FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Leo MaN on October 24, 2016, 05:33:00 PM
-
தனிமையில் உன் நினைவுகளினால்
சிரித்தபோதெல்லாம்
பைத்தியம் என்றார்கள்....
இன்றும் சிரிக்கிறேன்
பாவம் என்கிறார்கள்
அனால் நீயோ .......
-
தோழா சூப்பரா இருக்கு,தோழா அவங்க யாரு..
-
நான் அப்பவே சொன்னேன் தனிமையில இருந்து சிரிக்காதிங்க. பைத்தியம் னு சொல்லுவாங்க னு. நீங்க கேக்கல. இப்போ நன் என்ன செய்ய.....
வாழ்த்துக்கள்
-
காதலின் வழியில் தலைவியை எண்ணி புன்னகைக்கும் தலைவன், திடீரென ஒருவர் அருகில் வரும்போது "அடடா பார்த்திருப்பானோ" என்று தலையை தட்டி கொள்ளும் காட்சி கொடுக்கும் இன்பம் தனி... "என்னை எனக்கே பிடிக்காது" என்று சொல்பவர்களை கூட, இப்படி ஒரு அழகான காதல் நம்முள் இருக்கின்றதே என்றெண்ணி அவரை அவரே நேசிக்க வழி செய்யும் அந்த காதல்...
"நீ தந்த காதலினால் பித்தனாகி சிரிக்கிறேன், ஆனால் நீயோ!!!" என்று நிறுத்தி விட்டீர்கள்... அவளுக்கு இருக்கும் காயங்கள் யாவையும் அவளே அறிவாள், அது கூட வெளிப்படும் அவளது பொய் பூசிய புன்னகையை அவள் வாழ்நாள் இறுதி வரை வெளிப்படுத்த முயலும்போது...
அருமையான கவிதை தோழா, அன்பு வாழ்த்துக்கள்... அசத்தல் தொடரட்டும்...
-
ரெம்ப அருமை தோழா குரு நன்றி தோழா ..தோழி மற்றும் சுவீட்டி உங்களுக்கும் நன்றி .. மகிழ்ச்சி