FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on August 21, 2016, 12:19:33 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 114
Post by: MysteRy on August 21, 2016, 12:19:33 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 114
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Smiley அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F114.jpg&hash=3accd284827c6ae09029c1c5f61b0c3f323e8886)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 114
Post by: ReeNa on August 21, 2016, 03:46:15 AM
உன்னை  நினைக்கையில்  கண்ணீர்  சிந்துகிறேன்
கடற்  கரையில் கலங்கி  நிற்கிறேன்
உன்  நினைவில்  கரைந்தே போகிறேன்
நம் கைகள்  கோர்த்து  சேர்ந்து  போக ஏங்கி சாகிறேன்

நீ  என்  துணை  ஆக வேண்டும்  என்றே  நினைத்தேன்
கண்ணீர்  மட்டுமே துணை ஆனதே
என்  மௌன  வரிகள்  உன்  இதயத்தில்  கேட்கவில்லை
விரல்களை  கோர்த்து  செல்லும்  வரம்  எனக்கு  இல்லை

அடிமனதில்  நீ  இறங்கிவிட்டாய்
அணுவில் அணுவாய்  கலந்து  என்னை  சாகடித்தாய்
எவனோ  ஒருவனிடம் உன்  இதயத்தை  கொடுத்து விட்டாய்
உன்  காதல்  தீயில்  என்னை  எரிந்து  போக  விட்டாய்

கற்பனை  கடலில்  கப்பலாய்   மிதக்கும்  என்  இதயத்தின்  ரகளை
கரை  சேராத  என்  கனவு  கோட்டையின்  மழலை
என்  இதய  கடலில்  பொங்கி  எழுகின்ற  அலையின்  கவிதை
இன்று மறைந்து போகவும்  இல்லை  சாகவும்  இல்லை.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 114
Post by: thamilan on August 21, 2016, 05:41:50 AM

கண்கலங்கி
திமிறி நிமிரும் மனம்
காதலின் நினைவில்
கரை முட்டி கரை தாண்டத் தவித்து
கடலிலேயே கரையும் அலைகளாக
என் காதல்

பிதுங்கி வழியும்
உன்னிடம் சொல்லுவதற்கென
சேர்த்து வைத்திருந்திருந்த வார்த்தைகள்
உன்னிடம் பேசும்
ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன்
 சொல்லிவிட வேண்டுமென
சொல்லாத பொழுதுகளால்
நிரம்பி வழிகிறது
எனது காதல்


வார்த்தைகளை விட உணர்வுகள்
காதலை வெளிப்படுத்தும் என நம்பினேன்
 என்றாலும்
ஊமை கண்ட கனவும்
சொல்லாத காதலும் ஒன்றே

 இருப்பதும் இல்லாமலிருப்பதுமாய்
இருக்கிறேன்
நினைவுகளின் சுமைகளோடு
எது எதை வெல்கிறது இங்கே

தொலைந்ததாய் தவிக்கிறேன்
தொலைந்துபோய் நிற்கிறேன்
கொல்வதும் கொல்லப்படுவதுமாய்
எனக்குள்ளே ஒரு யுத்தம் 
 
உனக்காக நான்
எனக்காக நீ
என்று இறுமார்ந்திருந்தேன்
காதலை சொன்னவனின்
கரம் பற்றி நடக்கிறாய்
சொல்லாத காதலுடன்
ஒற்றையடிப் பாதையாக நிற்கிறேன் நான்

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 114
Post by: BreeZe on August 22, 2016, 07:18:56 AM


இனியவனே
உன்னை அழகானவனாக நினைத்ததற்காகவா
என்னை அழவைத்துப் பார்க்கிறாய்
சுகமான நினைவுகள் அத்தனையும்
உனக்கு சுமையாகிப் போனதா

இது காலத்தின் மாற்றமா
இல்லை
காதலில் எனக்கு ஏமாற்றமா

உன்னைப் பற்றி பலர்
ஓராயிரம் சொன்னதால்
என் அகத்தில்
பல ஆயிரம் வடுக்கள்
வடுபட்டுக் கூட நான் வாடவில்லை
உன் பார்வையின் தடங்கல் பட்டே
இன்று நான் பாதி உயிராகிப் போனேன்
மீதி உயிரும் போகும் முன்னே
என்னை ஒரு தடவை பார்த்துவிடு
                                 

