ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 120
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F120.jpg&hash=1fbaf3a56d19da0f40d4101ac61a987da4907c96)
சிறு கிராமம் முதல் பெரிய நகரம் ,
வளர்ந்த நாடு வரை
அனைத்து மக்களையும்
மகிழ்விப்பது என்னவோ கேளிக்கையும்
வான வேண்டிகையும்
பொருட்காட்சிகளும்
சில பயம் கலந்த பயணங்களும் தான் ...
அனைவரும் கண்டிப்பாக இதை
கடந்து வந்தவர்களே நாகரிகம் வளர்ந்து பல புதிய
தொழில் நுட்பத்தில் பொருட்காட்சியகம்
பல விதமான ராட்டினங்கள்
வந்தாலும் அவர் அவர் பயணித்தது
காலத்துக்கும் மறக்காத கல்வெட்டு ...
சொந்த பந்தங்கள் சேர்ந்து
அவர் அவர் செய்து வரும் பலகாரம்
பகிர்ந்து பின் அதோடு நிற்காமல்
அங்கு விற்கும் பஞ்சி மிட்டாயில் துவங்கி
சுத்தமில்லாத சமைத்து கொடுக்கும் அனைத்தையும்
பிள்ளைகளுக்காக வாங்கி உண்டு
பிள்ளைகளோடு பிள்ளையாய்
ராட்டினத்தில் ஏற
பணம் கொடுத்து நாம் வாங்கும்
ஒரு வித பயம் கலந்த மகிழ்ச்சி
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது ...
முதல் பல் முளைத்த மழலையர் முதல்
பல் இழந்த பெரியவர் வரை
ஆச்சரியமாக ஒரு வித பீதி கலந்த
சந்தோஷத்துடன் ரசிப்பது பார்க்க அழகே !
இடை இடையே வயது பெண்களை கண்ணால்
வலை வீசி துரத்தும் வாலிபரும்
அந்த பெண்களுக்கு காவலாய் வந்து
எதிர் வரும் பெண்ணை ஓரக்கண்ணால்
பார்க்கும் உத்தமரும் பார்க்க வெட்கம்
கலந்த சிரிப்பே மேலோங்கும் ...
இதன் அடிப்படை கரணம் என்னவோ
இன்று ஒரு நாலாவது ஒன்று கூடி
சந்தோஷமாக இருந்து விட்டு வறுவோமே
என்ற மனதின் ஏக்கமே வாழ்க்கையை
ஒரு வழி பயணமாக பார்த்து
கடந்து போனவர்களை பற்றி கவலை படாமல்
சுகமான நினைவுகளை சுமந்து
இருப்பவர்களுடன் சந்தோஷமாக
வாழுங்கள் .....