FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on July 17, 2016, 08:58:17 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 111
Post by: MysteRy on July 17, 2016, 08:58:17 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 111
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Stash அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F111.jpg&hash=b6f1b4e296c57e938627572b3cf679852c7eb30d)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 111
Post by: thamilan on July 17, 2016, 06:26:59 PM
விசித்திர உலகம் இது
நான் தான் எஜமான் என
மார்தட்டிக் கொள்ளும் வல்லரசுநாடுகள்
பலப் பல
ஒருத்தரை மற்றவர் அடக்கி ஆள
கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணைகள் 
ஒரு நாட்டையே சுடுகாடாக மாற்றிவிடும்
அணுகுண்டுகள்
பிறரை அளிப்பதத்திற்கும் தம்மை பாதுகாப்பத்துக்கும் என
கோடி கோடியாக செலவிடும் நாடுகள்
பலப் பல

சொர்க புரியாக செல்வம் செழித்த
நாடுகளும் பலப் பல
கேளிக்கை வினோதம்  என
பணத்தை வாரியிறைத்திடும்
செல்வந்த  நாடுகளும்
பலப் பல

இதே உலகில்
பசி பட்டினி
வறுமை பஞ்சம் என
வயிறு காய்ந்து எலும்பும் தோலுமாக
மக்கள் வாழும் நாடுகளும்
பலப்பல

மழை கானா பூமி
அவர்கள் மண்ணிலும் ஈரமில்லை
கண்ணிலும் ஈரமில்லை
பசியால் வாடிடும் அந்த நாட்டு மக்களை
திரும்பிப் பார்த்திட பணக்கார நாட்டவருக்கு
மனதினில் ஈரமில்லை

மனிதரை கொன்று குவிதித்திட
செலவு செய்யும் பணத்தில்
 வறுமை நிறைந்த நாடுகளை
செழித்திட வைக்க
ஏன் எண்ணுவதில்லை
 
கேளிக்கைகளிலும் ஆடம்பர வாழ்க்கைகளிலும்
செலவிடும் பணத்தை  மனிதரை வாழ வைக்க
 செலவு செய்வதத்திற்கு
ஏன் மனம் வருவதில்லை

இறைவனின் படைப்பில்
எல்லா உயிரினங்களுக்கும் இறைவன்
படிஅளந்திருக்கிறான்
ஒன்று இன்னொன்றுக்கு உணவாகிறது
மனிதன் கூட இறந்தால்
கழுகுகளுக்கும் புழுக்களுக்கும்
இரையாகிறான்
மனிதன் மட்டும்
இரையில்லாமல் இறப்பது
கொடுமையிலும் கொடுமை

ஒவ்வொரு பணக்கார நாடுகளும்
அள்ளி செலவழிப்பதில்
கிள்ளி கொடுத்தாலே
இந்த ஏழை நாடுகள்
பசி பிணி அற்று வாழுமே

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 111
Post by: StasH on July 18, 2016, 06:30:35 PM
பருந்தின் விருந்து

கழுகண்ணே,
க(வி)த ஒன்னு சொல்லுறே
கவனமா அத நீ கேளண்ணே!

என்ன பெத்தா ஏ ஆத்தா,
அவ நெஞ்சுல பால் வரல
ரத்தங் குடிக்க எனக்கு புடிக்கல ;
அப்பன போல பட்டினியிலே
அவளுஞ் செத்து போனா பாடையிலே !

மேதைக - சுக்கிரனுல
தண்ணி தேடி போனப்ப,
இந்த பொட்டல் காட்டுல
ரொட்டி துண்டு ஒன்னு
தேடி அலஞ்ச பேதையண்ணே !

லட்டு ரெண்டுக்கு ஒரு குபேரரு
லட்ச ரூபா உண்டியல்ல போட்டாரு ;
பிச்ச கேட்டு போன என்ன
எச்சகளையினு வசஞ்சு
எட்டி ஒதச்சாரு !

சாராயங் குடிச்சு முடிச்சு
பஞ்சணையில சொகம் தேடுற
சீமானுங்க மத்தியிலே - நானு
வாய் எச்சில முழுங்கி
வயித்த நிரப்புற சாதியண்ணே !

வாய்பேசாத கோழிக்குஞ்சு - அத 
பொசுக்கி வறுத்து தின்னாங்க;
கிறுக்கி நானு
பேசி தொலைச்சுப்புட்டே
உசுர மட்டும் விட்டு வெச்சாங்க!

