FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on December 21, 2016, 12:26:09 PM

Title: ஏரியில் ஒருவன் !
Post by: Maran on December 21, 2016, 12:26:09 PM


ஏரியில் ஒருவன் !


உட்காரப்

புல்வெளி.

எதிரே

நீர்வெளி.

நீர்மேல் எண்ணெயாய்

சூரியன் .

பால் சொட்டுகளாய்

பறவைகள் .

முட்டாமல் மோதாமல்

இணக்கமாய் காற்று .

தூரத் தூர ரயிலோசைக்கும்

செவிக் கூசும் நிசப்தம் .

..............................................

................................

எல்லாம் தவிர்த்து

கவனமாய் காத்திருக்கிறான்

கரையில் ஒருவன் .

தொண்டையை கிழித்து

கண்ணைத் துளைத்த

தூண்டில் முள்ளுடன்

துடிக்கும் ஒரு

மீனைக் காணும் ஆவலுடன் .



Title: Re: ஏரியில் ஒருவன் !
Post by: SarithaN on December 29, 2016, 05:18:23 PM
தோழா மாறா வணக்கம்,

சிறு கவிதையே ஆயினும்
மேலோட்டமாய் கடந்திட
முடியவில்லை தோழா!

எதையாயினும் உணர்த்தி
உலுக்குகிறாய்!

தூண்டில் முள்ளுடன்
துடிக்கும் ஒரு
மீனைக் காணும் ஆவலுடன்

வாழ்த்துக்கள் தோழா, வாழ்க வளமுடன்.
நன்றி