FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 15, 2016, 09:14:22 PM
-
பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்
வெற்றிலையைப் பிழிந்து சாறு எடுத்து தேன் கலந்து அருந்தி வர தீராத இருமல் குணமாகும்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் வேப்பங்கொழுந்தை தின்று வர வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும்.
இரண்டு கரண்டி கறிவேப்பிலை சாற்றை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.
பப்பாளித் பழத் துண்டை பல் வலி உள்ள இடத்தில் அடக்கி வைக்க பல் வலி தீரும்.
பல் சொத்தையான இடத்தில் கிராம்பை நசுக்கி வைத்து, வாயில் வரும் உமிழ்நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தால் பல் சொத்தை காணாமல் போகும்.
வாந்தி எடுத்தவர்களுக்கு, வெறும் சீரகத்தை வறுத்து அதில் நீர் ஊற்றி கொதிக்க வைத்த சீரக கஷாயத்தைக் கொடுக்க உடனடியாக வாந்தி நிற்கும்