பழந்தின்னு பசியாத்த
பழங்காட்டுக்கு போனா,
மேதைக - மரத்த வெட்டி
மேசைக செஞ்சுக்கிட்டாங்கனு
குருவியொன்னு பொலம்புச்சுண்ணே !

நாகரீகம் பாத்தவங்க,
விரல விட்டு - போசனத்த
கரண்டில தின்ன மறக்கல;
சதையிருந்த விரல - அப்பவே
வெட்டி தின்ன நான் மறந்துட்டே !

பசியோட நீ வந்திருக்க,
பருந்துக்கு விருந்து படைக்க
பாவிமக ஒடம்புல ஊனில்ல;
எலும்ப கொத்தி - உன்
அலக ஒடச்சுக்காதண்ணே !

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 111
Post by: SweeTie on July 18, 2016, 07:00:14 PM
விடியாத மயான இரவுகளில்
ஓயாத குண்டு வீச்சுகளில் 
ஓர் இனமே அழிந்தது அங்கு
இரத்த வாடை வெறி பிடித்த
பிணம்தின்னிக் கழுகுகளால்.   

அமைதியாய் வழி மொழிந்தன
வல்லூறுகள் கூட்டம்  இங்கு 
கடந்தன  காலத்தின் ஓட்டம்
தொடர்ந்தன கழுகுகளின் வெறியாட்டம் 
ஓடியது இரத்த ஆற்றின் பெருவெள்ளம் .

பிஞ்சுகள்  காய்கள் முதிர் கனிகள் 
அத்தனையும் போயின வெள்ளத்தில் 
தடுத்து நிறுத்த கற்களும்  இல்லை   
பிடித்து வைக்க தூண்களும் இல்லை
வல்லூறுகள்  கூட்டம்  வேடிக்கை பார்த்தது.

ராஜாளி தலைமைத்துவத்தில்
கட்டுண்டது கழுகுக் கூட்டம்
வழங்கியது சன்மானம்
இரத்தத்தை பிழிந்து  இதயத்தை
துளைத்தெடுக்கும் ஏவுகணைகள்

பிணம்தின்னிக்  கழுகுகளுக்கு கொண்டாட்டம்
பெருகியோடும் இரத்த ஆற்றில்
பெருமிதமாய் படகு விட்டு 
வெற்றிக் கொடியேற்றி  வீரவசனம் பேசி
சுற்றி உலா வந்து திளைத்துப் போயின 


வல்லூறுகள் கூட்டம் ரசித்தது
இணைந்தது  கைகோர்த்து வலம் வந்தது
ராஜாளி கிரீடத்தை தூக்கி பார்த்து
‘உயரத்தில் இருக்கிறேன்’ என்பதை
உறுதி செய்து பறைசாற்றியது   
 
காலத்தின் பிடியில் சிக்கியது சிற்றினம்
சிதறியது  சின்னாபின்னமாய் 
சொந்தங்கள் பந்தங்கள் சொல்லிக்க ஏதுமில்லை
 தபால்  தலை ஒட்டாத அஞ்சல்களாய்
அஞ்சலக  பெட்டிகளில் நிரந்தர  அகதிகள்



 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 111
Post by: சக்திராகவா on July 19, 2016, 08:07:13 PM

சுரக்காத மார்பு
சுவைக்காத நாவு
உருகி கருக
ஓர் எலும்புக்கூடு

எங்கோ ஒரு தேசம்
எதுவும் இன்றி
இரைத்தேடும் பறவைக்கு!

இங்கோ பல கூட்டம்
இறந்தோர்க்கு
சிலை வைக்க!

பருந்துக்கென்ன
இறந்தால் இரை
அகண்ட பாரில்
அளவோடு தானோ
அன்பும் அமைதியும்

எச்சில் கூட சுரக்கவில்லை
எப்படி பட்ட காட்சி இது
வறண்டது வாழ்வாதாரம் - கருணை
இருண்டது இது ஆதாரம்

கொடிக்கட்டி பறக்கும் நாடுகளே
எங்கே உமது கொடுக்கும் குணம்
கொடுத்துவிட்டீரோ??

சக்தி ராகவா
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 111
Post by: JerrY on July 20, 2016, 10:50:21 AM
பசியெனும் இருகை சோறு எடுத்து ..
நம் கையால் அதை அவன் வாயில் திணித்து ..
வறுமையெனும் பரிசு எடுத்து அதை
அவன் வாயில் சென்று நம் கொடுத்து ..

