FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 13, 2016, 09:09:52 PM

Title: ஒரே மாதத்தில் மெலிந்த முடியை அடர்த்தியாக்க வேண்டுமா? ...
Post by: MysteRy on July 13, 2016, 09:09:52 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FTFphLa1.png&hash=28c3a0eaf1788fb65ff170c4d192431377e1b95b)


தற்போது தலைமுடி பிரச்சனை என்பது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒன்றாக உள்ளது. தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணிகள் உள்ளன. அதில் அளவுக்கு அதிகமாக உடல் மற்றும் மனம் அழுத்தத்திற்குள்ளாவது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், அலர்ஜி, மோசமான தலைமுடிப் பராமரிப்பு மற்றும் தவறான தலைமுடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

முதல் முறை
வெண்ணெய் பழம்/அவகேடோ பாதி அவகேடோ பழத்தை எடுத்து, அதில் உள்ள சதைப்பகுதியை தனியாக ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, பின் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு அலச வேண்டும்.
மற்றொரு முறை
இல்லாவிட்டால், ஒரு அவகேடோ பழத்தின் சதைப்பகுதியை எடுத்து, அத்துடன் 1 வாழைப்பழத்தை மசித்து சேர்த்து, அதோடு 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
இரண்டாம் முறை
முட்டை
முட்டை கூட தலைமுடி அடர்த்தியாக வளர உதவும். அதற்கு தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப 1-2 முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து, தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை மேற்கொள்ள வேண்டும்.
மற்றொரு முறை
இல்லையெனில், ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, அதோடு 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி நன்கு மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால், ஒரு மாதத்தில் முடி அடர்த்தியாகி இருப்பதைக் காணலாம்.
மூன்றாம் முறை
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேடற்றி, அந்த எண்ணெயைக் கொண்டு தலையை நன்கு மசாஜ் செய்து, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். வேண்டுமானால் இந்த இரவு முழுவதும் நன்கு ஊற வைத்து, மறுநாள் காலையில் கூட அலசலாம்.
மூன்றாம் முறை
மற்றொரு முறை இல்லாவிட்டால், ஆலிவ் ஆயிலுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.