நான் உயிர் வாழ்வது
உனக்காக
நீ ஒதுங்கிச் செல்வது
எதற்காக

"உன்னைப்பற்றிய நினைவுகள் அனைத்தும்
எனக்குள்ளே மரணித்துவிட்டது"
என்று சொல்லப்போகிறாயா
கொஞ்சம் பொறு
அததற்குள் நான் மரணித்து விடுகிறேன்

நான் இறந்த பின்னே
உன்னால் மறந்துபோன
நம் கடந்த கால
காதல் நினைவுகளை நினைத்துப் பார்த்து
உன் கண்ணீரால் என் கல்லறையை
கழுவி விடு

வேண்டாம்
உன் கண்ணீர் எனது கல்லறையை
காயப்படுத்திவிடும்
 
அதற்குப் பதிலாக
காதலை கழுவி விடு



பதிப்புரிமை
BreeZe
Title: என் உயிர் நீதானே!!!
Post by: BlazinG BeautY on August 22, 2016, 01:55:55 PM


அந்த அழகான நினைவுகள் ...
என்னுடன் நீ இருக்கையிலே.... :)
நாம் மூவர் நட்பில் இணைத்தோமே  ,

ஓர் உயிர் தோழன்  என் வாழ்வில் !! !!
நீ  கிடைத்தாய்   இணை பிரியா  தோழியாக !! !!

அன்பில் நனைத்தேன் ..
அன்பிக்காக பல நாள் ஏங்கியதும் உண்டு !! !!
 
பல நாள் சிந்திதேன் :)
என்ன ஆயிற்று எனக்கு ??? :-\
 
அவள் என்  அருகில் இருக்கையில் 
சந்தோசமானது என் சிறு இதயம்...

சிந்தித்தது என் மதி .
அப்போதுதான் உணர்தேன்
நான் அவளை நேசிக்கிறேன் என்று,

வான் உலகில் பறந்தேன்
என்ன இது புது உணர்வு ,
அப்பப்பா ....

என் நினைவில் உதித்தாய்
தேவதையாய் !! !!
 
நினைத்தேன்,  என் முன் நின்றாள் .
என் அழகு  தேவதை ..
என் தோழனோடு,

என்னிடம் ஒன்று சொல்லவேண்டும்
ஒரு சந்தோஷமான செய்தி ,
நினைத்தை சொல்வாளோ....
 
அப்போது
என் மனம் பட படத்தது...

சந்தோசம் ஒரு புறம்

எதிர்பார்த்தது என் விழிகள்..
துடித்தது என் இதழ்கள் ..
நான் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்ல வருவதற்குள்
 
என் தேவதை சொன்னால்
நான் உன் தோழனை நேசிக்கிறேன்,
சொல்லி  வெட்க்கி தலைகுனித்தால்
 
என் மனமோ உடைந்து போனது சுக்குநூறாய்
அப்படியே சிலையாய் நின்றேன் ..
ஒரு சொல்லும் சொல்லாமல் ஊமையானேன்   .. ..

இருவரும்  விழித்தனர்  :o
கூப்பிட்டால் அவளின்  இனிய குரலில் .. ..

நானும் சுதாரித்துக்கொண்டு  சந்தோஷப்படுகிறேன்
என்று புன்னகைத்தேன் பொய்யாக   ..
 
இருவரும் கை கோர்த்து சென்றனர்
என் உயிர் போனது என் தோழனுடன்  :-[
விழிகளில்  கண்ணீர்,
உடைந்தது என் இதயம்,
ஏமாந்தது என் மதி ,
 
கடைசிவரை என் தேவதை  வருவாள் என்று நினைத்தேனே!!
ஆனால் !  இப்போது...
என்றும் எப்போதும்  அவள்  நினைவாள் வாழ்வேன் ...
என் அழகு  தேவதை  வசிப்பாள்
என் சின்ன சிறு இதயத்தில் ....


