ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 117
இந்த களத்தின்இந்த நிழல் படம் Pavithra அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F117.jpg&hash=182e282aa1acb3aa06cdbd3b1eabf6d49ad5f06e)
!! அனைவருக்கும் வணக்கம் !!
என் உயிருக்கு உயிர் ஆன நண்பனே
ஒவ்வொரு முறையும் நீ முன்னேறி செல்லும் போதும்
என்னையும் உற்சாக படுத்தி கை கொடுத்து மேலே ஏற்றினாய்
நான் என் வாழ்க்கையில் விழும் பொழுதும்
என்னை கை கொடுத்து தூக்கி விட்டாய்
இயற்கையை ரசிக்க மலை உச்சத்திற்கு சென்றோம்
அதிலும் நீதான் முதல் உச்சத்திற்கு சென்றாய்
அப்பொழுது நான் கீழே விழும் நிலையில்
என்னை காப்பாற்ற நீ கை கொடுத்தாய்
உனக்கு தெரியும் அந்த விளிம்பில்
என்னை காப்பாற்ற முற்பட்டால் நீயும் கீழே விழுவாய் என்று
தெரிந்தும் உன் உயிரை துச்சமாக எண்ணாமல்
எனக்கு கை கொடுத்து மேலே ஏற்றி காப்பாற்றினாய்
உன்னை போல் ஒரு நண்பன் கிடைக்க என் வாழ்வில்
எத்தனை தவம் இருந்தாலும் கிடைக்க மாட்டான் ...
என்றும் நட்புடன்
Dj HusaiN
"நட்பின் வழி ஓர் தாய்"
பறவைகள் கூட்டம் கூடி கூச்சலிடும் நேரம்,
குளிர் வந்து நெஞ்சில் சிலிர்ப்பூட்டும் காலம்,
நாம் வந்த பாதை, மலை ஒன்றை கண்டோம்,
அதன் உச்சம் கண்டுவிட ஆவல் ஒன்று கொண்டோம்.
சாகசங்கள் செய்திடவே நாம் கொண்ட பயணத்தில்,
என் மூச்சில் ஒரு யுத்தம், நீ சறுக்கும் சமயத்தில்,
உன் உயிரை நான் காப்பேன் என்று சொல்லி ஊக்குவித்தேன்,
உனைநோக்கி என் பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தேன்.
ஞாயிறு தன் முகம் காட்டி புன்னகையும் பூத்திருக்க,
இளம்வெயிலின் கதிர்கள் பட்டு நம் மேனி வேர்த்திருக்க,
நாம் செய்த முயற்சியாலே தென்பட்டது இலக்கு ஒன்று,
மார்தட்டி கூவி சொன்னோம் வெற்றி எங்கள் தோழன் என்று.
மலையுச்சி உனை ஏற்றி என் பதற்றம் இறக்கி வைத்தேன்,
என் வெற்றி உனில் கண்டு என் பாதம் எடுத்து வைத்தேன்,
கல்லொன்று சறுக்கிவிட, உயிர் நாடி உறைந்து போக,
இறுதி நொடி ஆழம் தனை, என் உயிரில் நான் உணர்ந்தேன்.
எதிர்காலம் இருள் சூழ, கனவுகள் யாவும் கதையாக,
என் முடிவை நான் ஏற்க, எனில் நானே தயாராக,
முடிந்து விட்ட சோகக்கதை, நான் உணரும் வேளையிலே,
கரம் ஒன்று பாய்ந்து வந்து பற்றியது என் கரத்தை.
பத்துமாதம் வயிற்ச்சுமந்து, பெற்றெடுக்கும் தாய் போல,
உன் கரத்தில் எனை சுமந்து, உயிர் கொடுத்த என் தோழா,
நீயும் இனி என் தாய் தான், என்று சொல்லி போற்றிடுவேன்,
நிகரில்லா நம் நட்பை, கண்ணீர் கொண்டு வாழ்த்திடுவேன்.
-குரு-
பெண்ணுக்கு வாழ்க்கை நல்வழிகாட்டும்
பெற்றோரில் துவங்கி பாதுகாப்பு உணர்வு தரும்
கணவனுடன் பயணப்பட்டு நல் பாசத்தை பொழியும்
மகனுடன் அமைத்தால் அவள் பாக்கியசாலி...!இல்லையா
பால்யகாலத்து நட்பு இடுகாடுமட்டும்
துணைவருவது ஆணுக்கு மட்டுமே சாத்தியமா ?
இல்லை சில பெண்ணுக்கும்
வரங்களாய் அமைகிறது ...!
என் பால்யகால நண்பன்
என் கனவுகளோடு இன்று வரை
எனக்காய் பயணப்படுகிறான்
சுயநலம் துளியுமின்றி ...!
பாரம் ஏற்ற விரும்பவில்லை
கரம் கொடு போதும்விழாமல்
என்னை நான் தற்காத்துக்கொள்வேன்
உன் கண்ணால் என் கனவுகைளை
காண நாம் காதலர்கள் இல்லை...!
உன்னோடு பயணப்பட்டால்
என்றாவது ஒரு நாள்
நிச்சயம் காண்பேன் வெற்றி
என்னும் விடியலை ...!