FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on December 30, 2016, 08:13:58 PM
-
இருபது வருடம் வளர்த்த தாயை
இருபது நொடிகள் பார்த்த அவள் மறக்கடிக்கிறாள்
இருபது நொடி அவளை பிரிந்தாலும்
இருபது யுகமாய் மாற்றியடிக்கிறாள் ..
காதல் பெரிதா இல்லை
தாயின் அன்பு பெரியதா ?
-
ஆழ்ந்து சிந்திக்க வைத்த கவிதை..
அவள் தாயை மறக்கடிக்கச் செய்யவில்லை..
இன்னொரு தாயாய் உருவெடுத்து கொண்டிருக்கிறாள்..
பாசத்தில் ஏது பாகுபாடு..
ஒருத்தி நம்மை சுமந்த பெண்..
இன்னொருவள் நமக்காக சுமக்க போகும் பெண்..
-
ஒருத்தி நம்மை சுமந்த பெண்..
இன்னொருவள் நமக்காக சுமக்க போகும் பெண்..
மிகவும் அருமையான விளக்கம் நண்பி
-
ஒரு தாய் உருவாக ...
உன் தாய் கனவாக ...
நினைப்பது என்ன நியாயம் தோழி ..?
-
வணக்கம்!
தாயை மறந்தால், ஏன்!
தாயை சரியாக உணரா ஒருவனால்
இன்னொருத்தியை தாயக்க முடியும்.
ஆனால் அவனால் நல்ல
கணவனாக நிலைக்க முடியாது!
தந்தையாகவும் இருக்க முடியாது!