நம் மட்டும் உயர் ரக உணவு எடுத்து ''
உலகம் இதுத்தான் சிரித்துக்கொண்டே சித்தாந்தம் பேசுகிறோம் ..

சதை ஒட்டிய உடம்பு உதிர்த்த தேகம்
இமை திறவா கண்கள் ..
பிணம் தானோ என்று கண்கலங்க கடைக்கைல
மெல்லியதாய் ஒரு குரல் பசி பசி ??

தலைக்குனிந்து பார்த்தான் என்னுள் ஒருவன்
மூன்று வேலை உணவோடு , என் வயிறு தினம் நிரம்ப
பிணத்தின் சாயலோடு என் கண்முன்
கையேந்தி நிற்கும் என் சக மனிதன் ..

குனிந்த தலை , தலை நிமிர வெட்கி
குனிந்தே நின்றது ....

பசியால் ஒருவன் இறந்தால் , அந்த பாவம்
உலகின் ஒவொருவரையும் சாரும் ..

தனி ஒரு மனிதனுக்கு உணவு இளைஞனில்
இந்த உலகினை அழித்திடுவோம் ..

இவன் ..

இரா.ஜெகதீஷ் ..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 111
Post by: EmiNeM on July 20, 2016, 05:07:14 PM
வறுமை தீண்டிய தேகத்தை
தீண்ட நினைக்குது
ஒரு கழுகு

விடுவாளா அதன் தாய்...
தன் ஒட்டிய மார்பில்
சுரக்கும் இரு சொட்டு
பாலெனினும்
அதை தன் சேய்க்கு
ஊட்டி பசியாற வைப்பாள்

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
எனும் அவ்வையின் கூற்று
படித்தால் புரியாது
உணர்ந்தால் மட்டுமே புரியும்

நாம் என்ன  செய்கிறோம்
ஒரு குழந்தை பசி என்று
கை நீட்டினால் விலகி செல்கிறோம்

யாருக்கான வாழ்க்கை இது ...?
நான் மட்டுமே வாழ வேண்டும் என்ற சுயநலமா?
என் குடும்பம் மட்டுமே போதும் என்ற பிற்போக்குத்தனமா?

எளியவர்களை விழுங்கி கொண்டிருக்கும்
வலியவர்கள் வாழும்
உலகமிது..
என்றேனும் ஒரு நாள் ..
வலியவனும் எளியவன் ஆவான்
என்பதை மறந்து...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 111
Post by: BreeZe on July 22, 2016, 06:43:43 AM


இதயத்தை வருடும் ஒரு
இயற்கையின் அவலத்தை
படம் போட்டுக் காட்டும்  படம் இது


உணவில்லாமல் உடையில்லாமல்
நோய்தீர்க்க மருந்தில்லாமல்
அழிகிறது ஒரு இனம்
எண்ணெய் இருந்தால்  ஓடி போகும்
தங்கம் இருந்தால் தேடித் போகும்
வல்லரசு நாடுகளே
மனித இனம் சுடுகாடாக மாறுவதை தடுக்க
போகாதது ஏனோ 

வல்லூறு கூட
இந்த சிறுவனின் நிலை கண்டு
பரிதாபப்பட்டு பார்த்துக் கொண்டிருக்கிறது
மனிதநேயம் ஈகை குணம் என
வாய் கிழிய பேசிடும் மானிடரே
மெளனமாக இருப்பதும் ஏனோ

அழிவுப் பாதைக்கு அஸ்திவாரம் போடும்
வளர்ந்த நாடுகளே
ஆக்கப் பாதைக்கும் வழியிடுங்களேன்

இதயம் இருப்போரே
இதயத்தில் இரக்கம் இருந்தால்
ஈரம் இதயத்தில் இருந்தால்
சிந்தியுங்கள்
ஒரு குழந்தை பட்டினியால் மரணிப்பது
மனித குலத்துக்கே அவமானம்

நம் ஊரிலும் எத்தனையோ குழந்தைகள்
உண்ண உணவின்றி
உடுக்க உடையின்றி
சேரிகளில் பாதைரோரங்களிலும்
குப்பை தொட்டில்கள் அவர்களுக்கு
உணவிடும் உணவகம்

எத்தனையோ விதத்தில் உணவுகளை
வீண்விரயம் பண்ணுகிறோம்
தேவைக்கு அதிகமானதை
இல்லாத வறியவர்களுக்கு கொடுத்தால்
மனிதகுலம்  வாழும் வாழ்த்தும்

பதிப்புரிமை
BreeZe