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 114
Post by: NavYa on August 22, 2016, 05:12:29 PM
எனக்கு பிடித்ததை சொல்லும்போதெல்லாம் அவை
உனக்கும் பிடிக்குமென்று சொல்லுவாய் - இன்று
என்னுடைய காதலை சொல்லும்போது நீ
உன்னவனை பற்றி உனக்கான காதலை
சொல்லிவிட்டாயே பெண்ணே !

அந்த சில தருணங்கள்
நடைபாதையில் குத்திய முள்போல்
என் மனம் வலித்தாலும்
உன்மேல் நான் கொண்ட உண்மைக்காதல்
அந்த வலியை மறக்கடித்து விட்டதே
பெண்ணே !

என்னை பிடிக்காமல் என்னுடன்
தினம் தினம் நீ
வேதனையுடன் வாழ்வதை விட
உனக்கு பிடித்தவனுடன் உன்னை
வாழ வைத்து பார்ப்பதில்தான்
என் உண்மையான காதல் என்று
நினைக்கிறேன் பெண்ணே!

எனக்கான வேரை அவனுடன் அனுப்பிவிட்டு 
இன்று வேரற்ற மரமாய் நிற்கிறேன்
அதற்காக வருந்தவில்லையடி...
ஏன் என்று தெரியுமா ?

சுட்டெரிக்கும் வெயிலில் தன்னையிழந்து
வறண்டு போன ஆறு - என்றாவது
ஒருநாள் மழைக்காலம் வருமென்று
காத்திருப்பது போல
என்னை மட்டுமே நேசிப்பவள்
எனக்காக ஒருநாள் வருவாளென்று
காத்திருப்பேன்....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 114
Post by: DaffoDillieS on August 22, 2016, 05:56:06 PM
உனக்கே உனக்காய் ஒரு கனவு மாளிகை என் உள்ளத்தில் கட்டி வைத்தேன்!
அதில் உன்னைப் பொற்சிலை போலப் பாதுகாத்தேன்! :)
உன் ஒரு சொல்லிற்காகக் காத்துக்கிடந்தேன் யுக யுகங்களாய்!!
காத்திருந்தேன்...காத்துக்கொண்டு மட்டும் தானிருந்தேன்..!
உன்னை உன் காதலோடு வழியனுப்ப...! :(

மழைத்துளிகளின் சில் உணர்வின் சுகம் போல.....
உன்னைச் சந்தித்த முதற் சந்திப்பு என் மனதில் இனிமைகளைத் தந்து கொண்டுதானிருக்கும்!!
நாம் பழகிய நொடிகள் ஒவ்வொன்றும் கல்லில் செதுக்கிய நினைவுகளே..!!
ஆம் இன்று என் மனது வெறும் கல்தான்!! :(
உன்னை விட்டு விலகத்துனிந்த என் மனது ரத்தமும் சதையுமல்லாத கல்லாகித்தான் போனது!

காதல் எனும் கடலில் மூழ்கி உன் மனது எனும் முத்தைத் தேடிய எனக்கு, உன் நட்பு எனும் பவளம் சொந்தமானதே! :)
எதைப்பாதுகாப்பது என்ற புரியாத குழப்பத்திலேயே நாட்கள் செல்ல..!
நட்பு எனும் அழகிய பந்தத்தை அழிக்கவும் முடியாமல் மனதில் இருப்பதைச் சொல்லவும் முடியாமல் நான் தவித்த தவிப்பிற்குக் கிடைத்த பரிசு...உன்னை உன் காதலுக்கு விட்டுக்கொடுத்ததே....!! :( :(

நிலவின் மீது நான் ஆசைப் பட்டது எவ்வளவு அபத்தம்..!!
உன் மலரினும் இனிய உள்ளத்தால் இந்தக் கல் நெஞ்சினை மாற்றினாய்..!
எனக்கென்றொரு தோழியாய் உன் தோள் கொடுத்தாய்..!
என்னை மாற்றிய மலரை, என் பொக்கிசத்தை, என் மாணிக்கத்தை..என் காதல் எனும் கத்தியால் கீற மனது இடங்கொடுக்கவில்லையடி என் கண்ணே!!

