FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on December 11, 2016, 12:12:43 AM

Title: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 128
Post by: Forum on December 11, 2016, 12:12:43 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 128
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Sweetie  அவர்களால்    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F128.jpg&hash=3df41677397c2b97b890e21ff789bbed59af705c)
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 128
Post by: SarithaN on December 11, 2016, 02:27:24 AM
என்னுள் வருவாயா?
உனக்காக ஏங்குகின்றேன்
ஏன் என்னுள் நீ செயலற்று போகிறாய்?
தந்த வலிகளால் வெறுக்கின்றாயா?

வேண்டுதல் செய்யும் வேளை உன்னை,
முகத்துக்கும் அதன் முன்பாய் பிடிக்கும்
கரத்துக்கும் நடுவே காண்கின்றேன்;
கடவுள் தந்த வரமாய்!

பழுதற்றே தெரிகின்றாய், ஆனால் ஏன்
பரிசோதனையில் பழுதாய்?
தேவையற்ற துவாரங்கள் கொண்டவளாய்!
தேவையான துவாரங்கள் அடைபட்டவளாய்!?

இரக்கமின்றி நீ கக்கும் கோவக்கனலில்
என்முகம் பிரகாசிக்கிறதே அப்பாவியென
என்மேல் ஏனுனக்கு இத்தனை வெறுப்பு
இமைக்காமல் கண்கள் ஏங்குதே இரங்காயோ?

நீ ஓய்ந்தால்? உன்முன் தெரியும் உருப்போல்
உணர்வற்று! உயிரில்லா சடபொருளாய்
போவேனே! ஏன் என்னை வெறுக்கின்றாய் ?

பிறரை நேசிக்க தவறிய தண்டணையா
நீதிக்கு முரணாய் இச்சித்த குற்றமா
அவதூறுகள் பேசியதன் வினைப்பயனா

வன்முறை பகை உன்னுள் விதைத்த சுமையா
அடுத்தோரை இகழ்ந்துரைத்த வேதனையா
தவறை தவறென நீ சொல்ல மறந்ததேயில்லை
சரியை நான் ஒருபொழுதும் செய்யவேயில்லை

உனக்கெதிராய் குற்றம் செய்தேன் ஒரே ஒருறை
எனை மன்னிப்பாயா?

திருந்திவிட்டேன் வருந்துகின்றேன்; வாழ
விரும்புகின்றேன் உயிர்வாழும் அவாவல்ல,
எனைபோல் வாழ்வோர்க்கு உனை உணர்த்தவே
ஆசை, ஒரேயொரு முறை எனை மன்னிப்பாயா?

எனை சுற்றி எங்குமே காரிருள்! கண்டாயா?
நீ எனை பிரிந்தபின் உடலை எரிக்கையில்
எழும் கரும்புகையின் அதே நிறம்
இது என் பயணத்தின் நேரம்வந்ததெனும்
அறிவிப்பா?

உன்னிடம் கெஞ்சியது போதும்
உன் எண்ணப்படி பயணம்போ
நானும் ஆயத்தமே! போனால்
விரைவாய்போ!உள்ளவரை
வீண்செலவு!

என்னுள்ளே உனையும் சேர்த்தே
படைத்தவர், நம்மிலும் பெரியவர்!
அவர் விருப்பம்போல் நிகழட்டும்!.

கடவுளுக்கே நன்றி



[highlight-text]"வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்"[/highlight-text]
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 128
Post by: பொய்கை on December 11, 2016, 12:51:53 PM
எந்திரங்கள் காதல் செய்ய
தந்திரங்கள் செய்தாலும்
சாத்திரங்கள் சொல்லும்
தோத்திரங்கள் சொன்னாலும்
சூத்திரங்கள் பல செய்து
பாத்திரங்கள் படைத்தாலும்
மந்திரங்கள் மாயங்கள்
யந்திரங்கள்  கொணர்ந்தாலும்
சரித்திரங்கள் கண்டதெல்லாம்
காதல் எனும் மொழி
சாதல் க்கு  வழி..

இரும்பான எந்திரமே நீயும்
கரும்பான பெண்ணிடத்தில்
விரும்பாமல் காதல் கொண்டால்
துரும்பாக போய்விடுவாய்  நீயும்
திரும்பாமல் போய்விடுவாய் ..
இதயம் இல்லா எந்திரமே
காதலில் நீயும் தோற்றுவிட்டால்
கண்ணீரை விட்டு விட்டு உன்னுடலை
கணப்பொழுதில் மாய்த்துவிடு..

