நம்பிக்கை மோசம்
ஊரெல்லாம் கடன் வாங்கி அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றிக் கொண்டிருந்தான் ஒரு டம்பப் பேர்வழி.
முல்லாவிடம் ஒரு பெருந்தொகையை கடனாக வாங்கி அவரை ஏமாற்ற அந்த டம்பன் தீர்மானித்தான்.
நிச்சயம் முல்லாவை ஏமாற்றி பெரும் பொருளைக் கடனாகக வாங்கி வருவதாக பலரிடம் சபதம் போட்டு மார்தட்டிக் கொண்டான்.
அந்த டம்பன் சாமர்த்தியமாக செயல்பட திட்;டமிட்டான்.
முல்லா தன்னை நம்பிப் பெருந் தொகை கொடுக்கமாட்டார் என்று அவனுக்குத் தெரியும், அதனால் தன் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட ஒரு நாடகம் நடித்த எண்ணினான்.
ஓரு நாள் அவன் முல்லாவிடம் சென்றhன்.
முல்லா அவர்களே எனக்கு ஒரே ஒரு காசு கடனாகத் தர முடியுமா ?ஞ என்று கேட்டான்.
நம்பிக்கை மோசம் செய்யாத யாருக்கும் நான் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கடன் கொடுக்கத் தயங்க மாட்டேன். நீ ஒரு காசுதானே கேட்கிறhய். இதிலே நீ நம்பிக்கை மோசம் செய்யாமல் இருந்தால் பத்தாயிரம் காசுகள் கேட்டாலும் கொடுப்பேன்ஞ என்று கூறி டம்பனுக்கு ஒரு காசு கடனாகக் கொடுத்தான்.
டம்பன் நாலைந்து நாட்கள் கழித்து முல்லா கொடுத்த ஒரு காசு எடுத்துக் கொண்டு அவரிடம் வந்தான்.
ஞமுல்லா அவர்களே தாங்கள் கடனாகக் கொடுத்தத அற்பப் பொருள்தான் என்றhலும் மிகுந்த நாணயத்தடன் பொறுப்புடன் திரும்பிக் கொடுத்து விடுவது என்று வந்திருக்கிறேன். பணவிஷயத்திலே நான் மிகவும் நேர்மையானவன் என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்ஞ என்று கூறிவாறு டம்பன் ஒரு காசை முல,;லாவிடம் திரும்பிக் கொடுத்தான்.
முகத்திலே மலர்ச்சியில்லாமல், ஏதோ உபாதைப் படுபவர் போல ஒரு காசை வாங்கிக் கொண்டார் முல்லா.
டம்பன் அந்த இடத்தை விட்ட அகலாமல் தலையைச் சொறிந்து கொண்டு நின்றhன்.
என்ன சமாச்சாரம் ?ஞ என்று முல்லா கேட்டார்.
ஐயாயிரம் பொற்காசுகள் கடனாகத் தரவேண்டும். நாணயமாக ஒரு காசைப் திருப்பிக் கொடுத்தது போல ஐயாயிரம் பொற்காசுகளையும் திரும்பித் தந்த விடுவேன் ஞ என்றhன் டம்பன்.
உனக்கு இனி நான் ஒரு காசு கூடக் கடனாகக் கொடுக்க முடியாதுஞ என்று முல்லா கோபமாகச் சொன்னார்.
முதலில் நான் வாங்கிய ஒரு காசைத்தான் திரும்பத் தந்தவிட்டேனேஞ என்று ஒன்றும் விளங்காமல் கேட்டான் டம்பன்.
நீ ஒரு காசு கடன் வாங்கிய விஷத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டாய் என்றhர் முல்லா.
டம்பன் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தான்.
முல்லா அவர்களே நான் வாங்கிய தொகையை திரும்பிக் கொடுத்திருக்கும் போது நம்பிக்கை துரோகம் செய்ததாக எவ்வாறு கூறுகிறீர்கள் ?ஞ என்று திகைப்போடு கேட்டான்
நம்பிக்கை மோசந்தான் செய்து விட்டாய் நான் கொடுத்த ஒரு காசை நீ திரும்பி கொடுக்காமல் ஏமாற்றி விடுவாய் என்று நம்பினேன். நீயோ திருப்பிக் கொடுத்து விட்டாய். அதவாது நான் என்ன நம்பினேனோ அதற்கு மாறhக நடந்த விட்டாய் ஆகவே இதுவும் நம்பிக்கை மோசந்தான். அதனால் ஒரு காசு கூட உனக்குக் கடன் தரமாட்டேன் ஞ என்று கூறியவாறே முல்லா வீட்டுக்குள் எழுந்து சென்று விட்டார்.
