FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 05, 2016, 08:13:26 PM
-
அரிசி கஞ்சி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2F%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AE%25BF-%25E0%25AE%2595%25E0%25AE%259E%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF-rice-kanji-Samayal-Tips-Tamil-Samayal-in-tamil.jpg&hash=ad07c4be398a6bbede86d4e18e3c4f5d62fbeaf7)
அரிசி குருணை – 250 கிராம்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 3 பற்கள்
தேங்காய் பால் – 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை :
* அரிசி குருணையை நன்றாக கழுவி வைக்கவும்.
* குக்கரில் 750 மில்லி தண்ணீரை விடவும்.
* அதில் அரிசி குருணை, வெந்தயம், பூண்டு மற்றும் உப்பை போட்டு குக்கரை மூடி வைத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும்.
* முதல் விசில் வந்தவுடன் அடுப்பின் வேகத்தை குறைத்து 7 – 8 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைக்கவும்.
* பின்னர் பிரஷர் அடங்கிய பின் குக்கர் மூடியை திறந்து தேங்காய் பாலை விட்டு 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.
* இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல், கறிவேப்பிலை துவையல் சுவையாக இருக்கும்.