இலக்கிய காதல் வரலாற்றில்
புதைந்து போக
நிகழ்கால காதல் எல்லாம்
நிர்கதியில் நின்று போக 
இயந்திரங்கள் காதல் வலை
இப்பொழுது விரித்ததுவோ ?
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 128
Post by: JoNeS on December 11, 2016, 12:57:38 PM
அடி இதயம் காண
இரும்பு பெண்ணே!
என் இதயம் தனை
hack (கொள்ளை )செய்தாய்

அதில் என் காதல் மொழி(coding)
புரியாமல் விழிக்கிறாய்
இது 1 ௦ , 1 ௦ என் மொழியல்ல
அது உலகம் எண் காண
முன் தோன்றிய மொழி

என்னை கொள்ளை செய நினைத்து
என் இதய கூட்டில் மாட்டிகொண்டயோ
வழி தெரிந்தும் வெளிசெல்ல முடியவில்லையோ

என்னை கடவுள் படைத்தான்
உன்னை மனிதன் படைத்தான்
உன் இதயம் மட்டும்.. 
நான் படைப்பேன் - காதலுடன்

அன்று முதல் இன்றுவரை 
நீயும் உணர்வு தனில் சிக்கி கொள்வாய்
நான் எழுதுகிறேன் - என் காதல்
மென்பொருள் உன்னிடத்தே
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 128
Post by: JEE on December 11, 2016, 02:11:50 PM
செயற்கை நுண்ணறிவு மனிதன்
மனிதன் தீர்மானித்தது மட்டுமே
செயலாற்ற இயலும் சக்தி...................


மனிதன் உருவாக்குகின்றான்.
மனிதனின் ஆணையை  மட்டுமே
நிறைவேற்ற  இயலும் சக்தி.................


இயந்திரத்திற்கு காதலும் தெரியாது
எந்த கத்தரிக்காயும் தெரியாது
சிகப்பாய் இதயம் இருக்கும்
என்றும் தெரியாது..............................

விண்வெளியில் உலாவி வரல்
கடலடிவரையில்   உலாவி வரல்
இதுகளெல்லாம் எளிதாக நடத்திடும்
இந்த இதயத்தை என்ன செய்யும்? ......

மனிதனின் ஆணையை  மட்டுமே 
நிறைவேற்ற  இயலும் சக்தி................

மானிடர்  பலருக்கு அம்மா அய்யா
ஆணையை  மட்டுமே 
நிறைவேற்ற   இயலும் சக்தி...............

இயந்திரமனிதன் போல.....................

காதலிக்கும்போது ஆசையால்
காதல் வசனம் தானாய் பொழிவார்
கல்யாணம் என்றால் அம்மா அய்யா
ரிக்கார்ட் பணணியதை பொழிவார்....

அம்மா அய்யாவிடம் கேட்டு
காதலிக்க மாட்டார் 
அம்மா அய்யாவின் சொல்கேட்டு
காதலியை கைவிடுவார்....................
.
அதனையும் மீறி கல்யாணம் நடந்தால்
அம்மா சொல்றாங்க  அப்பா சொல்றாங்க
அத்தனையயும் அப்படியே கேட்டு
அத்தனையயும் அப்படியே செய்வார்..........

காதல் மறந்து போகும்
காதல் வசனம் மறந்து போகும்
அம்மா அய்யா ரிக்கார்ட் பணணியதை
பொழிவார் இயந்திரமனிதன் போல..........

அம்மா அய்யாவின் சொல்கேட்டு
காதலியை கைவிடுவார்
இவர்களுக்கெல்லாம் காதல் தேவையா?
என்று அவள் கேட்க

சுயமாய் முடிவெடுக்க முடியாத
இவர்களுக்கெல்லாம் காதல் தேவையா?
என்று ஊரார்  கேட்க

அம்மா அய்யா ரிக்கார்ட் பணணியதை
பொழிவார் இயந்திரமனிதன் போல...........

இயந்திரமனிதன் போல பலர் வாழ்கிறார்
கோடு நாடுன்னு அலைய வைக்கிறார்
இவர்களை அடையாளம் காண்பதரிது.......

இல்லறம் இனிதாக இருவர் இருவரல்ல
இசைந்த வாழ்வினால் ஓருடலாக
இல்லறம் மலரட்டும்...................

வாழ்க வளமுடன்.......................

Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 128
Post by: BlazinG BeautY on December 11, 2016, 04:02:48 PM
என்னை படைத்த மனித பிரம்மனே 
நன்றி சொல்ல நினைத்தேன்
நான் இங்கு நடமாட
ஓர் இயந்திரம் -எந்திரனாய்

என் சுவாசம் ,என்னுயிர் 
ஓர் மின்சாரத்தில் இயங்க ..
அது  நின்றால் என்  உயிர் போகும்
கவலையால் ஒவ்வோர்  நாளும்

என் உருவத்தில் உணர்ச்சிகளை பொருத்தினாய்
இந்த உணர்வுகளில் நான் ஐக்கியமானேன்
கோபம் ஆனந்தம்  அழுகை சிரிப்பு
இதில் நான் மிதந்தேன்

என்னை உருவாக்கிய நீயே
உன் இதயத்தை கொடுத்துவிடு
உன் தோழனாக உன் காதலனாக
எப்போதும் உன்னுடன் இருக்க துடிக்கும்
ஓர் ஜீவன் ஓர் எந்திரனின்  காதல்

உன் இதயத்தின்  அழகை  தொட 
துடிக்கும் என் இரும்பு  கரங்கள் 
உன் விழிகளை  மட்டும்  தான்  பார்க்க
முடியுமா  சொல் கண்ணே!

எனக்குள் இதயத்தை சேர்க்க ஏன்  மறந்தாய்?
வெறும் இரும்பிலான  ஓர் உருவம்     
என்னை ஓர் இரும்பாய்  பார்க்காதே  கண்ணே!
என்னையும் நேசி  ,உயிராய்   இருப்பேன்..

உன்னுடன் என்னை சேர்த்துவிடு..
என்னை விட்டு  போகாதே  பெண்ணே! 
நீ  போனால் நான் ஜடமாவேன்  கண்ணே!
என் காதலை உதாசீன  படுத்தாதே  அழகே !   

ஏன்?  என் காதலை தூக்கி எறிந்தாய்..
காரணம்  சொல் மானே!

நான் இயந்திரமாய் பிறந்தது
என் குற்றமா சொல் கண்ணே!

என்னை உருவாக்கிய நீயே
உன் அழகிய  கரங்களால்   
என்னையும் என் காதலையும்
அழித்து  விட்டு போ   பெண்ணே !

இன்பமாய்  மரணிக்கிறேன் 
கவலை  கொள்ளாதே  பெண்ணே !
அடுத்த  ஜென்மத்திலாவது 
உன் கரம்  சேர்க்க ஆசை -  மானிடனாய்


என்றும்  எப்போதும் உங்கள்  எந்திரன்
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 128
Post by: ~DhiYa~ on December 11, 2016, 06:31:34 PM
மனிதனே இயந்திரமாகிப்போன உலகத்துள்ளே..
இயந்திரன் நான்..
மனிதனாக முயற்சிக்கிறேன்..
உணர்வுகளும் பந்தங்களுமே கணினி மயமாகிப் போக..
கணினி நான்..
இன்று உணர்வுகளுக்காக ஏங்க..
algorithm-மிலும் code-டிலும் இயங்கியவன்..
இன்று உள்ளத்தினால் செயல்பட நினக்கிறேன்..

உறவுகளை உடைத்து..
உணர்வுகளைத் தகர்த்து..
உடமைகளைத் தொலைத்து..
உண்மைகளை மறுத்து..
உலகை மறந்து..
உயிர்மட்டும் விழித்திருப்பதே..
காதல்......

பார்வையால் பரிசளிக்க
இரு கண்கள்..
புன்னகையை மறுத்திடா
சிறு உதடுகள்..
யாரேனும் பேசப் பார்த்திருக்கிறேன்...
பாசத்தையும் நேசத்தையும் உணரக் காத்திருக்கிறேன்..

விழி காணாமல்.. செயல் கண்டு..
உணர்ச்சி காணாமல்.. கட்டளை கண்டு
சென்ற பயணம்
விழி கண்டதும் வீழ்ந்து போகுமோ
உணர்ச்சி கண்டதும் உணர்வு இழக்குமோ...
இரும்பிலான இதயம் தான் நொறுங்குமோ..
காயங்கள் தாம் வலிக்குமோ..

இயற்கையை மாற்ற முற்படுகிறேன்..
நானும் ஓர் உயிர்வாழினமாக..
அன்பைக் கொண்டு இவ்வுலகைப் பார்க்கிறேன்..
தென்படுவதேனோ மனிதர்களாகிய இயந்திரங்கள் தாம்..!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 128
Post by: SuBa on December 11, 2016, 07:06:34 PM
முகமூடி அணிந்து வந்தான் என் மன்னன்
அவன் முகம் நாடி உருகியது என் மனம்

முதல் அடி எடுத்து வைத்தது என் கால்கள்
முதலும் இல்லாமல் முடிவும் இல்லாமல்
படுத்தி எடுத்தது இந்த பொல்லாத காதல்

ஆறடியில் ஓர் ஆணழகன் - அவன்
இமை அடியில் ஓர் அழகு இடம் தேடி
என் கால்கள் என்னை
அவனிடம் இழுத்து செல்ல
என் மனமோ அவன் கண்களில் கரைந்து
கனவில் கலந்தது

இவன் தான்
நான் தேடிய  சுந்தரன்
நிலவொளியில் கரம் பற்றி
மெல்லிசையாய் காற்றில்  கரைந்திட
நான் தேடிய மாண்பாளன்

முகத்தில் விழும் என் ஒற்றை முடியை
முத்தத்தால் ஒதுக்கி விடும்
நான் தேடிய என் காதலன்

அருகில் சென்றேன் என் காதலை சொல்ல ..