முட்டாள் காவலர்கள்
முல்லா வாழ்ந்துவந்த நாட்டிற்கு அடுத்த நாட்டிலே சட்டம் ஒன்று போட்டிருந்தார்கள்.அந்தநாட்டின் எல்லைக்குள் யாரும் கோழி முட்டைகளைக் கொண்டு சென்று வியாபாரம் செய்யக்கூடாது. ஆனால் கோழிகளைக் கொண்டு செல்வதற்குத் தடை ஒன்றும் இல்லை.முல்லா அந்த நாட்டுக்கு பிறர் அறியாமல் கோழிமுட்டைகளைக் கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார்.ஒரு நாள் முல்லா கோழி முட்டைக் கூடையுடன் அந்த நாட்டுக்குள் பிரவேசித்தபோது இரண்ட காவலர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர்.மூடபப்பட்டிருந்த அவர் கையிலிருந்த கூடையைப் பார்த்து ஞகூடைக்குள் என்ன இருக்கிறது ?ஞ என்று காவலர்கள் கேட்டனர்.கோழிக்குஞ்சுகள் இருக்கின்றனஞ என்றhர் முல்லா
கோழிக்குஞ்சுகளை எடுத்துச் செல்வது குற்றமல்ல என்றhலும் சுங்க அதிகாரிகள் இந்தப் பக்கம் வரும்போது கூடையை அவர்களிடம் காண்பிக்க வேண்டும் *ஞ என்று காவலர்கள் கூறினார்.அவ்வளவு நேரம் என்னால் தாமதிக்க முடியாதே * இன்று ஒரு நாள் என்னை நாட்டுக்குள் போக விடக் கூடாதா ? என்று கேட்டார் முல்லாஅது எப்படி முடியும். உம்மை எதிர்பாராத விதமாக சுங்க அதிகாரிகள் பிடித்துக்கொண்டு உமது கூடையைப் பரிசோதிக்கும்போது இதிலே முட்டை இருந்து விட்டால் உமக்குத் தண்டனை கிடைப்பது மட்டுமல்ல எங்கள் வேலையும் போய்விடும் ஞ என்றனர் காவலர்கள்.என்னுடைய கஷ்டம் உங்களுக்கு விளங்கவில்லை. நான் உடனே செல்லாவிட்டால் குடி முழுகிப் போய்விடும். தயவு செய்து இன்று என்னை விட்டு விடுங்கள் ஞ என்றhர் முல்லா.காவலர்கள் யோசித்தனர்.
பிறகு இருவரும் கலந்து பேசினர்.பாவம், இந்தப் பெரியவர் அவசரமாகப் போக வேண்டும் என்கிறhர். கூடைக்குள் என்ன இருக்கிறது என்று நாமே பரிசோதித்துப் பார்த்து விட்டு இவரை அனுப்பி விடலாமே என்று இருவரும் தீர்மானித்தனர். கூடையை நாங்களே பரிசோதனை செய்து பார்த்துவிடுகிறேhம்ஞ என்று கூறியவாறு காவலன் ஒருவன் கூடையின் மூடியை அகற்றினான்.கூடைக்குள் ஏராளமான முட்டைகள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பெரியவரே, பொய்சொல்லி அல்லவா எங்களை ஏமாற்றப்பார்த்தீர். சுங்க அதிகாரிகளிடம் நீங்கள் பிடிபட்டிருந்தால் எங்கள் வேலை போய்விட்டிருக்கும்ஞ என்றனர் காவலர்கள்.
முல்லா கோபங்கொண்டவர்போலப் பாவனை செய்து நீங்கள் இருவரும் அடிமுட்டாளாக இருக்கிறீர்களே * நான் பொய் சொன்னேன் என்று ஏன் அபாண்டமாகப் பேசுகிறீர்கள் ? என்று கேட்டார். கூடைக்குள் கோழிக்குஞ்சுகள் இருப்பதாக அல்லவா நீர் சொன்னீர் என்றhன் ஒரு காவலன்.ஆமாம், அப்படித்தான் சொன்னேன் *ஞ என்றhர் முல்லா கூடைக்குள் கோழி முட்டைகள் அல்லவா இருக்கின்றன. இது பொய் அல்லவா * எனக் காவலர்கள் வினவினர். மோசமான முட்டாள்களாக நீங்கள் இருவரும் இருக்கிறீர்கள். இப்போது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். கூடைக்குள் என்ன இருக்கின்றன ?ஞ என்று முல்லா கேட்டார்.கோழி முட்டைகள்ஞ என்று காவலர்கள் பதில் கூறினார்கள்.கோழி முட்டைகளுக்குள் என்ன இருக்கின்றன ? என்று வினவினார் முல்லா.
காவலர்கள் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திரு திருவென விழித்தனர்.என்ன முழுக்கிறீர்கள் ? வேறு மாதிரியாகக் கேட்கிறேன் கோழிக் குஞ்சுகள் எங்கிருந்து வருகின்றன ?ஞ என்று முல்லா கேட்டார்.கோழி முட்டைகளுக்குள்ளிருந்துஞ என காவலர்கள் விடை கூறினர்.அப்படியானால் முட்டைகளுக்குள் கோழிக்குஞ்சுகள் இருக்கின்றன என்று ஆகிறதல்லாவா ?என்று கேட்டார் முல்லா.ஆமாம் என்று காவலர்கள் விடை கூறினர்.அதாவது கூடைக்குள் முட்டைகள் இருக்கின்றன அல்லவாஞ என்று வினவினார் முல்லா.இதைத்தான் நான் சொன்னேன். ஆக நான் கோழிமுட்டைகளுக்குள் உள்ள குஞ்சுகளைத் தான் எடுத்துச் செல்லுகிறேன். ஆகவே சட்டப்படி இது குற்றமல்லஞ என்று முல்லா வாதித்தார்.அந்த முட்டாள் காவலர்கள் முல்லாவுக்கு ஒரு கும்பிடு போட்டு நாட்டுக்குள் செல்ல அனுமதித்தனர்.