ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 131
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F131...jpg&hash=5ff41db8e944556bfcc240e43c614ca239902e26)
இரு மனம் ஒப்புக்கொண்ட திருமணம்....
உயிரும் உணர்வும் பகிரப்பட்ட சங்கமம்....
அதன் வழி தொப்புள்கொடி உறவான பந்தம்....
இரு துருவங்களிடையே நிலைத்த சொந்தம்....
தாயின் அன்பைப்பெற்று தந்தையின் துணிச்சல் கொண்டு
சிறகு முளைத்த பட்டாம்பூச்சியாய் பறந்திட மறந்து.
தாயொருபுறம் தந்தையொருபுறம் தன் தனிமைக்கு
மருந்து யார் புறம்? என எண்ணித்தொடரும் அவன் இல்லறம்.
நிலவில்லா இருளாய் தன் நாட்கள் கடந்திட...
வெயில் இல்லா நிழலாய் தன் தனிமை தொடர்ந்திட...
கடலில்லா கரையில் தன் உணர்வை எழுப்பிட...
இவையாவும் தற்காலிகம் என அவன் உளம் சொல்ல.
கைகோர்த்து மாலையிட்ட வாழ்வுதனை.....
நா காக்க மறந்து எழுந்த பிரிவு அவரைதை.....
ஏற்றுக்கொண்டு இணையக் கடந்த நாட்கள் அதை....
மீண்டும் பெற துடிக்கும் பிள்ளை அவன் கதை.....
கடந்த காலம் திரும்பி வர மாட்டாது.
கடக்கும் நேரம் மீண்டும் அமையாது.
காலம் சொல்லும் ஒவ்வொரு நொடியும்,
இல்லறவாழ்வில் மன்னிப்பு எனும் சொல்லும்,
தம்பதியரிடையே இருக்க வேண்டிய வேத மந்திரம்.
காலத்தை வென்று அன்பு நிலைக்க அதுவே தந்திரம்.
குழந்தை அவன் பருவம் பெற்றோரின் பொக்கிஷம்.
அதனை உணர்ந்து ஒவ்வொரு நொடியும் இரசித்து
வாழ்வதே சாமர்த்தியம்.
மனது காயப்பட்டால் மன்னிப்பு எனும் சொல் போதும்...
அதனை இருவரும் உணர்ந்தால் இன்னல்கள் தீரும்...
தாம் பெற்ற செல்வமே நமக்குப் போதும்...
இனியும் இந்த தனிமை நிலையாது உயிர் கொடுப்போம்.
மௌனித்த இந்த இல்லற வாழவைக்காப்போம்.
பின் குறிப்பு
யா காவார் ஆயினும், நா காக்க; காவாக்கால்,
சோகாப்பர், சொல் இழுக்குப் பட்டு.
-திருக்குறள்-
அடக்கிக் காக்கவேண்டிய ஐம்புலன்களுள்
எதை அடக்கிக் காக்காவிட்டாலும் நாவையாவது
அவசியம் அடக்கிக் காக்கவும். அவ்வாறு காக்காது
போய்விடின் சொற் குற்றம்பட்டுச் சிறைக் காவல்தண்டனை பெறுவர்.
இங்கு சிறைத்தண்டனையாக நான் பார்ப்பது மௌனித்த
அவர்கள் மகிழ்ச்சியான வாழ்வையிறுத்து தொடரும் தனிமை