FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 20, 2016, 02:31:13 PM
-
"கடவுளே!
கோடி வருடங்கள்
உன் கணக்கில்
எத்தனை?"
ஒரு நொடி!!
"கோடி ருபாய் "
ஓரு காசு!
"அப்படியென்றால்
ஒரு காசு கொடேன்!"
ஒரு நொடி பொறு
என்றார் கடவுள்
-
வணக்கம் தமிழன்..கடவுளுக்கும் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையோ ...
ஹாஹா கடவுளும் யோசிக்கிறார் போல .. பணம் சேர்ந்தால் குடுக்க மனம் வராதோ.. சூப்பர் தமிழன்.. அழகான சிந்தனை .. வாழ்த்துக்கள் தோழா..
-
ஐயா தமிழ் வணக்கம்.
கோடிகள் கொடினும்
உண்டோ ஓரிடம்
மோட்ச்சத்தில்!
கடவுள் கணக்கில் - மனிதனுக்கு
நொடியே அதிகம்!
கடவுள் கணக்கில் - மனிதனுக்கு
கோடி காசும் போதாதென்பான்!
அழகிய குழந்தை
உங்கள் கவிதை!
வாழ்த்துக்கள் தோழா, வாழ்க வளமுடன்.
நன்றி