காதல் ஒருவித துன்பமான இன்பம்தான்!
காதலித்துப்பார் வலிகள் புரியும் என்ற கூற்றை தினம்தினம் நான் உணர்கிறேன்.. :(
உன் மனது என் காதலால் குற்றவுணர்வுடன் துன்பப்படுவதை ஒரு போதும் என்னால் அனுமதிக்க இயலாது என் உயிரே..!!
உன் நினைவுகளின் சுகத்தில் உன் அன்பின் ஈரத்தில்.. நண்பனாய் உன் பாதுகாவலனாய் உன் அருகே இருப்பதே எனக்கிருக்கும் ஒரே ஆறுதல்!! :)

நீயில்லாத வாழ்க்கைச் சுவரில்லாச் சித்திரம் போலத்தான்..!
சுவரில்லாச் சித்திரம் வரைய நான் இனி கற்றுக்கொள்கிறேன்..!! :)
அளவேதுமில்லாமல் நேசித்த உன்னைக் காயப்படுத்த என்னால் இயலாது...
நீ பல்லாண்டு வாழவேண்டும்!!
உன் ஆசைகள் கனவுகள் நிறைவேற வேண்டும்!!
எனக்கு வலிகள் பழகிப்போனது..நான்தான் கல்லாகிப் போனேனே! :)

என் இதயம் துடிக்க மறுத்தாலும் என் மனது உன்னை வெறுக்கத் துனியாது..!! :)
தோழியே! நாட்கள் செல்லும்...வாரங்களும் மாதங்களும் செல்லலாம்,,ஆனால் என் நெஞ்சில் உன் நினைவுகள் என்றென்றும் பாதுகாப்பாய்.....!!!!!

-----நிறைவு-----
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 114
Post by: JerrY on August 23, 2016, 10:21:13 AM
ஓர பார்வையிலே
உயிர் பிடித்து போரவலே ¿?

காதின் ஓரத்திலே
பல கதைகள் சொன்னவலே ¿?

இதழ் விறித்து
இதயம் குடித்த திமிறே ¿?

முகம் மூடி
நாணம் முட்டிய உறவே ¿?

விரல்கள் இரண்டில்
விதைவிதைத்த உழவே ¿?

சிரிப்பு என்னும்
ஆயுதம் ஏந்திய மழலயே ¿?

கண்ணீர் சிந்தியே
என்னை மூழ்கும் மழையே

எனக்காய் பிறந்த
என் ஏலனமே ¿?

மன்னில் கலந்த
Plastic போல உன் நஞ்சு ¿?
மனதோடு என்னை
அழித்து வர ..

கண்ணீர் கூட
இரங்க மறுக்கிறது கண்களை விட்டு ¿?
உன் plastic நெஞ்சம்
மக்காமல் இருப்பதால் ..

விட்டு செல்ல
நினைத்து விட்டால் ¿?

உன் கால் கொலுசில்
ஒன்றை தந்து விடு ..
துக்கில் இட்டு
தொங்கி விட ¿?

எமன் தந்த வரம்
அது எனக்கு ..

இவன் ..
இரா.ஜகதீஷ் ¿?
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 114
Post by: KaBiLaN on August 23, 2016, 11:26:31 AM
கண்களால் உற்று படத்தினை பார்க்கிறேன்...
கருத்தால் கொஞ்சம் கவிதையை கோர்க்கிறேன்...
சுற்றியிருக்கும் நிலையினை நோக்கினேன்...
சோகம் கலந்த  பாடலையும் உருவாக்கினேன் ...

ஈரமே இல்லாத மண்ணுடன் உயிர்வாழ
போராடி பார்த்து தோற்று போன புற்கள்
காய்ந்து காணாமல் போயிருந்தது....

மழையே பொழியா வானுடன் பசுமைபெற
போராடி பார்த்து தோற்று போன பூமி ...
விரிசலில் விம்மி போயிருந்தது.....

கருத்த வண்ணப்பை  முதுகில் சரிந்திருக்க
கன்னிப்பெண் ஒருத்தி தோளில் சாய்ந்திருக்க
கரங்களோ அவள் கழுத்தை சுற்றிக்கொள்ள
கால்களால்  மெல்ல நடந்து ஒருவன் செல்ல...
கட்டம்போட்ட சட்டையும் கறுத்தமுடியும் கொண்ட
காளையவன் கண்களில் சோகமுடன்  பார்க்கிறான்....