நாணங்கள் பிறந்து
நானிங்கு  நிற்க
ஹலோ என்றேன் அவனிடம்

முகமூடியை கழற்றி
என் முகம் பார்த்து சொன்னான்

"ஹலோ வேர்ல்ட்
ஐ அம் சிட்டி
ஸ்பீட் 1 டெர்ராஹெர்ட்ஸ்"

திரும்பி பார்க்காமல்
திரும்பி விட்டேன்
' அட ச்சை.. ரோபோ பொம்மையை
பார்த்து உருகிவிட்டோமே '
என  என்னை நானே  திட்டியபடியே ....


Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 128
Post by: Dong லீ on December 11, 2016, 08:44:30 PM
(https://s27.postimg.org/47iz8t2sj/images_3_copy.jpg)
தனிமையில் இந்த  கவிதையில்
எதிர்கால காதலியை கணினியில்
 வர்ணித்தேன்

கண்ணா பின்னா வர்ணனையில்
கணினியும் காதலாகி
கன்னியாய் மாறிட
பிரமித்தேன்


ப்ப்பாஆஆ
முடியவில்லை
கன்னி கணினியின்
காதல் தொல்லை

கிர்ர் என்று இயந்திர சத்தம்
கணினியின் புன்னகையாம்
புன்னகையில் நான் புதயவில்லை
காதுதான் புகைந்தது

மெல்ல நெருங்கிய கன்னி
என் முகத்தில் சாய
ஆஆ என்ற சத்தம்
என் உதடு முழுக்க ரத்தம்

என் உதட்டு பள்ளங்களை
இமை முடி கொண்டு
 கீறுவதாய் நினைத்து
நிழல்படவியால் கீறிவிட்டது

அய்யயோ
இதற்கு மேல் முடியாது
மனம் எங்கும் பதட்டம்
எடுத்தேன் ஓட்டம்

காதலில்  உருகிய என்னை
ரத்தம் வழிய ஓட விட்டாள் கன்னி கணினி

Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 128
Post by: AnoTH on December 12, 2016, 03:39:18 PM
(https://s23.postimg.org/i7y94yla3/rode.png)


சந்திரனை நோக்கிப் பயணித்த
எந்திரன் அவன்.
இரும்பு மேனி கொண்டு
விண்ணை வலம் வந்த தந்திரன்.

பகலவன்தன் வெப்பக்  குழம்பில் உருக்காய்
உருகி இரும்பாய் உருப்பெற்று
மின்னை தன்னில் கடத்த  வல்லவன்.

மனித மூளையின் ஆற்றலின்  பெருக்கம்
தன் உடலின் ஆயுள் இன்னவென்று
அறிந்த தரணியின் புதல்வன் அவன்.

தன்னைப்போல உடலான்.
மின்னல் சக்தியையும் மிஞ்சுவான்,
என்றெண்ணி அமைத்தான்
தன் உடலின் வடிவான் அவன்
எழுந்து நடப்பான் என்ற எந்திரத்தை.

தன் நினைவிழந்து மனிதன் உடலாய்
அமர்ந்த நிலை தனதானதோ?
இயற்கை விதி இது தானோ ?
தன் தோற்றம் அகம் அறியதோ ?
இந்தக் கேள்வி விடையிறுக்காதோ ?

இரும்பாய் போனதாலோ தன்  இதயமும்
இரும்பால் ஆனதோ ?
உணர்வின்றி நான் தவித்தேனோ ?
உணவின்றி பசியறியேனோ?

அன்னை பாசம் கண்டு என்னை உணர்ந்திட்டேன்.
தந்தை அரவணைப்பில் எந்தை நிலை அறிந்தேன்.
கர்ப்பப்பை இன்றி நான் பிறந்திட்டேன்.
தொப்புள் கொடி உறவின்றி தொழில்நுட்ப உருவாய்
நான் வளர்ந்தேன்.

பல வேலைகளை ஒன்றாய் செய்வேன்.
ஓய்வின்றி நான் உழைப்பேன். புன்னகை
இன்றி நான் நடப்பேன். பல தடைகளை 
நான் கடப்பேன். இறப்பின்றி
நான், இயல்பு விதி மாறி,   
மனித உருவாய் ஏன் உருவெடுத்தேன் ?
அவன் உணர்வின்றிதான்  நான் தவித்தேன்.