FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on October 02, 2016, 10:07:22 AM

Title: புத்தகம் (சுவைத்துப் படிக்க)
Post by: SweeTie on October 02, 2016, 10:07:22 AM
பல்சுவை  பல பக்கங்கள்
பிறப்பு  முகவுரை
பெற்றோர்கள்  அணிந்துரை
வாழும் நாட்கள் பக்கங்கள்
பருவங்கள்  அத்தியாயம்

அறியாத  பருவம்  புரியாத வயசு
குழந்தை  மனசு  மழலைப் பேச்சு
தாயின் அணைப்பு தந்தையின் பரிவு
ஆசான் அறிவுரை  புத்தகங்கள் சுமை

ஆசைகளை தூண்டும இளமை பருவம்
அரும்பு மீசை குறும்பு பார்வை
கைத்தொலை பேசியும் கல்லூரி வாழ்க்கையும்
போட்டா போட்டியும்  நண்பர்கள் அரட்டையும் .

காதலை  தேடும்   வாலிப பருவம் 
நங்கைகள் எல்லாம் அழகாய் தெரிவர் 
தேவதைகளின் தரிசனம்  கிடைக்க 
மன்மதபாணம்  மலர்மிசையேகும்

குடும்பம் கோவிலாய்த் தெரியும் பருவம்
வரவுக்கு மீறிய செலவுகள் சுமக்க
திரை கடலோடித் திரவியம் தேடி
நாயாய் பேயாய் அலையும்நாற்பதாம் அகவை .

ஐம்பது கடக்கும் மீசையும் நரைக்கும்
பணத்தின் பெருக்கம் தலையும் கனக்கும்
வாழ்க்கையில் சொகுசு வண்டியில் சொகுசு
உயர் ரக மதுவகை  உண்டியில் சிறப்பு


வாழ்க்கையை முழுதாய் ரசிக்கும் பருவம்
காதலைத் திரும்ப அசைபோடும் வயது
துணையின்  தேவையைப் புரியும் பருவம்
காமம் இல்லாத காதலைக் களிக்க
அறுபதாம்  அகவையும் அண்மையானதோ

இனிப்பு எதிரி காரம் பகைவன் உப்பு விரோதி
மதுப்  போத்தல்களுக்கும் நிரந்தர விடுதலை i
அடிக்கடி மருத்தவ பரிசோதனையும்  மாத்திரைகளும்
விரைந்தது நானல்ல  எழுபது அகவை.

தனிமை தொலைக்க நண்பர்கள்  கூட்டம்   
சீரில்லா காலநிலை  சீர்கெட்ட  சமுதாயம் என
பலதும் பத்தும் பழையன  பேசவும்
பற்றுக்கள் அறுத்து சித்தாந்தம் பேசவும்.

பற்கள் விழுந்து சொற்கள்  புரண்டு
தலையது  நரைத்து  வெண் பஞ்சாகி
நடை தளர்ந்து கண்களும் மங்கி
நாட்களை என்னும் காலமும் வந்ததோ

கடைசிப் பக்கம் எழுதும் உரிமை
நம்மிடம் இல்லை
முகவுரை எழுதியவன் முடிவுரையும் எழுதுவான்
காத்திருப்போம் அதுவரை.........
Title: Re: புத்தகம்
Post by: ரித்திகா on October 02, 2016, 01:13:06 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animatedgif.net%2Fplants%2Fflowerline2_e0.gif&hash=62c947f070d7eaad732126f04f751a00be4731d8)

வணக்கம் செல்லம் ....
வாழ்க்கையின் அத்தியங்களை அழகாக
கூறியுள்ளீர் .....
தங்கள் புத்தகத்தின் ஒவ்வொரு ஏடுகளையும்
ஒன்றுக்கு மூன்று முறை ரசித்து மெய்மறந்துப் படித்தேன்...

''முகவுரை எழுதியவன் முடிவுரையும் எழுதுவான்
காத்திருப்போம் அதுவரை.........''
காத்திருக்க தானே வேண்டும் ....
எழுதியன் வந்து முற்று புள்ளி வைக்கும் வரையில் .....
மிக அருமை தங்கம் ....
வாழ்த்துக்கள் .....

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animatedgif.net%2Fplants%2Fflowerline2_e0.gif&hash=62c947f070d7eaad732126f04f751a00be4731d8)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fyoursmiles.org%2Fgsmile%2Fflower1%2Fg40062.gif&hash=332430bf51870eddd43ee895d5aa70b5475143c0)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.netanimations.net%2Fdeer2.gif&hash=ea1b91a37ae97e102145529e2c2a38bc0d03531d)
~ !! ரித்திகா !! ~
Title: Re: புத்தகம்
Post by: LoLiTa on October 02, 2016, 04:32:07 PM
Sweetie sis arumayane kavidhai!!
Title: Re: புத்தகம் (சுவைத்துப் படிக்க)
Post by: JoKe GuY on October 02, 2016, 10:33:51 PM
ரொம்ப யதார்த்தமான உண்மைகளை உங்களின் கவிதை பூக்களால் தொடுத்த விதம் மிக அருமை .மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

