FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 12, 2016, 07:42:57 PM

Title: ~ ஆஸ்துமா மார்ச்சளி குணப்படும்பாகற்காய் சாறு ~
Post by: MysteRy on July 12, 2016, 07:42:57 PM
ஆஸ்துமா மார்ச்சளி குணப்படும்பாகற்காய் சாறு

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FoYgq6Pa.jpg&hash=029487e72abfae9cdca59c30b33f6569a4e0aac8)

பாகற்காய் மூன்று தேக்கரண்டி பாகல் இலைச்சாறுடன் ஒர் கிளாஸ் மோர்கலந்து பருகிட மூலம் குணமாகும். ஒரு கோப்பை பாகல் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் அருந்த இரத்த கோளாறுகள் நீங்கும். குடுத்து குடித்து ஈரலைப் பாழாக்கிக் கொண்டவர்கள் தினமும் காலையில் 30 மி.லி அளவுபாகல் சாற்றை மோருடன் கலந்து குடித்தால் நல்ல பயன் கிடைக்கும். ஒரு தேக்கரண்டி பாகல் வேர்களை பசைபோல் அரைத்து அத்துடன் சம அளவு தேன் அல்லது அதே அளவு துளசிச்சாறு கலந்து இரவு தோறும் அருந்த ஆஸ்துமா,மார்ச்சளி குணப்படும். பாகற்காய் ருசியில் கசக்கும்

என்றாலும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.இதனை வறுக்கலாம்,அவிக்கலாம்,ஸ்ஃப் செய்யலாம்.குழம்பு,பொரியல்,செய்யலாம்.வற்றல் செய்து சேமித்து வைக்க ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். ஈரபதம்-92.4 கிராம் புரதம்-1.6 கிராம் கொழுப்பு -0.2 கிராம் இழைப்பாண்டம்-0.8 கிராம் தாதுக்கள்-0.8 கிராம் கார்போஹைட்ரேட்கள்-4.2 கிராம் கால்சியம்- 20 மி.கி மக்ளீசியம்- 17 மி.கி ஆக்ஸாலிக் அமிலம்- 40 மி.கி பாஸ்பரஸ்- 70 மி.கிஅயம்- 0.4 மி.கி சோடியம்- 17.8 மி.கி பொட்டாசியம்- 152 மி.கி செம்பு- 0.18 மி.கி சல்ஃபர்- 15 மி.கி குளோரின்- 8 மி.கி வைட்டமின் ஏ- 210 ஐ.யூ தயமின்- 0.07 மி.கி ரைபோஃப்ளேவின்- 0.09 மி.கி நியாஸின்- 0.5 மி.கி வைட்டமின் சி- 88 மி.கி 100கிராமில் 5 கலோரி உள்ளது. பாகற்காய் குளிர்ச்சியைத் தரும்.சிறந்த மலமிளிக்கி.பசியைத் தூண்டும்.பித்த உபாதைகள் நீக்கும். நீரழிவுக்கார்ர்களின் உணவில் பாகற்காய் அவசியம் இடம் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கும். பாகற்காய்யில் தாவர இன்சுலின(plant insulin)இருப்பதை பிரிட்டிஷ் மருத்துவ குழு ஆரிய்ச்சி செய்து தெரிவிக்கிறது. நீரழிவு நோயாளிகள் தினம் சாப்பிட்டு வந்தால்,வைட்டமின் ஏ,பி,பி2,சி மற்றும் அயச்சத்துக்ளை அவர்கள் பெறமுடியும். தொடர்த்து பயன்படுத்திவர உயர் இரத்த அழுத்தம்,கண் உபாதைகள்,நரம்புவீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.