நீ
அணிவித்த கொலுசுகளுக்கு
சொல்லிவை
நான் மட்டுமே
உச்சரிக்கும்
உன் பெயரை
ஊருக்கே உரக்க கேட்கும் படி
உச்சரிக்க வேண்டாம்
என!!!
*
திருமணத்திற்கு
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெறும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!!
உன் வருகை
இல்லாத நாட்களில்
அழுது ஆர்பாட்டம் செய்யும்
நம் காதல் குழந்தையை
எப்படிதான் சமாளிப்பதோ!!!!
*
உன்
பார்வைகள் தான்
கற்றுக் கொடுத்தன
என்
இமைகளுக்கும்
வெட்கப்படத்
தெரியும்
என்று!!!
நீ
முத்தம் கேட்டு
கொடுக்கவில்லை
என்றால்
திட்டி தீர்த்து விடுகின்றன
என் இதழ்கள்!!!
*
சாகாவரம்
பெற்று
வளர்ந்துக் கொண்டே
இருக்கிறது
நம்
முதல் முத்தம்!!!
*
முத்தத்தில்
கூட
சோர்ந்து போகாத
நம்
இதழ்களை
சோர்வடைய செய்கிறது
ஊடல்
உடைந்து
எழத்
துடிக்கும்
முதல் வார்த்தை!!!
*
உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்
*
*
திருமணத்திற்கு
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெறும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!!
*
உன் வருகை
இல்லாத நாட்களில்
அழுது ஆர்பாட்டம் செய்யும்
நம் காதல் குழந்தையை
எப்படிதான் சமாளிப்பதோ!!!
*
நீ
முத்தம் கேட்டு
கொடுக்கவில்லை
என்றதும்
திட்டி தீர்த்து விடுகின்றன
என் இதழ்கள்!!!
*
முத்தத்தில்
கூட
சோர்ந்து போகாத
நம்
இதழ்களை
சோர்வடைய செய்கிறது
ஊடல்
உடைந்து
எழுத்
துடிக்கும்
முதல் வார்த்தை!!!
*
உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்!!!
*
நம் காதல்
பிறந்த நாளை
கொண்டாட
உனக்காக
பரிசுப்பொருளை
தேடித் தேடி
வாங்கி வர
நீயோ
தேடல்களே
இல்லாமல்
எடுத்து
வருகிறாய்
உன் இதழ்களில்!
*
தினமும்
கனவில்
பார்த்துக் கொள்வோம்
என்ற
நம்பிகையில் தான்
முடிவடைகிறது
நம்
சந்திப்புகள்!!
*
நாம்
சந்தித்த
இடங்கள்
எல்லாம்
பூஞ்சோலையாய்
பூத்துக் குலுங்குகின்றன
நம்
முத்த சாரல்களில்...
*
முரட்டுத் தனமான
அணைப்புகளையும்
மென்மையான
முத்தங்களையும்
ஒரு சேர
வைத்திருக்கும்
என்
காதல் ஹிட்லர்
நீ!!!
*
முத்தங்களின்
ஒத்திகை
அழகாய்
நடந்தேறியது
நம்
தலையணை
சண்டையில்!!
*
உன்
முத்தங்களின்
ஈரங்களும்
அழகாய்
வரைகிறது
நம் காதலை
*
எனக்காக
கவிதை
எழுதிக்கொடு
என்று கேட்டதும்
அழகிய
கவிதைகளை
எழுதி விட்டு
சென்றன
உன் உதடுகள்
*
கடற்கரையில்
நம்மை
பார்த்ததும்
ஆசையாய்
பாதங்களை
நனைக்க வந்த
அலைகளையும்
வெட்கம் கொள்ள செய்தன
நம் இதழ்கள்!
*
தொடக்கமும்
முடிவும்
அறியா
நெடுந்தூரப் பயணம்
காதல்
*
தூக்கத்தில்
நான் எப்போதும்
சிரித்துக் கொண்டிருப்பதாக
தோழிகள்
கேலி செய்கிறார்கள்
அவர்களுக்கு
எங்கேத் தெரியும்
நான் உன்னோடுதான்
சிரித்துக் கொண்டிருக்கிறேன்
என்பது
*
எத்தனை
முறை
சுவைத்தாலும்
திகட்டாத
தித்திப்பு
உன்
முத்தங்கள்
*
கோடையில்
எல்லோரும்
வாடிக் கொண்டிருக்க
நான்
மட்டும்
குளிர்ந்துக் கொண்டிருந்தேன்
உன்
முத்த மழையில்
*
தனித் தனித்
செடிகளாய்
வளர்நத
நம்மில்
ஒற்றை
மலராய்
காதல்
*
நம்
விழிகள்
எழுதிய
முதல்
கவிதை
காதல்
*
உன்
கெஞ்சல்களில்
தோற்று விடுகின்றன
என்
கொஞ்சல்கள்