FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 08, 2016, 09:14:13 AM
-
காதல் ஏமாற்றம்
எனக்கு மட்டும் தானா
அதோ அந்த அலைகளை பாருங்கள்
எத்தனை ஆவலுடன்
ஓடிவந்து கரையை ஆவலுடன் தழுவி
ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறதே!!!!!
எனினும் அந்த அலைகளின் காதல் ஈரமாக
இன்னும் மணலில் ஒட்டிக் கொண்டிருக்கிறது
உன் மனத்திலோ
என் காதல் இருந்த சுவடே இல்லாமல்
அழித்துவிட்டாயே
உன் காதல் கிடைக்காத என்று
தூக்கத்தைதொலைத்த இரவுகள் பல - இன்று
உன் காதலை மறக்கமுடியாமல்
தொலைத்த இரவுகள் பலப்பல!!!!!
காதலித்துப் பார் என்றான்
கவிஞன் வைரமுத்து
நானும் காதலித்தேன்
கவிஞன் ஆனேன்
உன் காதல் தோல்வி என்னை
கவிஞன் ஆக்கியது
காதலித்துப் பார்
முதுமையிலும் இளமையாகத் தெரிவதை என்றான்
நானும் காதலித்தேன்
உன்னைக் காதலித்தின் பயன்
இளமையிலேயே முதுமையாகத் தெரிகின்றேன்
காதல் ஒரு
கண்ணாமூச்சி விளையாட்டு என்கிறார்கள்
உண்மை தான்
நான் கண்முடி திறக்குமுன்பே
மறைந்து விட்டாயே
-
Azhagaana kavithai vaazhthukal...
-
வணக்கம் தோழா. அழகான வரிகள்.அந்த வரிகள் காதலின் ஏமாற்றத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. காதல் வந்தால் கவிதை வரும்னு சொல்லவங்க தோல்வியிலும் கவிதை வரும் னு சொல்லிட்டீங்க தோழா. வாழ்த்துக்கள் தோழா ...
-
நன்றி ரித்திகா
நன்றி BLAZING BEUTY
-
ஐயா தமிழனுக்கு வணக்கம்,
காதலில் மறதி தற்செயலானது
காதலை வஞ்சித்தோர் உள்ளமும்
கண்களும் படும் வேதனைகள்
சொல்லிட முடியாதவை!
அலையெனும் இதயம்
காதலியாம் கரையிடம்
ஒட்டி செல்லும் ஈரம்
இரத்தமாய் கூட இருக்கலாம்
காதலெனும் அன்பு
அனுபவிக்கும் வேதனை
யார் அறிவார்?
காதலில் எப்போதும் பெண்கள்தான்
குற்றவாளிகளா? பாவம்!
குற்றவாளியும் அவளே
வலிகளும் அவளுக்கே!
கவிதை காதல் உணர்வின் படிப்பினை. நன்றி
வாழ்க வளமுடன்.