Title: Re: புத்தகம் (சுவைத்துப் படிக்க)
Post by: Karthi on October 02, 2016, 11:04:12 PM
JO sema lines....padikumbothu end epi irrukum nu ninachite padichen  " கடைசிப் பக்கம் எழுதும் உரிமை
நம்மிடம் இல்லை
முகவுரை எழுதியவன் முடிவுரையும் எழுதுவான்
காத்திருப்போம் அதுவரை........." but end la super :) sweetie nu unga nick ethaar pola storyum sweet ahh irunthuchu ....kalakal ;)
Title: Re: புத்தகம் (சுவைத்துப் படிக்க)
Post by: SweeTie on October 03, 2016, 01:36:59 AM
ரித்திகா     லொலிடா   கார்த்தி     நன்றிகள்.    வாழ்க்கையின் யதார்த்தம் இதுவே.
Title: Re: புத்தகம் (சுவைத்துப் படிக்க)
Post by: ~DhiYa~ on October 03, 2016, 01:42:07 AM
 :P  jo sis semmaya iruku kavithai love  u sis :) :) :)   vaalvin mudivu emmala theermanika mudiyathu woow semma sis     :-[ :-[  (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F16ytgFH.gif&hash=02367aa4fd3cf386406b97bbcdc51eb54cd2bf76) (http://www.freeimagehosting.net/commercial-photography/)    (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2Ft82G3C3.gif&hash=aaae7172838ce00fd38f005c00f87d93d2ed844f) (http://www.freeimagehosting.net/commercial-photography/)
Title: Re: புத்தகம் (சுவைத்துப் படிக்க)
Post by: SweeTie on October 03, 2016, 05:24:51 PM
நன்றி  தியா..... வாழ்க்கை புத்தகத்தை  சுவைத்து  படியுங்கள்.
Title: Re: புத்தகம் (சுவைத்துப் படிக்க)
Post by: EmiNeM on October 03, 2016, 06:34:33 PM
உங்கள் புத்தகம் என் அகம் புகுந்து வாழ்வியல் குறிப்பெழுதி விட்டு சென்றது. சுவைத்து படித்தது என் நா மட்டும் அல்ல நாளமும் சேர்த்து.

மிக அழகான கவிதை தோழியே ....
சிறப்பு
Title: Re: புத்தகம் (சுவைத்துப் படிக்க)
Post by: GuruTN on October 04, 2016, 12:52:51 AM
வாழ்வின் வழிமுறைதனை புத்தகத்தின் நடை கொண்டு உருவகப்படுத்தி மிக இனிமையான கவிதை ஒன்றை எழுதி தமிழுக்கு ஓர் அழகு செய்த என் அன்பு தோழிக்கு இந்த ரசிகனின் அன்பு வாழ்த்துக்கள்... அருமை தோழி... ;) ;) ;)
Title: Re: புத்தகம் (சுவைத்துப் படிக்க)
Post by: KaBiLaN on October 04, 2016, 06:44:18 PM
நாற்பத்தி ஆறு வரிகளில்
நறுக்காய் எழுதப்பட்ட
வாழ்க்கை என்னும் புத்தகம் !...
ரசனையோடு மெல்ல
ரசித்து படித்ததில் தெரிகிறது
சுவீட்டியின் கவிதை வித்தகம் !!...
.
Title: Re: புத்தகம் (சுவைத்துப் படிக்க)
Post by: SweeTie on October 05, 2016, 04:50:29 AM
எமினெம்   உங்கள் நாளம் மிகவும் புண்யம் செய்திருக்கிறது.  நன்றிகள்.
குரு  வாழ்க்கையை  அனுபவித்து வாழவேண்டும்.  நன்றிகள்
கபிலன் நாற்பத்தாறு  வரிகளை  ரசித்து படித்த உங்கள் பொறுமைக்கு நன்றி.
Title: Re: புத்தகம் (சுவைத்துப் படிக்க)
Post by: thamilan on October 09, 2016, 04:29:07 PM
ஸ்வீட்டி
எல்லா பருவத்தையும் பற்றி சொன்ன நீங்க  கடைசியா ஒன்ன மறந்துட்டேங்களே

 முகவுரை எழுதியவன் முடிவுரையும் எழுதுவான்
முடிவுரைக்கு அப்புறம் நீங்க பேயா அலையும் பருவத்தை சொல்ல மறந்துட்டேங்களே 
Title: Re: புத்தகம் (சுவைத்துப் படிக்க)
Post by: SweeTie on October 10, 2016, 04:23:20 AM
தமிழன்  சொர்க்கத்தில் எது பேய்கள்... :D :D :D..சுவைத்து படித்தமைக்கு  நன்றி.
Title: Re: புத்தகம் (சுவைத்துப் படிக்க)
Post by: ZaRa on October 10, 2016, 03:48:53 PM
Very nice poem Sweetie.. :)