ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 116
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F116.jpg&hash=48eb5405bdda4561e032d2d86f97a9d6db8d2cb3)
நினைக்கும் நேரமெல்லாம்
நினைவுகள் நெஞ்சை நிறைக்கிறது
வருடத்தில் பத்து மாதங்கள்
ரசிக்க புசிக்க நேரமின்றி
ஓடி ஓடி உழைச்சாச்சி
சற்றே மாறுதலுக்காக
ஓர் ஒய்வு பயணம்
பிடித்த நண்பர்களுடன் ...!
இரு புறமும் பச்சை பசேல்
என்று இயற்கை எழில் கொஞ்ச
நடுவில் நீளமாய் அழகு
சுண்டி இழுக்கும் நீரில்
காலை வெண்பனியில்
சுகமான காற்று வீச ...!
இளையராஜாவின் இன்னிசை
காதில் ஒலிக்க எனக்கு பிடித்த
தேநீர் கோப்பையோடு
இயற்கையை ரசித்து கொண்டே
கப்பலில் சுகமாய் ஒரு பயணம்
இறைவன் படைத்த இயற்கை
ஒவ்வொன்றும் ஓர் அழகு தான்
அன்று நான் ரசித்தது என்றும்
பசுமையாய் என் நினைவுகளில் ...!