FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 02, 2016, 10:28:38 PM
-
முகம் பளபளப்பாக – பாட்டி வைத்தியம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fface-1.jpg&hash=869b2c092736a8b9fc6adc4b72f9430c45735811)
தேவையான பொருள்கள்:
வெந்தயக்கீரை
பாசிப்பருப்பு
சீரகம்
செய்முறை:
வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும். மேலும் முகம் பளபளப்பாக மாறும்.
குறிப்பு:
வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாளாவது ஆரஞ்சு மற்றும் கேரட் ஜீஸ் குடித்து வந்தால் முகம் பொன்னிறமாக மாறும்.
முகத்திற்கு எண்ணெய் மசாஜ்:
நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சமஅளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கடலை மாவினால் தேய்த்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதை காணலாம்.
இதே செய்முறையை ஆலிவ் எண்ணெய் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயிலும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் முகம் இளமையாக தோன்றும்.
“உடலுக்கு அழகு வலிவு; உதட்டுக்கு அழகு பொலிவு” என்ற கவிதையை உணர்ந்து முகம் பொலிவுடன் காண வெந்தயக்கீரையை உணவில் பயன்படுத்துவோம். முகப்பொலிவுடன் வாழ்வோம்.