FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 26, 2016, 07:46:59 PM
-
நிறைமாத கர்பிணியா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FmamOBRy.jpg&hash=3764aab0f6d325ec6a924d7f7f5885a01f0cce8f)
மூன்று வேலை எடுத்து வந்த உணவை ஐந்து வேலையாக சாப்பிடுதல் குழந்தைக்கும், தாய்க்கும் சிரமம் இல்லாத சௌகரியத்தை கொடுக்கும்.
உறங்கும் போது இடது பக்கமாக திரும்பி படுத்து உறங்க ஆரம்பித்தல் நல்ல உடல் ஓய்வுக்கு அடித்தளமாக அமையும்.
வலது பக்கமாக திரும்பி படுக்க நினைத்தால் எழுந்து பின் வல பக்கமாக திரும்பி படுக்க வேண்டும். அப்படியே இடது பக்கம் இருந்து வலது பக்கமாக திரும்பி படுக்க கூடாது.
துளசி தேன் அல்லது சாதாரண தேன் இரவில் பாலுடன் சேர்த்து வர ஆரோக்கியம் பெருகும்.
கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து மாத்திரை சாப்பிடுவதால் உடல் லேசாக கருத்து காணப்படும் , இது பிறகு மாறிவிடும் .இதனால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்பது தவறு. பிரசவ காலத்திற்கு பின் உடற் பயிற்சி செய்ய வேண்டும் அது வயிற்று தசைகளை வலுபெற செய்யும்.
கர்ப்பிணி பெண்கள் காலையில் சீக்கிரமாக சாப்பிட வேண்டும் .இதனால் இரத்தத்தில் சர்கரையின் அளவு குறையாமலிருக்கும் ,அடிக்கடி மயக்கம் வராது. குழந்தை வளர வளர வயிற்று குடல் ஒரு பக்கம் தள்ளும் இதனால் அதிகம் சாப்பிட முடியாது ,சீக்கிரமும் பசிக்காது . அந்த நேரங்களில் ஜூஸ் ,முளைகட்டிய தானியங்கள் , போன்றவற்றை பல வேலைகளாக பிரித்து சாப்பிட வேண்டும்.