ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 110
இந்த களத்தின்இந்த நிழல் படம் Paul Walker ( Dong Lee ) அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F110.jpg&hash=96343cb5e658de9aa91af222351d24efa2a5c9c0)
மாவிலை தோரணம்
வண்ண வண்ண அலங்காரம்
கொண்டு மண்டபம் நிரம்பி வழிய
ஓமகுண்டத்தின் முன் அய்யர் மந்திரம் ஓத
நட்பும் சுற்றமும் ஆவலோடு காத்திருக்க
அடடா கண் கொள்ளா காட்சி ...!
பட்டு ஜரிகை படபடக்க
வேஷ்டி சட்டையில்
மாலையும் கழுத்துமாய்
மாப்பிள்ளை கம்பீரமாய்
நடந்து வர பெண்களுக்கிடையே
கிண்டலும் கேலியுமாய்
சலசலப்பில் வெட்கம்
மேலோங்க அசட்டு சிரிப்பில்
மாப்பிள்ளை மணமேடை
வந்து அமர்ந்தது
அடடா கண்கொள்ளா காட்சி ...!
கூரைப்பட்டு மினுமினுக்க
உச்சி முதல் பாதம் வரை
பொன்னால் பூட்டி
சிறு ஒப்பனையில் முகம் மிளிர
அதையும் தாண்டி வெட்கத்தில்
முகம் சிவக்க மாலை சூடி
மணப்பெண் மனமேடை நோக்கி வர
வந்தவர் எல்லாம் இது வல்லவோ
பொருத்தம் என ஒருசேர முணுமுணுக்க
மணமகன் அருகில் வந்தமர்த்தால் மணப்பெண்
அடடா கண்கொள்ளா காட்சி ..!
இதோ நெருங்கி விட்டது முகுர்த்த நேரம்
அய்யர் கொடுத்த மாங்கல்ய தட்டை வாங்கி
பெரியவர்களின் ஆசி பெற்று அனைவருக்கும்
அர்ச்சதை வழங்கபட்டு கெட்டி கெட்டி மேளம்
வாத்தியம் முழங்க நானும் அர்ச்சதையை
தூவ முற்படுகையில் கை தட்டி பரிசளித்து
என்னை எழுப்பியவர் மணமகன் (என் paul அண்ணன் )
நான் கண்ட அனைத்தும் கனவா ?
நான் கண்ட கனவேதும் அறிய
வாய்ப்புயில்லாமல், நேற்று
என்னிடம் கூறியது போல
இன்று பொண்ணு ரொம்ப சிவப்பாம்
என் அம்மா சொன்னாங்க மைனா
வெள்ளந்தியாய் சொல்லி
கொண்டிருந்தார் என் அண்ணா
என் கனவு விரைவில் நினைவாக
கடவுளிடம் வேண்டிக்கொண்டேன் ....!