FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on July 12, 2016, 10:52:11 PM
-
திருமணத்திற்கு பின் காதலித்தால் இப்படித்தான் இருக்கும்...
*காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பிஒரு காஃபி கொடுத்தால் போதும், இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.
* பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன்,என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!
*பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாளென்றால், இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!
* சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன், ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?
* மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,இதோ மின்னல் தென்படுகிறது,..அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!
* என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை என்றேன்,என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.
* சொல்வது பொய் எனத் தெரிந்தும் நிதானமாகக் கேட்பாள்,அவளை நேசிக்க வேறு காரணம் தேடுவது வீண் வேலை.!!
-
இதுல கவிதை தான் போடணும் கட்டுரைக்கு வேற இடம் இருக்கு
-
:oஓஹ் கட்டுரை மாதிரி இருக்க :-\ :'(
-
அருமையாக
கூறியுள்ளீர்கள் அருமை அண்ணனே ....!!! :) :) :) :)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-gv4lP5eRs84%2FT7mS9j5OqOI%2FAAAAAAAALNs%2FEEzjay_G7X4%2Fs1600%2F9357cc9f.gif&hash=feafe8a3d3db0168312d42b9a69e48aa3c0c7794)