(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-Uwn6z0DIjJM%2FTzMrgPWRsSI%2FAAAAAAAAGxg%2FhBdd7jkYO58%2Fs200%2Fsinthikkavum.jpg&hash=2b2557d38af21ad2bff071560dd467ad6dfac80a)
சென்னை: மெரினா கடற்கரை வைத்து எடுக்கப்பட்ட படம் இது. பசங்க படத்தை எடுத்து தேசிய விருதுவரை சென்றுவந்த பாண்டிராஜ்தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆன மெரினாவை சுற்றி படம் நகர்கிறது. மெரீனா என்றாலே காதலர்கள், சுண்டல், குதிரை சவாரி என்று எண்ணத் தோன்றினாலும் அதையும் தாண்டி அதன் பின்னால் மறைந்திருக்கும் இருக்கும் ஏழை, எளிய மக்களின் சோகங்களை அப்படியே சொல்கிறது இந்தப்படம்.
குழந்தை தொழிலாளர்கள் என்பது ஒழிக்கப்பட வேண்டியது என்பதையும் அவர்களுக்கு கல்வி கிடைப்பதன் அவசியத்தையும் சொல்லும் ஒரு அருமையான திரைக்காவியம் இது. விஜய் தொலைக்காட்சியில் நிகழ்சிகள் நடத்தும் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளார் இயக்குனர்.
முதியவர்களுக்கு வீட்டில் ஏற்ப்படும் பிரச்சனைகளையும், தற்போதைய காதலர்களின் நிலையையும் அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். கோடிக்கணக்கில் பணத்தை விரயம் செய்து பெண்களை போகப்பொருளாக காட்டி தொப்புளில் பம்பரம் விட்டு, தொடை இடுக்குகளில், மார்பக இடைவெளிகளில் கேமிராவை நுழைத்து காம விரசங்களை தூண்டும் படங்களை எடுக்கும் இன்றைய தருணத்தில் சமூகத்திற்கு தேவையான நல்ல செய்திகளை சொல்லிய இயக்குனருக்கு ஒரு வீர வணக்கம்.
இன்றைய காலத்தில் எடுக்கப்படும் சினிமாக்கள் தமிழர் கலாசாரத்தை, பண்பாடை கெடுக்கும் முகமாக விளங்குகின்றன. சினிமா என்கிற ஒரு அழகான வெகுஜன ஊடகத்தை சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தவும் அதே நேரம் மக்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் கொலை, கொள்ளை, ரவுடிசம் முதல் காம விரசம் வரை உள்ள விடயங்களை காட்டி பணம் சம்பாதிக்கும் இன்றைய கீழ்த்தரமான இயக்குனர்களை விட்டு இவரை போன்ற சிலர் உயர்ந்து நிற்கின்றனர். இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கு நமது மனம்மார்ந்த வாழ்த்துக்கள்.