FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 07, 2012, 09:12:58 PM
-
அழகான ஆற்றில்
கல்லை வீசினாய்
கலங்கியது
நீர்
மட்டும் அல்ல
நானும் தான்...
கலங்கிய நீர்
தெளிவு
பெற்றது...
உன்னால்
தெளிவாகாமல்
இருப்பது நான்.....தான்
-
காதல் வந்தால் இப்படித்தான் மனம் அலைபாயும் என்று கவிதை வரிகளைளில் சொல்லிவிடீர்கள் சகோதரி ஸ்ருதி!
-
உன்னால்
தெளிவாகாமல்
இருப்பது நான்.....தான்
chlm kalai erinthavanal matum ithai theylivu padutha mudium
-
குழம்பியது ஏன் என கூறு முதலில்
தெளிவு படுத்த வழி கூறுகிறேன் - அதற்க்கு முன்
கல் எரிந்ததர்க்கான காரணத்தை
கூறுவதற்கு கடமைபட்டுள்ளேன் .
ஆசை ஆசையாய் உன்னை காணவந்தும்
வாய்பில்லாமல் வெளியேறினேன்
வழியில் தாகம் பீரிட்டதால்
ஆற்றில் நீர் பருக தலைகுனிந்தேன்
ஆற்றிலோ நிலவின் பிரதிபலிப்பை
பார்த்தமாத்திரத்தில் உன் நினைவு
நினைவின் வனப்பை அளித்து .
ஆத்திரத்தை அள்ளி அள்ளி ஊற்றியது
நிலவின் வட்டமுகம் - ஆத்திரத்தில்
நிகழ்ந்ததே அந்த சம்பவம்..
-
Ama aathula kal veesinathuku nee en kulambina :S
Un heart ena aathukula irunthucha
-
நல்ல கவிதை ... முதல் பார்வையின் தாக்கத்தை புலப்படுத்தும் கவிதை நன்று