காய்ந்த பூமி அவன்  கண்களையும்
விரிசல் மண் அவன் இதயத்தையும்
வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது.....

அவள் தோழியோ ? காதலியோ ? தெரியவில்லை
நட்போ காதலோ நேசம் ஒன்றுதானே...
உயிராய் பழகிய ஒருத்தி உற்றவனுடன் போனாலும்
உள்ளம்தான் தாங்குமா ? இல்லையெனில்
இன்னொருத்தியை தேடிதான் ஏங்குமா?

பழகியவள் செல்வதை கண்கள் பார்க்கிறது...
பாழாய்போன மனம் சொன்னாலும் எங்கே கேட்கிறது...
மனக்கோப்பையில் பறித்த நேசமெனும் ஆப்பிளை
மனங்குளிர புசித்த பின் மங்கையவள் செல்கிறாள்...
ஒரு இறக்கை கூட  தராமல் சிறகுகளை
விரித்து கொண்டு செல்கிறாள் அவள்..
அவன் புன்னகையினை திருடிக்கொண்டவள்
அதோ ஒருவனுடன் செல்கிறாள்..

முட்களென்று தெரிந்தும்  கனியினை தரும்
பாறையென்று தெரிந்தும் மலர்களை சொரியும்
என்றெல்லாம் எண்ணியது அவன் பிழையே.!..
பிரிந்து அவள் போகும் காயத்துக்கு மாற்று
இப்போது  வேறு இல்லையே!!

போகட்டும் போகட்டும்- அவளால் ஏற்பட்ட
மனக்காயங்களில் வழியும் குருதியால்
சிகரங்கள் எல்லாம் சிகப்பாகும்....
உணர்வுகளின் வேதனையால் மனம்
சோக கவிதைகளின் தொகுப்பாகும்...

சூரிய கதிர்கள் அவன் நெற்றியினை முத்தமிட
வறண்டு போயி காட்சி அளித்தது
நிலம் மட்டுமல்ல அவளோடு பழகிய
அவன் நினைவுகளும்தான்... .
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 114
Post by: SweeTie on August 25, 2016, 04:48:12 AM

கடை விழியில் விழுந்து கண் மடலில் தவழ்ந்து
கரு  விழியில்  நுழைந்து   என் உயிரில் கலந்தாய்     
வெந்த புண்ணில் மயிலிறகால்  மை தடவி
நொந்த இதயமதை நேர் படுத்தி  அரவணைத்து 
என் சொந்த புத்தி தன்னை மழுங்கவைத்து
காதல் எனும் போர்வையால்  போர்த்திட்டாய்

நாடு விட்டு நாடு சென்று நாலுகாசு சம்பாதிச்சு
திரும்பிவந்து திருமணத்தில்  இணைவோம்  என்றாயே
காத்திருந்து நாட்கள் புரையோடிப் போயின
காலங்கள் யாவும் வேரோடி விழுத்துவிட்டு
மாற்றான் முற்றத்தில் மலர்ந்த மல்லிகையானேன்   
வேற்றான்  உன்னை மனதில் சுமக்கிறேன்

தாலி என்னும் வேலிக்குள் தன்மயமாக்கினான்  முறைமாமன்
பெண்ணை  கட்டிக்கொடுத்தால்  போதும் என்று என் வீடடார் 
விதியை நினைத்து சிரிப்பதா அழுவதா  என்று அபலை நான்
பெண்களின் மனங்கள்  கற்பாறைகளா?  கண்ணாடித் துண்டுகளா?
 புரியாத சமுதாயமும் சம்பிரதாயங்களும் 

ஊரை விட்டு எட்டொண்ணாத் தூரத்தில் போகிறேன்
உன்னைவிட்டு, மனதில் சுமந்து மட்டும் போகிறேன்
கொண்டவன்தான்  இனி தஞ்சம் என்று போகிறேன்   
வாய் வார்த்தைகளை அமுதம் என்று நம்பினேன்
பொய் வார்த்தைகளை   உன்னுடன்  விட்டு போகிறேன்
யாருக்கு யார் என  யாரோ எழுதிவிடடான்
இனி நீ  யாரோ ....நான்  யாரோ....!!!