FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 18, 2016, 11:47:37 PM
-
மசாலா பூரி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fhqq.jpg&hash=f1d46b27dbb4a08f1587ae5503dd064d3ca2a415)
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 2 ½ கப்
ஓமம் – ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
மிளகாய் தூள் – ¼ தேக்கரண்டி
மல்லித் தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – ½ தேக்கரண்டி
நீர் – ¾ கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஓமம் சேர்க்கவும்
மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்க்கவும்
மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
பின்பு மாவை பிசைய அதனுடன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
கையால் மாவை நன்கு பிசையவும்
மாவை பிசையும் போது தேவையான அளவு நீரை சேர்த்துக் கொள்ளவும்
மாவை நன்கு பிசைந்து அதனை மூடி 10 நிமிடங்கள் தனியே வைக்கவும்
பின்பு மாவை எடுத்து கைகளால் எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
பின்பு பூரிக் கட்டையின் மூலம் அனைத்து உருண்டைகளையும் பூரியாக செய்யவும்
அவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்
பின்பு கரண்டியால் அதன் மேல் பகுதியை அழுத்தும் போது பூரி பொம்மி வரும்
பொன்னிறமானதும் அதனை எடுத்து பரிமாறவும்