ளாமல் விட்டால் அதி தேச பக்தி.
இப்படி ஒரு தேச பக்தி தேவைதானா?
இவர் குஜராத் கலவரத்தை பற்றி பேச வில்லை, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பை பற்றி பேச வில்லை, மலேகான் கொண்டு வெடிப்பை பற்றி பேச வில்லை, ஹைதராபாத் மக்க மஸ்ஜித் குண்டு வெடிப்பை பற்றி பேச வில்லை இதில் அனைத்திலும் இடுபட்டது ஹிந்துத்துவ பாசிஸ்டுகள் என்பது நிரூபணம் ஆனா நிலையில் ஏன் இவர் இந்த கட்டுரையில் இதை பற்றி விமர்சிக்க வில்லை?
இதில் இருந்து இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது. பொது மன்றத்தின் ஆரோக்யம் கருதி இதை நான் விரிவாக பேச விரும்ப வில்லை.
இந்த கட்டுரையின் ஆசிரியரின் வக்கிர புத்தியும் தெளிவாகிறது.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பது பிரிவினைவாதம் இவர் போன்று குரல் கொடுக்காமல் போலி தேச பக்தியின் பின்னல் ஒன்றிணைய சொல்வார் இதை எப்படி ஏற்றுகொள்ள முடியும்?
லண்டன், அமெரிக்கா, நைஜீரியா, சூடான், இஸ்ரேல், பாலஸ்தீனம், ருவாண்டா, எகிப்து, காம்பியா, சுவாஸிலெண்ட் முதல் கொண்டு உலகம் முழுவதும் தீவிரவாதம் பரப்புவது இந்து முஸ்லிம் பிரச்சினையா?
இப்பயங்கரவாதம் யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடையே உலகம் முழுவதும் நடை பெற்று கொண்டுள்ளது.
இவர் குறிப்பிடும் நாடுகளில் நடப்பதற்கு பெயர் இவர் பார்வையில் பயங்கரவாதம் ஆனால் அங்கு ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்ட மக்களின் பார்வையில் விடுதலை போராட்டம்.
இவரை பொருத்தவரை மக்களை பற்றி கவலை இல்லை இவருக்கு தேசம் பிரிந்து விட கூடாது மக்கள் எக்கேடு கேட்டு போனாலும் இவரை போன்றவர்களுக்கு கவலை இல்லை. இவருடைய இந்த கட்டுரையில் இருந்தே புரிகிறது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக குரல் கொடுத்தால் அது பிரிவினைவாதமாம்.
இவரை போன்று எந்த கவலையும் இல்லாமல் இப்படி ஒரு கட்டுரையை எழுதி விட்டால் அதற்க்கு பெயர் தேச பக்தியாம்.
இதற்க்கு பெயர் போலி தேசபக்தி இப்படி பட்ட தேச பக்தி எங்களுக்கு தேவை இல்லை.
அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் மக்களை எல்லை கோட்டினை வைத்து அடக்கி விட முடியாது. உலகில் எங்கு மக்கள் ஒடுக்கபட்டலும் குரல் கொடுப்பார்கள் இத்தகையவர்களை பிரிவினைவாதிகள் என்று குர்ப்பிட்டாலும் கவலை இல்லை. எங்களுக்கும் எல்லை கொட்டினுள் உள்ள போலி தேசபக்தி தேவை இல்லை.
உலகில் உள்ள எல்ல மக்களையும் எங்கள் சகோதரர்கள் என்று நினைப்போம் எங்களை எல்லை கோட்டை வைத்தும் தேச பக்தியை வைத்தும் அடக்கி விட முடியாது என்பதை தெளிவு படுத்தி கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்டவர்கள் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும். இறுதி மூச்சு உள்ளவரை. இவர்களை போல் கோழைகளாக வாழ விருப்பம் இல்லை எங்களுக்கு.
ஆனால் வலைப்பதிவுகள் உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இது இந்த கட்டுரையின் ஆசிரியருக்கே முற்றிலும் பொருந்தும். இவரை போன்று போலி தேசபக்தியை பேசுபவர்கள் எங்கு இருந்து கொண்டு எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்து விட்டார்கள் போல.
மக்களுக்காக குரல் கொடுப்பர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்லும் இத்தகைய போலி தேசபக்தியின் பின் செல்ல வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.
சகோதரி ஸ்ருதி நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள் மேல்குரிப்பிட அனைவருக்காகவும் குரல் கொடுப்பது பிரிவினவாதமா? அல்லது எதையும் கண்டு கொள்ளாமல் தேசபக்தி போர்வையில் இவர்களை போல் வாழ்வது சிறந்ததா என்பதை.
-
"மதசார்பின்மை என்பது எந்த ஒரு மதத்தையும் எதிர்ப்பது அல்ல. தன்னுடைய மதத்தின் தூய கருத்துக்களை ஒழுங்காக பின்பற்றி கொண்டு பிற மதத்தினருடன் இணங்கி வாழ்வதாகும்."
இதை எல்லாரும் பின்பற்றினால் சாந்தியும் சமாதானமும் நிலவும்